பக்கம் எண் :

283

1. வடுவடு நுண்ணயிர
 

51.துளங்குநீர் வியலகங் கலங்கக் கால்பொர
விளங்கிரும் புணரி யுருமென முழங்கும்
கடல்சேர் கானற் குடபுல முன்னிக்
கூவற் றுழந்த தடந்தா ணாரை
 
5குவியிணர் ஞாழன் மாச்சினைச் சேக்கும்
வண்டிறை கொண்ட தண்கடற் பரப்பின்
அடும்பம லடைகரை யலவ னாடிய
வடுவடு நுண்ணயி ரூதை யுஞற்றும்
தூவிரும் போந்தைப் பொழிலணிப் பொலிதந்
 
10தியலின ளொல்கின ளாடு மடமகள்
வெறியுறு நுடக்கம் போலத் தோன்றிப்
பெருமலை வயின்வயின் விலங்கு மருமணி
அரவழங்கும் பெருந்தெய்வத்து
வளைநரலும் பனிப்பௌவத்துக்
 
15குணகுட கடலோ டாயிடை மணந்த
பந்த ரந்தரம் வேய்ந்து
வன்பிணி யவிழ்ந்த கண்போ னெய்தல்
நனையுறு நறவி
1னாகுடன் கமழச்
சுடர்நுதன் மடநோக்கின்
 
20வாணகை யிலங்கெயிற்
றமிழ்துபொதி துவர்வா யசைநடை விறலியர்
பாடல் சான்று நீடினை யுறைதலின்
வெள்வே லண்ணன் மெல்லியன் போன்மென
உள்ளுவர் கொல்லோநின் னுணரா தோரே
 
25மழைதவழும் பெருங்குன்றத்துச்
செயிருடைய வரவெறிந்து
கடுஞ்சினத்த மிடறபுக்கும்
பெருஞ்சினப்புய லேறனையை
தாங்குநர்,
தடக்கை யானைத் தொடிக்கோடு துமிக்கும்
 
30எஃகுடை வலத்தர்நின் படைவழி வாழ்நர்
 


1. நாடுடன் கமழும் - பாட வேறுபாடு