1. வடுவடு நுண்ணயிர் |
51. | துளங்குநீர் வியலகங் கலங்கக் கால்பொர விளங்கிரும் புணரி யுருமென முழங்கும் கடல்சேர் கானற் குடபுல முன்னிக் கூவற் றுழந்த தடந்தா ணாரை |
5 | குவியிணர் ஞாழன் மாச்சினைச் சேக்கும் வண்டிறை கொண்ட தண்கடற் பரப்பின் அடும்பம லடைகரை யலவ னாடிய வடுவடு நுண்ணயி ரூதை யுஞற்றும் தூவிரும் போந்தைப் பொழிலணிப் பொலிதந் |
10 | தியலின ளொல்கின ளாடு மடமகள் வெறியுறு நுடக்கம் போலத் தோன்றிப் பெருமலை வயின்வயின் விலங்கு மருமணி அரவழங்கும் பெருந்தெய்வத்து வளைநரலும் பனிப்பௌவத்துக் |
15 | குணகுட கடலோ டாயிடை மணந்த பந்த ரந்தரம் வேய்ந்து வன்பிணி யவிழ்ந்த கண்போ னெய்தல் நனையுறு நறவி 1னாகுடன் கமழச் சுடர்நுதன் மடநோக்கின் |
20 | வாணகை யிலங்கெயிற் றமிழ்துபொதி துவர்வா யசைநடை விறலியர் பாடல் சான்று நீடினை யுறைதலின் வெள்வே லண்ணன் மெல்லியன் போன்மென உள்ளுவர் கொல்லோநின் னுணரா தோரே |
25 | மழைதவழும் பெருங்குன்றத்துச் செயிருடைய வரவெறிந்து கடுஞ்சினத்த மிடறபுக்கும் பெருஞ்சினப்புய லேறனையை தாங்குநர், தடக்கை யானைத் தொடிக்கோடு துமிக்கும் |
30 | எஃகுடை வலத்தர்நின் படைவழி வாழ்நர் |
1. நாடுடன் கமழும் - பாட வேறுபாடு |