பக்கம் எண் :

301

செம்பொறிச் சிலம்பொ டணித்தழை தூங்கும்
எந்திரத் தகைப்பி னம்புடை வாயிற்
கோள்வன் முதலைய குண்டுகண் ணகழி
வானுற வோங்கிய வளைந்துசெய் புரிசை
 
10ஒன்னாத் தெவ்வர் முனைகெட விலங்கி
நின்னிற் றந்த மன்னெயி வல்லது
1
முன்னும் பின்னுநின் முன்னோ ரோம்பிய
எயின்முகப் படுத்தல் யாவது வளையினும்
பிறிதாறு சென்மதி சினங்கெழு குரிசில்
 
15எழூஉப்புறந் தரீஇப் பொன்பிணிப் பலகை
குழூஉநிலைப் புதவிற் கதவுமெய் காணின்
தேம்பாய் கடாத்தொடு காழ்கை நீவி
வேங்கை வென்ற பொறிகிளர் புகர்நுதல்
ஏந்துகை சுருட்டித் தோட்டி நீவி
 
20மேம்படு வெல்கொடி நுடங்கத்
தாங்க லாகா வாங்குநின் களிறே.
 

துறை : செந்துறைப்பாடாண் பாட்டு.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர் : குண்டுகண் ணகழி.

1 - 5. வென்றுகலம் ......................... செல்குவையாயின்.

உரை :  வென்று கலம் தரீஇயர் - பகைவரைப் பொருது வென்று
அவருடைய செல்வங் களைக் கொணர்தற்காக; வேண்டுபுலத்து - அச்
செயற்கு வேண்டும் இடத்தே ; இறுத்து - சென்று தங்குதலால் ; அவர்
-  அப்  பகைவர்தாம்  வெல்லுதலருமை  நினைந்து ; எம் நல்கினை
யாகுமதி  என்று - யாம் இறுக்கும் இக் கலங்களை யேற்றுக் கொண்டு
எம்மை  அருளியோனாகுக  என்று  பணிந்த  மொழியாற்  சொல்லி ;
வாடா    யாணர்    நாடு   திறை   கொடுப்ப   -  குன்றாத  புது
வருவாயினையுடைய  தம்  நாட்டிடத்தேயுள்ள  அரிய  செல்வமாகிய
கலங்களைத்   திறையாகச்   செலுத்த   ;   அருளி   -   அவற்றை
யேற்குமுகத்தால்  அவர்கட்கும்  நட்பருளி  ; கல்பிறங்கு வைப்பின் -
மலைகள்  உயர்ந்த  நாட்டகத்தே  ;  கடறு  அரை  யாத்த  - காடு
சூழ்ந்துள்ள ; நின் தொல்புகழ் மூதூர்ச் செல்குவையாயின்
    


1. அல்லதூஉம் என்றும் பாடம்