கபிலர் பாடினார் பத்துப்பாட்டு. அவைதாம், புலாஅம் பாசறை, வரைபோலிஞ்சி, அருவி யாம்பல், உரைசால் வேள்வி, நாண்மகிழிருக்கை, புதல்சூழ் பறவை ; வெண்போழ்க் கண்ணி, ஏம வாழ்க்கை, மண்கெழு ஞாலம், பறைக்குர லருவி ; இவை பாட்டின் பதிகம். பாடிப்பெற்ற பரிசில் ; சிறுபுறமென நூறாயிரங் காணங் கொடுத்து நன்றா வென்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற்கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் அக் கோ செல்வக் கடுங்கோ வாழியாதன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான். |