பக்கம் எண் :

359

 

அம்பண வளவை விரிந்துறை போக்கிய
ஆர்பத நல்கு மென்ப கறுத்தோர்
 
10உறுமுரண் டாங்கிய தாரருந் தகைப்பின்
நாண்மழைக் குழூஉச்சிமை கடுக்குந் தோன்றற்
றோன்மிசைத் தெழுதரும் விருந்திலங் கெஃகிற்
றார்புரிந் தன்ன வாளுடை விழவிற்
போர்படு மள்ளர் போந்தொடு தொடுத்த
 
15கடவுள் வாகைத் துய்வீ யேய்ப்பப்
பூத்த முல்லை புதல்சூழ் பறவை
கடத்திடைப் பிடவின் றொடைக்குலைச் சேக்கும்
வான்பளிங்கு விரைஇய செம்பரன் முரம்பின்
இலங்குகதிர்த் திருமணி பெறூஉம்
 
20அகன்கண் வைப்பி னாடுகிழ வோனே.
 

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர் : புதல் சூழ் பறவை.

1 - 3. வாங்கு ........................ இரவல.

உரை : வாங்குஇருமருப்பின் - வளைந்த  கரியதண்டினையுடைய ;
தீந்தொடை  பழுனிய  -  இனிய இசைக்குரிய நரம்புகளால் நிறைந்த ;
இடன்   உடைப்   பேரியாழ்   -  இசையின்பத்துக்கு  இடமாகவுள்ள
பேரியாழிடத்தே  ;  பாலை  பண்ணி - பாலைப் பண்ணை யெழுப்பி ;
படர்ந்தனை  செல்லும்  -  சேரனை நினைந்து செல்லும் ; முது வாய்
இரவல - முதிய வாய்மையையுடைய இரவலனே எ - று.

பேரியாழின்     தண்டு   நீண்டு  வளைந்திருத்தலின், “வாங்கிரு
மருப்பின்”  என்றார்.  ஆயிரம் நரம்புகளை எல்லையாக வுடையதாய்
இசையாற்   பெறலாகும்  பேரின்பத்துக்கு  இடமாக  இருத்தல்  பற்றி
“இடனுடைப்   பேரியாழ்”  என்றும்,  இன்னிசை  பயக்கும்   நரப்புத்
தொடையால்   குறைபாடின்மை   தோன்ற,   “தீந்தொடை  பழுனிய”
என்றும்  கூறினார்.  இனி,  “இடனுடைப்  பேரியாழ் பாலை பண்ணி”
யென்று   ஈண்டு   இவர்  கூறியதுபோலவே,  ஏனைச்  சான்றோரும்,
“தொடைபடு   பேரியாழ்  பாலை  பண்ணி”  (பதிற்.  46)  யென்றும்,
“விரல்கவர்  பேரியாழ்  பாலை பண்ணி”(பதிற். 57) என்றும் கூறுவதை
நோக்கின்,   இப்பேரியாழ்   பாலைப்   பண்ணுக்கு   ஏற்ற   இசைக்
கருவியாதல் துணியப்படும். “படர்ந்தனை யென்றது வினையெச்சமுற்று
; படர்தல் - நினைவு” என்பது பழைய வுரை. “முதுவாயிரவல”