பக்கம் எண் :

364

 

டுருவில் பேய்மகள் கவலை கவற்ற
நாடுட னடுங்கப் பல்செருக் கொன்று
நாறிணர்க் கொன்றை வெண்போழ்க் கண்ணியர்
வாண்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர்
 
15நெறிபடு மருப்பி னிருங்கண் மூரியொடு
வளைதலை மாத்த தாழ்கரும் பாசவர்
எஃகா டூனங் கடுப்பமெய் சிதைந்து
சாந்தெழின் மறைத்த சான்றோர் பெருமகன்
மலர்ந்த காந்தள் மாறா தூதிய
 
20கடும்பறைத் தும்பி சூர்நசைத் தாஅய்ப்
பறைபண் ணழியும் பாடுசா னெடுவரைக்
கல்லுயர் நேரிப் பொருநன்
செல்வக் கோமாற் பாடினை செலினே.
 

துறை : பாணாற்றுப் படை.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர் : வெண்போழ்க் கண்ணி.

5 - 12. கொல்படை.....................கொன்று.

உரை : கொல்  படை  தெரிய - ஏந்திய  படை யழிந்தவர் வேறு
படைகளை  ஆராய  ; வெல் கொடி நுடங்க - வென்றி குறித்துயர்த்த
கொடியானது  விண்ணிலே யசைய ; வயங்கு கதிர் வயிரொடு வலம்புரி
ஆர்ப்ப   -   ஒளிக்கதிர்   வீசும்   மணி  பதித்த  கொம்பென்னும்
வாச்சியத்தோடு  வலம்புரிச்சங்குகள் முழங்க ; பல்களிற்று இனநிரை -
பலவாகிய களிறுகளின் கூட்டமான வரிசை ; புலம் பெயர்ந்து இயல்வர
-  தத்தமக்குரிய  இடத்தினின்றும்  பெயர்ந்து  போர்  நிகழும் இடம்
நோக்கித்  திரிய  ;  அமர்க்கண்  அமைந்த  - போரிடுதற் கமைந்த ;
நிணம்  அவிர்  பரப்பில் - பொருது வீழ்ந்த மக்கள் மாக்களினுடைய
நிணம்  விளங்கும்  பரந்த களத்திலே ; குழூஉ - கூட்டமாகிய ; சிறை
யெருவை  -  பெரிய  சிறகுகளை யுடைய பருந்துகள் ; குருதி ஆர -
பிணங்களின்  குருதியை  யுண்ண ; தலை துமிந்து எஞ்சிய ஆண்மலி
யூபமொடு  -  தலை  வெட்டுண்டதால் எஞ்சி நிற்கும் குறையுடலாகிய
ஆண்மை  மலிந்தாடும்  கவந்தத்தோடு ; உருவில் பேய்மகள் கவலை
கவற்ற  -  அழகிய  வடிவில்லாத பேய்மகள் காண்போர் வருந்துமாறு
அச்சுறுத்த  ;  நாடு  உடல் நடுங்க - நாட்டிலுள்ளோர் அஞ்சி நடுங்க;
பல் செருக் கொன்று - பல போர்களிலும் எதிர்த்தோரை வென்றழித்து
எ - று.