துறை : செந்துறைப்பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும். பெயர் : பறைக்குர லருவி. 1 - 5. களிறு ................ நல்வலத்து. உரை : களிறு கடைஇய தாள் -களிறுகளை நெறியறி்ந்து செலுத்திப் பயின்ற தாளினையும் ; மா வுடற்றிய வடிம்பு - குதிரைகளைப் பொருதற்குச் செலுத்திப் பயின்ற தாள் விளிம்பினையும் ; சமம் ததைந்த வேல் - பகைவர் செய்யும் போரைக் கெடுத்த வேற் படையினையும் ; கல் அலைத்த தோள் - கல்லொடு பொருது பயின்ற தோளினையும் ; வில் அலைத்த நல்வலத்து - வில்லேந்திப் பொருது பகைவரை வருத்திய நல்ல வெற்றியினையுமுடைய (வயவர்.11) எ - று. |