பக்கம் எண் :

385

பெரியவாகிய      உச்சியினையுடைய   முடிகள்தோறும்    நிறைந்து
விளங்கும்  ;  அயிரை நெடுவரை போல - அயிரை யென்னும் நெடிய
மலையைப்  போல  ;  நீ  வாழும் நாள் தொலையாதாக - நீ வாழும்
வாழ்நாள் குறையாது பெருகுமாக எ - று.

மாடு,  பொன். அவ்வுலகினையுடைய தேவரை “மாடோர்” என்றார்.
மண்ணுலகத்தேயன்றிப்      பொன்னுலகத்தவரும்       கேட்குமாறு
முழங்குகின்ற  தென்றற்கு,  “உலகமும்  கேட்ப” என்றார். அருவியின்
நீரொழுக்கு  இழுமெனும்  அனுகரண வோசையும், கீழே  வீழ்ந்தவழிப்
பறைபோன்ற முழக்கு முடைமையின், “இழுமென விழிதரும்  பறைக்குர
லருவி”  யென்றார்  ;  “இழுமென  இழிதரும்  அருவி” (முருகு. 316)
என்றும்,  “பறையிசை  யருவி”  (புறம்  .  125)  என்றும்  சான்றோர்
கூறுதல்   காண்க   .   இச்   சிறப்புப்பற்றி,   இதற்குப்   பறைக்குர
லருவியென்று   பெயராயிற்றென   வறிக  .  அயிரை,  மேற்குமலைத்
தொடரிலுள்ளதொரு    மலை   ;   இதிற்   பிறக்கும்   அயிரையாறு
மேலைக்கடலில்  விழுகிறது.  அருவி  துவன்றும்  அயிரை நெடுவரை
தொலையாது  நிலைபெறுவதுபோல  நீ  வாழும் நாள் தொலையாதாக
என வாழ்த்தியவாறு  ;  இவ்வாறே  பிறரும்,  “கடவுள்  அயிரையின்
நிலைஇக்,   கேடிலவாக  பெரும   நின்புகழே”  (பதிற்.  79)  என்று
வாழ்த்துதல் காண்க.

இதுகாறும் கூறியது; “வயவர் பெரும, புரையோள் கணவ, பூண்கிளர்
மார்ப,  வெல்போ  ரண்ணல்,  வேள்வியிற்  கடவுள்  அருத்தினை  ;
கேள்வியின்   உயர்நிலை   யுலகத்து   ஐயர்   இன்புறுத்  தினை  ;
ஆதலின்கோடு தொறும் அருவி துவன்றும் நெடுவரைபோல, நீ வாழும்
நாள் தொலையாதாக’ என வினைமுடிவு செய்க.

“இதனாற் சொல்லியது  :   அவன்  வென்றி  கூறிய  திறத்தானே
அவற்குள்ள சிறப்புக்களைக் கூறிப் பின்னை வாழ்த்தியவாறாயிற்று”.

ஏழாம் பத்து மூலமும் உரையும் முற்றும்