மறுவில் வாய்மொழி அரிசில்கிழார் பாடினார் பத்துப்பாட்டு. அவைதாம், குறுந்தாண் ஞாயில், உருத்தெழு வெள்ளம், நிறந்திகழ் பாசிழை, நலம்பெறு திருமணி, தீஞ்சேற் றியாணர், மாசித றிருக்கை, வென்றாடு துணங்கை . பிறழ நோக்கியவர், நிறம்படு குருதி, புண்ணுடை யெறுழ்த்தோள் . இவை பாட்டின் பதிகம். பாடிப் பெற்ற பரிசில் : தானும் கோயிலாளும் புறம்போந்து நின்ற கோயிலுள்ளவெல்லாம் கொண்மின் என்று காணம் ஒன்பது நூறாயிரத்தோடு அரசு கட்டிற்கொடுப்ப, அவர் யான் இரப்ப இதனை யாள்க என்று அமைச்சுப் பூண்டார். தகடூரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறை பதினேழியாண்டு வீ்ற்றிருந்தான். |