கட்டின் மேல் இருந்து - அதன் கோட்டினை யறுத்துச் செய்த தெய்வத்தன் மை பொருந்திய முறைமையினையுடைய கட்டிலின்மேல் இருந்து ; தும்பை சான்ற மெய் தயங்கு உயக்கத்து - தும்பை சூ டிப் பொருதலி்ல் அமைந்த மெய்யிடத்தே யுண்டாகி ய அசைவுபற்றிப் பிறந்த ஓய்ச்சலுடன் ; நிறம்படு குருதி புறம் படின் அல்லது - மார்பிற்பட்ட. புண்ணிடத் தொழுகும் குருதியாற் புறத்தே தெளிக்கப்பட்டாலன்றி ; மடை எதிர்கொள்ளா - கொடுக்கப்படும் படைச்சலை (பலியை) யேற்றுக்கொள்ளாத ; அஞ்சு வருமரபின் - அச்சம் பொருந்திய முறைமையினையுடைய; கடவுள் அயிரையின் - கொற்றவை வீற்றிருக்கின்ற அயிரை மலைபோல ; பெரும - பெருமானே ; நின் புகழ் நிலைஇக் கேடிலவாக - நின் புகழ்களும் நிலை பெற்றுக் கெடாது விளங்குவனவாக எ - று. அதனால் என்பதனை நிலைஇக் கேடிலவாக என்பதனோடு இயைக்க. தம் மனத்துள்ள மாறுபாட்டால் நின் விருப்புவழி யொழுகுதற்கு இசைந்திலரென்பார், “வாரார்” என்றார். வாராது இருந்த நிலை இஃதென்றற்குத் “தந்நிலத் தொழிந்து” என்றார். ஒழிந்தெனவே, அவர்பால் செயலறுதி பெறப்பட்டது. இனிப் பழையவுரைகாரர், “நின்னொடு வாரார் தந்நிலத் தொழிந்தென்றது நின்னை வழிபட்டு நின்னொடு ஒழுகாதிருத்தலேயன்றித் தம் நிலத்திலே வேறுபட்டு நின் றென்றவா” றென்பர். நின் விருப்புவழி யொழுகுதற்கு இசைவின்றித் தம் நிலத்தே வறி திருத்தலும் மானமாதலின் போர்க்கு வரலானார் ; அது செய்யாது பணிந்து நின் கோற்கீழ் வரற்பாலர் என்பார், “கோலின் வாரா” என்றார். கோலின் வருதலே செயற்பாற் றென்பதற்கு ஏதுக் கூறுவார், இடையிலே நிகழ்ந்த நிகழ்ச்சியை யெடுத்தோதலுற்று, “கொல்களிற்று யானை யெருத்தம் புல்லென வில்குலை யறுத்து” என்றார். அறுப்ப வென்பது அறுத்தென நின்றது. கண்டும் என ஒரு சொல் வருவிக்க, “யானை யெருத்தம் பொலியக் குடைநிழற் கீழ்ச், சேனைத் தலைவராய்” (நாலடி. 3) வந்தாராதலின், வந்த அவரை வென்று மேம்பட்ட செய்தியை, “யானை யெருத்தம் புல்லென வில்குலை யறுத்து” என்றார். கோலின் வாராத வேந்தர் போர் குறித்து வந்தமை தோன்ற, “வெல் போர் வேந்தர்” என்றார். இனிப் பழையவுரைகாரர், “யானை யெருத்தம் புல்லென வில்குலை யறுத்துக் கோலின் வாரா வேந்தரென்றது, முன்பு நின் வழி யொழுகாது ஒழிந்திருந்தவழிப் பின்பு தாம் களத்து நின் போர்வலிகண்டு இனி நின் வழி யொழுகுது மெனச் சொல்லித் தாம் ஏறிய யானை யெருத்தம் புல்லென வில்லின் நாணியை யறுத்து நின் செங்கோல்வழி யொழுகாத வேந்தரென்றவா” றென்பர். பகை வேந்தரை “வெல் போர் வேந்தர்” என்றார், இதற்கு முன்பெல்லாம் அவர் செய்த போரனைத்தினும் வென்றியே யெய்தி வந்தமையும், அச்செருக்கே பற்றுக்கோடாக இப்போதும் வந்தாரென்பதும் உணர்த்துதற்கு. இப் போரில் தோற்றமையால் அவரது முரசும் களத்தே யொழிந்த தென்றற்கு, “அவர் முரசுகண் கிழித்து” என்றார். |