பக்கம் எண் :

432

ஆசிரியர் பெருங்குன்றூர் கிழார் பாடிய

ஒன்பதாம் பத்து

பதிகம்
 

குட்டுவ னிரும்பொறைக்கு மையூர் கிழான்
வேண்மா ளந்துவஞ் செள்ளை யீன்றமகன்
வெருவரு தானையொடு வெய்துறச் செய்துசென்
றிருபெரு வேந்தரும் விச்சியும் வீழ
 
5அருமிளைக் கல்லகத் தைந்தெயி லெறிந்து
பொத்தி யாண்ட பெருஞ் சோழனையும்
வித்தை யாண்ட விளம்பழையன் மாறனையும்
வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று
வஞ்சி மூதூர்த் தந்து பிறர்க்குதவி
 
10மந்திர மரபிற் றெய்வம் பேணி
மெய்யூ ரமைச்சியன் மையூர் கிழானைப்
புரையறு கேள்விப் புரோசு மயக்கி
அருந்திறன் மரபிற் பெருஞ்சதுக் கமர்ந்த
வெந்திறற் பூதரைத் தந்திவ ணிறீஇ
 
15ஆய்ந்த மரபிற் சாந்தி வேட்டு
மன்னுயிர் காத்த மறுவில் செங்கோல்
இன்னிசை முரசி னிளஞ்சேர லிரும்பொறையைப்
 

பெருங்குன்றூர் கிழார் பாடினார் பத்துப்பாட்டு. அவைதாம் : நிழல்
விடு  கட்டி,  வினைநவில்  யானை,  பஃறோற்றொழுதி,  தொழினவில்
யானை,   நாடுகண்  நெடுவரை,  வெந்திறற்  றடக்கை,  வெண்டலைச்
செம்புனல்,  கல்கால்  கவணை,  துவராக் கூந்தல், வலிகெழு தடக்கை.
இவை பாட்டின் பதிகம்.

பாடிப்பெற்ற பரிசில் : மருளில்லார்க்கு மருளக் கொடுக்க  வென்று
உவகையின் முப்பத்தீராயிம்  காணங்  கொடுத்து,  அவர் அறியாமை
ஊரும்  மனையும்  வளமிகப்  படைத்து, ஏரும் இன்பமும் இயல்வரப்
பரப்பி,  எண்ணற்காகா  அருங்கல  வெறுக்கையொடு  பன்னூறாயிரம்
பாற்பட வகுத்துக் காப்பு தான்விட்டான் அக் கோ.

குடக் கோ இளஞ்சேர லிரும்பொறை பதினாறாண்டு வீற்றிருந்தான்.