பக்கம் எண் :

437

வலிப்ப”     என்றார்.   “கட்டளை  வலித்தலென்பது     இன்னார்
இன்னதனைப்   பெறுக   என்று  தரங்களை  நிச்சயித்தல்”  என்பது
பழையவுரை.   தானை   யென்புழி   நான்கனுருபு   விரிக்க.  வேறு
புலத்திறுத்தவழி   வேந்தன்  செய்வன  இவை  யென்கின்றாராதலின்,
“வேறு புலத்திறுத்த வெல்போ ரண்ணல்” என்றுரைக்கின்றார்.

19 - 23. முழவின் - ஈயும்

உரை : காந்தளங்கண்ணிச் செழுங்குடிச் செல்வர் -காந்தட் பூவால்
தொடுத்த  கண்ணி சூடிய செழித்த குடியினையுடைய செல்வ மக்கள் ;
முழுவின்  அமைந்த பெரும் பழம் மிசைந்து - முழவு போன்றமைந்த
பெரிய   பலாப்பழத்தை   யுண்டு   ;   சாறயர்ந்தன்ன   -   விழாக்
கொண்டாடினாற்போல  ;  யாணர்  கார்  அணி  தூம்பகம்  பழுனிய
தீம்பிழி   மாந்தி  -  புதுமையினையுடைய  கரிய  அழகிய  மூங்கிற்
குழாயிடத்தே பெய்து முதிர்வித்த இனிய கள்ளை யருந்தி ; கலி மகிழ்
மேவலர்  - ஆரவாரத்தையுடைய மகிழ்ச்சியை விரும்பி ; இரவலர்க்கு
ஈயும் - இரப்போர்க்கு வேண்டுவனவற்றை யீதலைச் செய்யும் கொல்லி
நாட்டிலுள்ள எ - று.

கொல்லிமலையைச்    சூழ்ந்த நாட்டைக் கொல்லிக்கூற்ற மென்பர்.
அந்நாட்டவர்  குறிஞ்சி  நிலத்து மக்களாதலின், அந்நாட்டுச் செல்வர்
காந்தட்கண்ணி  சூடுதலை  விதந்து, “காந்தளங்கண்ணிச் செழுங்குடிச்
செல்வர்”  என்றார்  . அங்கே, பலாப்பழம் மிகுதியும் கிடைப்பது இக்
காலத்தும்  உண்மை.  “கலையுணக் கிழித்த முழவுமருள் பெரும்பழம்”
(புறம்  .  236) என்பவாகலின், ஈண்டும் பலாப்பழம், “முழவினமைந்த
பெரும்பழ”   மெனப்பட்டது.   விழாக்காலத்துச்   சுற்றமும்  பிறரும்
சூழவுண்டல்போல,  ஏனைக்காலத்தும்  உண்டு மகிழ்தலைச், “சாறயர்ந்
தன்ன  தீம்பிழி  மாந்தி”  என்றதனாலும்,  இனிய  கள்ளை  மூங்கிற்
குழாயிடத்தே   பெய்து  புளிப்பு  முதிர்விக்கும்  இயல்பை,  “நீடமை
விளைந்த   தேக்கட்டேறல்”   (முருகு  .  195)  என்பதனாலு  மறிக.
இரவலர்க்கீயும்  கொல்லியென முடிக்க. பழையவுரைகாரரும், “சாறயர்ந்
தன்ன  தீம்பிழியென  முடித்து விழாக் கொண்டாடினா லொத்த இனிய
மதுவென  வுரைக்க”  என்றும்,  “காரணி  யாணர்த்  தூம்பு  என்றது
கருமையைப்   பொருந்தின   அழகிய   மூங்கிற்  குழாய்  என்றவா”
றென்றும் கூறுவர்.

24 - 32. சுரும்பு ....................நெடுந்தேர்

உரை :  சுரும்பார்சோலைப் பெரும்   பெயர்க்கொல்லிவண்டுகள்
பொருந்திய சோலை சூழ்ந்த பெரிய பெயரையுடைய கொல்லிமலையில்
உண்டாகிய  ; பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து - இருவாட்சிப்
பூக்களுடன்  பச்சிலையைத்  தொடுத்தணிந்து  ;  மின் உமிழ்ந்தன்ன
சுடரிழை  யாயத்து  -  மின்னலை  உமிழ்ந்தாற் போன்ற ஒளிதிகழும்
அணிகளையுடைய       ஆயமகளிர்படைசூ          ழவுள்ள;தன்
நிறங்கரந்தவண்டுபடு கதுப்பின் - தன் நிறம் மறையும்படியான வண்டு
மொய்க்கும் கூந்தலும் ;