பக்கம் எண் :

462

1 - 15. வையகம்................குரிசில்.

உரை :   கடவுட்   பெயரிய   கானமொடு   கல்  உயர்ந்து  -
விந்தையென்னும்   பெயரையுடைய   கொற்றவையின்  பெயராலாகிய
விந்தாடவியோடு   அப்பெயரையே  யுடையதாகிய  விந்தமலையினும்
புகழ் மிகுந்து ; தெண்கடல் வளைஇய மலர் தலையுலகத்து - தெளிந்த
கடலாற்   சூழப்பட்ட   அகன்ற  இடத்தையுடைய  நிலவுலகத்தில்  ;
வையகம்  மலர்ந்த  தொழில்முறை  ஒழியாது  - நாடு வளம் சிறத்தற்
கேதுவாகிய  அரசர்க்குரிய தொழில்முறை வழுவாதொழுகி ; தம்பெயர்
போகிய  ஒன்னார்  தேய - தங்கள் சீர்த்தியை நாற்றிசையும் பரப்பிய
பகைவராகிய  கடம்பர்கள் குன்ற ; துளங்கு இருங்குட்டம் தொலைய -
அலையெழுந்தசையும் கரிய கடலிடத்தே அவர்கள் தோற் றழியுமாறு ;
வேலிட்டு  -  வேற்படையைச்  செலுத்தி  வென்று  ; அணங்குடைக்
கடம்பின்  முழுமுதல்  தடிந்தும் - அவர்கள் தமக்குக் காவல்மரமாகப்
பேணிக்காத்த  தெய்வத்தன்மை பொருந்திய கடம்புமரத்தை வேரோடு
தகர்த்தழித்தும்   ;  பொருமுரண்  எய்திய  கழுவுள்  புறம்பெற்று  -
காமூரென்னும்  ஊரிடத்தே யிருந்து கொண்டு சேரருடன் போருடற்றக்
கூடிய   மாறுபாட்டினைப்  பெற்ற  கழுவுள்  என்பானைத்  தோல்வி
யெய்துவித்து  ; நாம மன்னர் துணிய நூறி - அவற்குத் துணையாய்ப்
போந்த  அச்சம்  பொருந்திய  மன்னர் துண்டுதுண்டாய் வெட்டுண்டு
வீழக்கொன்று   ;   கால்  வல்  புரவி  அண்டர்  ஓட்டி  - காலால்
வலியவாகிய  குதிரைகளையுடைய இடையர்களைத் துரத்தி்யும் ; சுடர்
வீ    வாகை   நன்னற்   றேய்த்து   ஒளிர்கின்ற   பூக்களையுடைய
வாகைமரத்தைக்     காவல்மரமாகக்    கொண்டோம்பிய   நன்னன்
என்பானை  அவ்வாகை  மரத்தோடும்  அழித்தும் ; குருதி விதிர்த்த
குவவுச் சோற்றுக் குன்றோடு - பகைவரது குருதி தெளித்துப் பிசைந்த
திரண்ட  சோற்றுக்குவியலாகிய குன்றைக்கொண்டு ; உருகெழு மரபின்
அயிரை  பரைஇ  -  உட்குதலைப்  பயக்கும் முறைமையினையுடைய
அயிரை மலையிலுள்ள கொற்றவையைப் பரவி ; வேந்தரும் வேளிரும்
பின்வந்து  பணிய  -  முடியரசராகிய  சோழ  பாண்டியரும் குறுநில
மன்னரும் வணங்கி வழிபட்டு நிற்கவும் ; கொற்ற மெய்திய பெரியோர்
மருக  -  வெற்றியெய்திய  பெரு மக்களின் வழி வந்தோனே ; வியல்
உளை  அரிமான்  மறம் கெழு குருசில் - அகன்ற பிடரியினையுடைய
சிங்கத்தினது வலிபொருந்திய தலைவனே எ - று.
  

வடநாட்டில் இமயமலைக்கு அடுத்தபடியில் வைத்துச் சான்றோரால்
புகழப்படும்    பெருஞ்   சீர்த்தியுடையதாகலின்,   சேரர்   புகழ்க்கு
உவமையாக  விந்தமலையையும்  அதனைச் சூழவுள்ள  கானத்தையும்
எடுத்தோதினார்.   கல்லுயர்ந்து   என்புழி  உறழ்ச்சிப்  பொருட்டாய
ஐந்தாவது தொக்கது