| மட்டப் புகாவிற் குட்டுவ ரேறே எழாஅத் துணைத்தோட் பூழியர் மெய்ம்மறை இரங்குநீர்ப் பரப்பின் மரந்தையோர் பொருந வெண்பூ வேளையொடு சுரைதலை மயங்கிய |
30 | விரவுமொழிக் கட்டூர் வயவர் வேந்தே உரவுக் கடலன்ன தாங்கருந் தானையொடு மாண்வினைச் சாப மார்புற வாங்கி ஞாண்பொர விளங்கிய வலிகெழு தடக்கை வார்ந்து புனைந்தன்ன வேந்துகுவவு மொய்ம்பின் |
35 | மீன்பூத் தன்ன விளங்குமணிப் பாண்டில் ஆய்மயிர்க் கவரிப் பாய்மா மேல்கொண்டு காழெஃகம் பிடித்தெறிந்து விழுமத்திற் புகலும் பெயரா வாண்மைக் காஞ்சி சான்ற வயவர் பெரும |
40 | வீங்குபெருஞ் சிறப்பி னோங்குபுக ழோயே கழனி யுழவர் தண்ணுமை யிசைப்பிற் பழன மஞ்ஞை மழைசெத் தாலும் தண்புன லாடுந ரார்ப்பொடு மயங்கி வெம்போர் மள்ளர் தெண்கிணை கறங்கக் |
45 | கூழுடை நல்லி லேறுமாறு சிலைப்பச் செழும்பல விருந்த கொழும்பஃ றண்பணைக் காவிரிப் படப்பை நன்னா டன்ன வளங்கெழு குடைச்சசூ லடங்கிய கொள்கை ஆறிய கற்பிற் றேறிய நல்லிசை |
50 | வண்டார் கூந்த லொண்டொடி கணவ நின்னாள், திங்க ளனைய வாக திங்கள் யாண்டோ ரனைய வாக யாண்டே ஊழி யனைய வாக வூழி வெள்ள வரம்பின வாகென வுள்ளிக் |
55 | காண்கு வந்திசின் யானே செருமிக் குருமென முழங்கு முரசிற் பெருநல் யானை யிறைகிழ வோயே . |
துறை : காட்சிவாழ்த்து. வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும். |