பக்கம் எண் :

483

அம்மயிர்  சிக்குறாது  வார்ந்து  ஒழுகுமாறு  செப்பம்  செய்திருப்பது
தோன்ற, ஆய் மயிர்” என்றார் . கவரி : ஆகுபெயர் .
  

ஏந்திய     வேலைப் பகைவர்மே லெறிந்து தாக்கியவழி,   அவர்
புண்ணுற்றுப்   பெருந்துன்பம்  உழப்பக்  கண்டும்  மறம்  தணியாது
மேன்மேலும்     மண்டிச்     சென்று     பகைவர்க்குப்      புண்
ணுண்டாக்குதலையே பெரிதும் விரும்பும் இயல்பு குறித்து, “காழெஃகம்
பிடித்தெறிந்து  விழுமத்துப்  புகலும்”  என்றார். தான் புண் செய்தலே
யன்றிப், பிறரால் தான் புண்ணுறினும் அதனையே விரும்புவரென்றற்கு,
“விழுமத்திற்   புகலும்”   எனப்   பொதுப்படக்  கூறினார்.  புகற்சிக்
கேதுவாகிய   ஆண்மை,   பெயராமையால்  விளங்குதலின், “பெயரா
ஆண்மை”    யென்றும்,   அதுதானும்   நிலைபெறுதற்கு,  யாக்கை
நிலையாமையும் புகழின் நிலைபேறுடைமையும் நெஞ்சில்  நிலவுதற்குக்,
“காஞ்சி  சான்ற  வயவர்”  என்றும்  கூறினார்.  பழைய  வுரைகாரர்,
“காழெஃகம்   பிடித்தெறிந்தும்   விழுமத்திற்   புகலும்   என்றற்குப்
பகைவரை  யென்னும் பெயரை வருவித்துக் காம்பையுடைய வேலைப்
பிடித்தெறிந்து  அப்பகைவர்க்கு  இடும்பை செய்கையிலேயே விரும்பு
மென்றவா” றென்று கூறுவர்.
  

இக்கூறியவாற்றால்     சிறப்பு மிகுதலின், “வீங்கு பெருஞ் சிறப்பி”
னென்றும்  இதனா  லுண்டாகும் புகழ், ஏனையோ ரெய்தும் புகழினும்
ஓங்கி நிற்றலின், “ஓங்கு புகழோய்” என்றும் கூறினார்.
  

41 - 50. கழனியுழவர்....................கணவ .

உரை :  கழனி  யுழவர்  தண்ணுமை  இசைப்பின்   - கழனியில்
தொழில்புரியும்  உழவர்  தண்ணுமையினை  முழக்குவராயின் ;  பழன
மஞ்ஞை  மழை  செத்து  ஆலும்  - பழனங்களில் வாழும்  மயில்கள்
மழைமுகிலின்   முழக்கமெனக்   கருதி   ஆடும்;  தண்  புனலாடுநர்
ஆர்ப்பொடு    -   குளிர்ந்த   நீரில்   மூழ்கியாடுவோர்   செய்யும்
ஆரவாரத்தோடு ; வெம்போர் மள்ளர் தெண் கிணை மயங்கிக் கறங்க
-  வெவ்விய  போரைச்செய்யும்  வீரருடைய தெளிந்த  ஓசையமைந்த
தடாரிப்பறை  கலந்து முழங்க ; கூழுடை நல் இல் ஏறு மாறு சிலைப்ப
-  செல்வமுடைய  நல்ல  மனைகளிலேயுள்ள  ஆனேறுகள்  தம்மின்
மாறுபட்டு  முழங்க  ; செழும் பல இருந்த கொழும்பல் தண் பணை -
செழுமையான   பல   வூர்களையுடைய   வளமிக்க   பல  குளிர்ந்த
வயல்களைக்   கொண்ட   ;   காவிரிப்  படப்பை  நன்னாடன்ன  -
காவிரியாற்றால்   வளமுறப்  படைக்கப்பட்ட  நிலப்பகுதியாகிய நல்ல
நாட்டைப்   போலும்   ;   வளங்கெழு   குடைச்சூல்  தொழில்வளம்
பொருந்திய   சிலம்பையும்  ;  அடங்கிய  கொள்கை  அடக்கத்தைப்
பொருளாகக்  கொண்ட  கொள்கையையும்  ; ஆறிய கற்பின் - சினங்
கொள்ளுத  லில்லாத  அறக்கற்பையும் ; தேறிய நல்லிசை - யாவரும்
தெளிய விளங்கும் நல்ல புகழையும் ; வண்டார்