பக்கம் எண் :

488

வாலிழை     கழித்த  பெண்டிர் என்றது,  அப்பழையன் பெண்டிரை.
கூந்தல் முரற்சி யென்றது, அவர் கூந்தலை யரிந்து திரித்த கயிற்றினை.
குஞ்சரவொழுகை     பூட்டியது,     அப்பழையன்      வேம்பினை
ஏற்றிக்கொண்டு போதற்கு குடிக்குரியோ ரென்றது, அரசிற்  குரியாரை.
  

ஆறாம்  பத்து  :   இதன்  பதிகத்துத் தண்டாரணிய மென்றது, 
ஆரிய  நாட்டிலே  உள்ளதோர் நாடு. கபிலை யென்றது, குராற்பசு.
  

ஏழாம் பத்து : இதன் பதிகத்து ஒரு தந்தையென்றது, பொறையன்
பெருந்தேவியின்   பிதாவுடையது  ஒரு  பெயர்.  வேள்வி  ஆக்கிய
பொழுதின் அறத்துறை போகி யென்றது, யாகம் பண்ணின காலத்திலே
மற்றுள்ள  அறத்துறைகளையும்  செய்து  முடித்து  எ  -  று.  மாய
வண்ணனை    மனனுறப்    பெற்றென்பது,   திருமாலை  வழிபட்டு
அவனுடைய மனம் தன்பாலேயாம்படி பெற்று எ - று. புரோசு மயக்கி
யென்றது, தன் புரோகிதனிலும் தான் அறநெறி யறிந்து எ - று.சிறுபுற
மென்றது, சிறுகொடை.
  

எட்டாம்   பத்து : இதன் பதிகத்துக்  கொல்லிக்கூற்ற மென்றது,
கொல்லிமலையைச்  சூழ்ந்த  மலைகளையுடைய  நாட்டினை. நீர்  கூர்
மீமிசையென்றது,  அந்நாட்டு  நீர் மிக்க மலையின் உச்சியை.  நொச்சி
தந்தென்றது, தகடூர் மதிலைக் கைக்கொண்டு எ - று.
  

ஒன்பதாம் பத்து : இதன் பதிகத்து விச்சி யென்பான்,ஒரு குறுநில
மன்னன்.   வஞ்சி  மூதூர்த்  தந்து  என்றது,  அவர்களை  வென்று
கொண்ட  பொருள்களை ; பசுவும் எருமையும் ஆடுமென்பாரு முளர்.
அமைச்சியல்   மையூர்கிழானைப்  புரோசு  மயக்கி  யென்றது,  தன்
மந்திரி    யாகிய    மையூர்கிழானைப்   புரோகிதனிலும்  அறநெறி
யறிவானாகப் பண்ணி எ - று.