திருச்சிற்றம்பலம் எட்டுத் தொகையுள் ஒன்றாகிய பதிற்றுப்பத்து மூலமும் விளக்க உரையும் கடவுள் வாழ்த்து எரியெள்ளு வன்ன நிறத்தன் விரியிணர்க் கொன்றையம் பைந்தா ரகலத்தன் பொன்றார் எயிலெரி யூட்டிய வில்லன் பயிலிருள் காடமர்ந் தாடிய வாடல னீடிப் புறம்புதை தாழ்ந்த சடையன் குறங்கறைந்து வெண்மணி யார்க்கும் விழவின னுண்ணூற் சிரந்தை யிரட்டும் விரலனிரண் டுருவாய் ஈரணி பெற்ற வெழிற்றகைய னேரும் இளம்பிறை சேர்ந்த நுதலன் களங்கனி மாறேற்கும் பண்பின் மறுமிடற்றன் றேறிய சூலம் பிடித்த சுடர்ப்படைக் காலக் கடவுட் குயர்கமா வலனே. |