பக்கம் எண் :

65

 

ஒலிதெங்கி னிமிழ்மருதிற்
புனல்வாயிற் பூம்பொய்கைப்
பாடல் சான்ற பயங்கெழு வைப்பின்
 
10நாடுகவி னழிய நாமந் தோற்றிக்
கூற்றடூஉ நின்ற யாக்கை போல
நீசிவந் திறுத்த நீரழி பாக்கம்
விரிபூங் கரும்பின் கழனி புல்லெனத்
திரிகாய் விடத்தரொடு காருடை போகிக்
 
15கவைத்தலைப் பேய்மகள் கழுதூர்ந் தியங்க
வூரிய
1 நெருஞ்சி நீறாடு பறந்தலைத்
தாதெரு மறுத்த கலியழி மன்றத்து
உள்ள மழிய வூக்குநர் மிடறபுத்(து)
உள்ளுநர் பனிக்கும் பாழா யினவே
 
20காடே கடவுண் மேன புறவே
ஒள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன
ஆறே யவ்வனைத் தன்றியு ஞாலத்துக்
கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக்
2
குடிபுறந் தருநர் பார மோம்பி
 
25அழல் சென்ற மருங்கின் வெள்ளி யோடா(து)
மழைவேண்டு புலத்து மாரி நிற்ப
நோயொடு பசியிகந் தொரீஇப்
பூத்தன்று பெருமநீ காத்த நாடே
 

துறை : செந்துறைப் பாடாண்பாட்டு.
வண்ணம் : ஒழுகுவண்ணம்.
தூக்கு : செந்தூக்கும்வஞ்சித்தூக்கும்.
பெயர் : பூத்தநெய்தல்.

1 - 10. தொறுத்தவயல்.............நாடு.  

உரை : தொறுத்த வயல் - ஆனிரைகள் புல்மேயும் கொல்லைகள்;
ஆரல்   பிறழ்நவும்  -  ஆரல்மீன்  பிறழ்ந்துலாவும்,  நீர்  நிரம்பிய
வயல்களாயினவும்;  ஏறு  பொருத  செறு  -  பன்றிகள்  தம்முடைய
மருப்புக்களாற்  கிண்டிப்  புழுதியாக்கிய  புலம்; உழாது வித்துநவும் -
ஏரான் உழுதலை வேண்டாது காலாற்
  


1.வூறிய - பாடம் 2.குடிபுறந்தாரா - பாடம்.