24.மன்னவன் பெருமையும் கொடைச் சிறப்பும் கூறி வாழ்த்துதல் | | நெடு வயின் ஒளிறு மின்னுப் பரந்தாங்கு, புலி உறை கழித்த புலவு வாய் எஃகம் வல் ஆடவர் வலன் உயர்த்து ஏந்தி, ஆர் அரண் கடந்த தார் அருந் தகைப்பின் பீடு கொள் மாலைப் பெரும் படைத் தலைவ! | 5 | ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்தல், ஈதல், ஏற்றல், என்று ஆறு புரிந்து ஒழுகும் அறம் புரி அந்தணர் வழி மொழிந்து ஒழுகி, ஞாலம் நின்வழி ஒழுக, பாடல் சான்று, நாடுடன் விளங்கும் நாடா நல்லிசைத் | 10 | திருந்திய இயல் மொழித் திருந்திழை கணவ! குலை இழிபு அறியாச் சாபத்து வயவர் அம்பு களைவு அறியாத் தூங்கு துளங்கு இருக்கை, இடாஅ ஏணி இயல் அறைக் குருசில்! நீர், நிலம், தீ, வளி, விசும்போடு, ஐந்தும் | 15 | அளந்து கடை அறியினும், அளப்பு அருங் குரையை! நின் வளம் வீங்கு பெருக்கம் இனிது கண்டிகுமே! உண்மரும், தின்மரும், வரைகோள் அறியாது, குரைத் தொடி மழுகிய உலக்கை வயின்தோறு அடைச் சேம்பு எழுந்த ஆடுறும் மடாவின், | 20 | எஃகு உறச் சிவந்த ஊனத்து, யாவரும் கண்டு மதி மருளும் வாடாச் சொன்றி வயங்கு கதிர் விரிந்து வானகம் சுடர்வர, வறிது வடக்கு இறைஞ்சிய சீர் சால் வெள்ளி பயம் கெழு பொழுதோடு ஆநியம் நிற்ப, | 25 | கலிழும் கருவியொடு கை உற வணங்கி, மன் உயிர் புரைஇய வலன் ஏர்பு இரங்கும் கொண்டல் தண் தளிக் கமஞ் சூல் மா மழை கார் எதிர் பருவம் மறப்பினும் பேரா யாணர்த்தால்; வாழ்க நின் வளனே! | 30 | துறை:இயல்மொழி வாழ்த்து வண்ணம்:ஒழுகு வண்ணம் தூக்கு:செந்தூக்கு பெயர்:சீர் சால் வெள்ளி | |
| |