39.கொடைச் சிறப்பும் வென்றிச் சிறப்பும் | | பிறர்க்கு என வாழ்தி நீ ஆகன் மாறே, எமக்கு 'இல்' என்னார், நின் மறம் கூறு குழாத்தர் துப்புத் துறைபோகிய வெப்புடைத் தும்பை, கறுத்த தெவ்வர் கடி முனை அலற, எடுத்து எறிந்து இரங்கும் ஏவல் வியன் பணை | 5 | உரும் என அதிர்பட்டு முழங்கி, செரு மிக்கு, அடங்கார் ஆர் அரண் வாடச் செல்லும், காலன் அனைய, கடுஞ் சின முன்ப! வாலிதின், நூலின் இழையா நுண் மயிர் இழைய பொறித்த போலும் புள்ளி எருத்தின் | 10 | புன் புறப் புறவின் கண நிரை அலற, அலந்தலை வேலத்து உலவைஅம் சினை சிலம்பி கோலிய அலங்கல் போர்வையின், இலங்கு மணி மிடைந்த பசும் பொன் படலத்து அவிர் இழை தைஇ, மின் உமிழ்பு இலங்கச் | 15 | சீர் மிகு முத்தம் தைஇய நார்முடிச் சேரல்! நின் போர் நிழல் புகன்றே. | | துறை:வாகை வண்ணமும் தூக்கும்:அது பெயர்:வல் வியன் பணை | |
| |