25.வென்றிச் சிறப்பு | | மா ஆடிய புலன் நாஞ்சில் ஆடா; கடாஅம் சென்னிய கடுங்கண் யானை இனம் பரந்த புலம் வளம் பரப்பு அறியா; நின் படைஞர், சேர்ந்த மன்றம் கழுதை போகி, நீ உடன்றோர் மன் எயில் தோட்டி வையா; | 5 | கடுங் கால் ஒற்றலின், சுடர் சிறந்து உருத்து, பசும் பிசிர் ஒள் அழல் ஆடிய மருங்கின், ஆண்டலை வழங்கும் கான் உணங்கு கடு நெறி முனை அகன் பெரும் பாழ் ஆக மன்னிய உரும் உறழ்பு இரங்கு முரசின், பெரு மலை | 10 | வரை இழி அருவியின், ஒளிறு கொடி நுடங்க, கடும் பரிக் கதழ் சிறகு அகைப்ப, நீ நெடுந் தேர் ஓட்டிய, பிறர் அகன் தலை நாடே. | | துறை: வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு வண்ணம்:ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் தூக்கு:செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் பெயர்:கான் உணங்கு கடு நெறி | |
|
|