30.வென்றிச் சிறப்பு இணர் ததை ஞாழல் கரை கெழு பெருந் துறை, மணிக்கலத்தன்ன மா இதழ் நெய்தல் பாசடைப் பனிக் கழி துழைஇ, புன்னை வால் இணர்ப் படு சினைக் குருகு இறை கொள்ளும் அல்குறு கானல், ஓங்கு மணல் அடைகரை, 5 தாழ் அடும்பு மலைந்த புணரி வளை ஞரல, இலங்கு நீர் முத்தமொடு வார் துகிர் எடுக்கும் தண் கடற் படப்பை மென்பாலனவும்; காந்தள்அம் கண்ணி, கொலை வில், வேட்டுவர் செங் கோட்டு ஆமான் ஊனொடு, காட்ட 10மதனுடை வேழத்து வெண் கோடு கொண்டு, பொன்னுடை நியமத்துப் பிழி நொடை கொடுக்கும் குன்று தலைமணந்த புன் புல வைப்பும்; காலம் அன்றியும் கரும்பு அறுத்து ஒழியாது, அரி கால் அவித்து, பல பூ விழவின் 15 தேம் பாய் மருதம் முதல் படக் கொன்று, வெண் தலைச் செம் புனல் பரந்து வாய் மிகுக்கும் பல சூழ் பதப்பர் பரிய, வெள்ளத்துச் சிறை கொள் பூசலின் புகன்ற ஆயம் முழவு இமிழ் மூதூர் விழவுக் காணூஉப் பெயரும் 20செழும் பல் வைப்பின் பழனப் பாலும்; ஏனல் உழவர் வரகுமீது இட்ட கான் மிகு குளவிய வன்பு சேர் இருக்கை, மென் தினை நுவணை முறைமுறை பகுக்கும் புன்புலம் தழீஇய, புறவு அணி வைப்பும்; 25 பல் பூஞ் செம்மற் காடு பயம் மாறி, அரக்கத்தன்ன நுண் மணற் கோடு கொண்டு, ஒண் நுதல் மகளிர் கழலொடு மறுகும் விண் உயர்ந்து ஓங்கிய கடற்றவும்; பிறவும்; பணை கெழு வேந்தரும் வேளிரும், ஒன்று மொழிந்து, 30கடலவும் காட்டவும் அரண் வலியார் நடுங்க, முரண் மிகு கடுங் குரல் விசும்பு அடைபு அதிர, கடுஞ் சினம் கடாஅய், முழங்கும் மந்திரத்து கடுஞ் சினம் கடாஅய், முழங்கும் மந்திரத்து அருந் திறல் மரபின் கடவுள் பேணியர், உயர்ந்தோன் ஏந்திய அரும் பெறல் பிண்டம் 35 கருங் கண் பேய்மகள் கை புடையூஉ நடுங்க, நெய்த்தோர் தூஉய நிறை மகிழ் இரும் பலி, எறும்பும் மூசா இறும்பூது மரபின், கருங் கண் காக்கையொடு பருந்து இருந்து ஆர; ஓடாப் பூட்கை, ஒண் பொறிக் கழல் கால், 40பெருஞ் சமம் ததைந்த, செருப் புகல், மறவர் உருமு நிலன் அதிர்க்கும் குரலொடு, கொளை புணர்ந்து, பெருஞ் சோறு உகுத்தற்கு, எறியும் கடுஞ் சின வேந்தே! நின் தழங்கு குரல் முரசே. துறை:பெருஞ்சோற்று நிலை வண்ணமும் தூக்கும்:அது பெயர்:புகன்ற ஆயம் |