வேஎள் ஆவிக்கோமான் தேவி  


ஆறாம் பத்து - பதிகம்

 
குடக்கோ நெடுஞ்சேர லாதற்கு வேஎள்
ஆவிக் கோமான் றேவி யீன்றமகன்
தண்டா ரணியத்துக் கோட்பட்ட வருடையைத்
தொண்டியுட் டந்து கொடுப்பித்துப் பார்ப்பார்க்கு

 
கபிலையொரு குடநாட் டோரூ ரீத்து
வான வரம்பனெனப் பேரினிது விளக்கி
ஏனை மழவரைச் செருவிற் சுருக்கி
மன்னரை யோட்டிக்
குழவி கொள்வாரிற் குடிபுறந் தந்து

5
நாடல் சான்ற நயனுடைய நெஞ்சின்
ஆடுகோட் பாட்டுச் சேர லாதனை
யாத்த செய்யு ளடங்கிய கொள்கைக்
காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடினார் பத்துப்பாட்டு.
10
   

அவைதாம்: வடுவடு நுண்ணயிர், சிறுசெங்குவளை, குண்டுகண் ணகழி, நில்லாத தானை, துஞ்சும் பந்தர், வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி, சில்வளை விறலி, ஏவிளங்கு தடக்கை, மாகூர் திங்கள், மரம்படு தீங்கனி ; இவை பாட்டின் பதிகம்.

 

பாடிப் பெற்ற பரிசில்: ‘கல னணிக’ என்று அவர்க்கு ஒன்பதுகாப்பொன்னும் நூறாயிரங் காணமும் கொடுத்துத் தன் பக்கத்துக்கொண்டான் அக் கோ.

 

ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் முப்பத்தெட்டியாண்டுவீற்றிருந்தான்.

 

உரை