மூன்றாம் பத்து - பதிகம் | | இமையவரம்பன் தம்பி அமைவர உம்பற்காட்டைத் தன் கோல் நிறீஇ, அகப்பா எறிந்து, பகல் தீ வேட்டு, மதி உறழ் மரபின் முதியரைத் தழீஇ, கண் அகன் வைப்பின் மண் வகுத்து ஈத்து, | 5 | கருங் களிற்று யானைப் புணர் நிரை நீட்டி, இரு கடல் நீரும் ஒரு பகல் ஆடி, அயிரை பரைஇ, ஆற்றல் சால் முன்போடு ஒடுங்கா நல்இசை, உயர்ந்த கேள்வி, நெடும்பாரதாயனார் முந்துற, காடு போந்த | 10 | பல் யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக் கௌதமனார் பாடினார் பத்துப் பாட்டு. | | அவைதாம்: அடு நெய் ஆவுதி, கயிறு குறு முகவை, ததைந்த காஞ்சி, சீர் சால் வெள்ளி, கான் உணங்கு கடு நெறி, காடு உறு கடு நெறி, தொடர்ந்த குவளை, உருத்து வரு மலிர் நிறை, வெண் கை மகளிர், புகன்ற ஆயம்: இவை பாட்டின் பதிகம். | | பாடிப் பெற்ற பரிசில்:'நீர் வேண்டியது கொண்மின்' என, 'யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டும்' என, பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு, ஒன்பது பெரு வேள்வி வேட்பிக்க, பத்தாம் பெரு வேள்வியில் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணாராயினார். | | இமயவரம்பன் தம்பி பல் யானைச் செல் கெழு குட்டுவன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான். | |
|
|