38. கொடைச் சிறப்பு | | உலகத்தோரே பலர்மன் செல்வர்; எல்லாருள்ளும் நின் நல் இசை மிகுமே வளம் தலைமயங்கிய பைதிரம் திருத்திய களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல்! எயில் முகம் சிதையத் தோட்டி ஏவலின், | 5 | தோட்டி தந்த தொடி மருப்பு யானை, செவ் உளைக் கலிமா, ஈகை வான் கழல், செயல் அமை கண்ணிச் சேரலர் வேந்தே! பரிசிலர் வெறுக்கை! பாணர் நாள்அவை! வாணுதல் கணவ! மள்ளர் ஏறே! | 10 | மை அற விளங்கிய, வடு வாழ் மார்பின், வசை இல் செல்வ! வானவரம்ப! 'இனியவை பெறினே தனித்தனி நுகர்கேம், தருக' என விழையாத் தா இல் நெஞ்சத்து, பகுத்தூண் தொகுத்த ஆண்மை, | 15 | பிறர்க்கு என வாழ்தி நீ ஆகன்மாறே. | | துறை:செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணமும் தூக்கும்:அது பெயர்:பரிசிலர் வெறுக்கை | |
|
|