55.மன்னவன் உலகு புரத்தலும் தன் குறையும் கூறி, வாழ்த்துதல் | | ஆன்றோள் கணவ! சான்றோர் புரவல! நின் நயந்து வந்தனன், அடு போர்க் கொற்றவ! இன் இசைப் புணரி இரங்கும் பௌவத்து, நன் கல வெறுக்கை துஞ்சும் பந்தர், கமழும் தாழைக் கானல்அம் பெருந் துறை, | 5 | தண் கடல் படப்பை நல் நாட்டுப் பொருந! செவ் ஊன் தோன்றா, வெண் துவை முதிரை, வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை! குடவர் கோவே! கொடித் தேர் அண்ணல்! வாரார் ஆயினும் இரவலர், வேண்டி, | 10 | தேரின் தந்து, அவர்க்கு ஆர் பதன் நல்கும் நசை சால் வாய்மொழி இசை சால் தோன்றல்!- வேண்டுவ அளவையுள் யாண்டு பல கழிய, பெய்து புறந்தந்து, பொங்கல் ஆடி, விண்டுச் சேர்ந்த வெண் மழை போலச் | 15 | சென்றாலியரோ பெரும அல்கலும் நனந் தலை வேந்தர் தார் அழிந்து அலற, நீடு வரை அடுக்கத்த நாடு கைக்கொண்டு, பொருது சினம் தணிந்த செருப் புகல் ஆண்மை, தாங்குநர்த் தகைத்த ஒள் வாள், | 20 | ஓங்கல் உள்ளத்துக் குருசில்! நின் நாளே. | | துறை:செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணமும் தூக்கும்:அது பெயர்:துஞ்சும் பந்தர் | |
|
|