செல்வக்கடுங்கோ வாழியாதன்  


ஏழாம் பத்து - பதிகம்

மடியா உள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த
நெடு நுண் கேள்வி அந்துவற்கு ஒரு தந்தை
ஈன்ற மகள், பொறையன் பெருந்தேவி, ஈன்ற மகன்,
நாடு பதி படுத்து, நண்ணார் ஓட்டி,
வெருவரு தானை கொடு செருப் பல கடந்து,
5
ஏத்தல் சான்ற இடனுடை வேள்வி
ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி,
மாய வண்ணனை மனன் உறப் பெற்று, அவற்கு
ஓத்திர நெல்லின் ஒகந்தூர் ஈத்து,
புரோசு மயக்கி,
10
மல்லல் உள்ளமொடு மாசு அற விளங்கிய
செல்வக் கடுங்கோ வாழியாதனைக்
கபிலர் பாடினார் பத்துப் பாட்டு.

அவைதாம்:
புலாஅம் பாசறை, வரைபோல் இஞ்சி, அருவி
ஆம்பல், உரைசால் வேள்வி, நாள் மகிழ் இருக்கை, புதல் சூழ்
பறவை, வெண் போழ்க் கண்ணி, ஏம வாழ்க்கை, மண் கெழு
ஞாலம், பறைக் குரல் அருவி: இவை பாட்டின் பதிகம்.
பாடிப் பெற்ற பரிசில்:சிறுபுறம் என நூறாயிரம் காணம்
கொடுத்து, 'நன்றா' என்னும் குன்று ஏறி நின்று, தன் கண்ணிற்
கண்ட நாடு எல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ.
செல்வக் கடுங்கோ வாழியாதன் இருபத்தையாண்டு
வீற்றிருந்தான்.

உரை