19. |
கொள்ளை
வல்சிக் கவர்காற் கூளியர்
கல்லுடை நெடுநெறி போழ்ந்துசுர னறுப்ப
ஒண்பொறிக் கழற்கான் மாறா வயவர்
திண்பிணி யெஃகம் புலியுறை கழிப்பச் |
5 |
செங்கள
விருப்பொடு கூல முற்றிய
உருவச் செந்திணை குருதியொடு தூஉய்
மண்ணுறு முரசங் கண்பெயர்த் தியவர்
கடிப்புடை வலத்தர் தொடித்தோ ளோச்ச
வம்புகளை வறியாச் சுற்றமோ டம்புதெரிந் |
10
|
தவ்வினை
மேவலை யாகலின்
எல்லு நனியிருந் தெல்லிப் பெற்ற
அரிதுபெறு பாயற் சிறுமகி ழானும்
கனவினு ளுறையும் பெருஞ்சால் பொடுங்கிய
நாணுமலி யாக்கை வாணுத லரிவைக் |
15
|
கியார்கொ
லளியை
இனந்தோ டகல வூருட னெழுந்து
நிலங்கண் வாட நாஞ்சில் கடிந்துநீ
வாழ்த லீயா வளனறு பைதிரம்
அன்ன வாயின பழனந் தோறும் |
20
|
அழன்மலி
தாமரை யாம்பலொடு மலர்ந்து
நெல்லின் செறுவி னெய்தல் பூப்ப
அரிநர் கொய்வாண் மடங்க வறைநர்
தீம்பிழி யெந்திரம் பத்தல் வருந்த
இன்றோ வன்றோ தொன்றோர் காலை |
25
|
நல்லம
னளிய தாமெனச் சொல்லிக்
காணுநர் கைபுடைத் திரங்க
மாணா மாட்சிய மாண்டன பலவே. |
துறை
- பரிசிற்றுறைப் பாடாண்பட்டு. வண்ணம் -
ஒழுகுவண்ணமும் சொற் சீர் வண்ணமும். தூக்கு - செந்தூக்கு.
பெயர் - வளனறு பைதிரம் (18)
(ப
- ரை) 1. கவர் கால் - செலவை விரும்பின கால். 2.
சுரன் - வழியில் அருமை.
4.
எஃகம் புலியுறை கழிப்பவென்றது 1எஃகினைப் புலியுறை
கழித்துக் 2கடைவன கடைந்தும் அல்லன 3வாய்கீறியும்
போர்க்குரியவாம்படி பண்ண என்றவாறு.
6.
கூலம் முற்றியவென்றது பண்டமாக முற்றியவென்றவாறு;
இனிப் பலிக்குரிய மற்றைப்பண்டங்கள் குறைவறக்கூடின வென்பாரும்
உளர்.
9.
வம்பு - 4கைச்சரடு. சுரனறுப்பப் (2) புலியுறை கழிப்பத் (4)
தோளோச்ச (8) அவ்வினை மேவலை (10) என முடிக்க.
11.
எல்லு நனியிருந்தென்றது 'பகற்பொழுதின் கண்ணே ஒரு
5வினோதமும் இன்றி நெடுக வருந்தியிருந்தென்றவாறு.
பெற்ற
(11) மகிழ் (12) என முடிக்க.
அரிது
பெறுதலைப் பாயன்மேல் ஏற்றுக. ஈண்டுப் பாயல்
உறக்கம்.
ஊருடனெழுந்து
இனந்தோடகல (16) எனவும், நாஞ்சில்
கடிந்து நிலங்கண் வாட (17) எனவும் கூட்டுக. ஊரெழுந்தென்னும்
முதல் வினையை வழுவமைதியால் இனந்தோடகல வென்னும்
அதன் சினை வினையொடு முடிக்க.
தோடகலக்
(16) கண்வாட (17) அன்னவாயின (19) என முடிக்க.
ஈண்டு ஆயினவென்பது 6தொழிற்பெயர்.
17-8.
நீ வாழ்தலீயாவென்றது நீ பண்டுபோலே குடியேறுக
வென்று வாழ்வுகொடாதவென்றவாறு.
'வாழ்தலீயா'
என்ற அடைச்சிறப்பான் இதற்கு, 'வளனறு
பைதிரம்' என்று பெயராயிற்று.
20.
தாமரை மலரவெனத் திரிக்க.
22.
கொய்வாள் மடங்கவென்றது நெற்றாளின் பருமையாலே
கொய்யும் அரிவாட்கள் தங்கள் வாய் மடியவென்றவாறு.
23.
எந்திரமென்றது ஆலையை. எந்திரமென்னும்
முதலெழுவாயை வழுவமைதியாற்பத்தல் வருந்தவென்னும் அதன்
சினை வினையோடு முடிக்க. பத்தல் வருந்தலாவது பலகாலும்
சாறோடி 7நனைந்து சாதல்.
தாமரை
மலர (20) நெய்தல் பூப்ப (21) வாள் மடங்கப் (22)
பத்தல் வருந்த (23) நல்ல (25) என முடிக்க.
27.
மாணா மாட்சிய மாண்டனவென்றது மாட்சிமைப்படத்
திருத்தினும் மாட்சிமைப்படாத அழகையுடையவாய்ப் பின்னைத்
திருந்தாதவளவேயன்றி உரு மாய்ந்தனவென்றவாறு. மாணாதவற்றை
மாட்சிய வென்றது பண்டு அழகிய ஊரும் வயலுமாய்த்
தான்றிக்கிடந்த பண்புபற்றி எனக் கொள்க. மாட்சியவென்பது
வினையெச்சமுற்று.
இனி
மாணாமாட்சியவென்பதற்குமாணாமைக்குக் காரணமாக
8பெருக்கு முதலாயவற்றின் மாட்சிய என்பாருமுளர்.
பலவாகிய
(27) நீ (17) வாழ்தலீயா வளனறு பைதிரம் (18)
ஊருடனெழுந்து இனம் தோடு அகல (16) நாஞ்சில் கடிந்து
நிலங்கண் வாட (17) அன்ன வாயினவை பழனந்தோறும் (19) தாமரை
ஆம்பலொடு மலர (20) நெல்லின்செறுவில் நெய்தல் பூப்ப (21) அரிநர்
கொய்வாள் மடங்க அறைநர் (22) எந்திரம் பத்தல் வருந்தத் (23)
தொன்றோர்காலை (24) நல்லமன் அளியதாமெனச் சொல்லிக் (25)
காணுநர் கைபுடைத்திரங்க (26) மாணாமாட்சிய மாண்டன (27) எனக்
கூட்டுக. பைதிரம் (18) என்னும் எழுவாய்க்கு மாண்டன (27) என்றது
பயனிலை; அன்னவாயின (19) என்னும் பெயரும் இடையே ஒரு
பயனெனப்படும்.
அன்னவாயின
(19) மாணாமாட்சிய மாண்டன (27) என்றது
பைதிரங்கள் (18) ஊருடனெழுதல் (16) முதலாய வறுமையையுடைய
அளவாய் நின்றன; பின் அவ்வளவினவன்றித் திருத்தவும் திருந்தா நிலைமையவாய் நின்றன;
பின் அவ்வளவுமன்றி 9ஊரும் வயலும்
தெரியாதபடி உருவம் மாய்ந்தன (27) என்றவாறு.
நீ
அவ்வினை மேவலையாயிருந்தாய்; நீ வினையை
மேவுகின்றபடியால் (10) கனவினுள் உறையும் (13) நின்னரிவைக்கு (14)
நீ யார் கொல் (15)? நீ அவள்பால் வாராமைக்குக் காரணம் யாது? நீ
அழிக்க என்று அழிந்த நாடுகள் அழிந்து அற்றால் வருவலெனின்,
ஆம்; அழிக்க அழிந்து நீ பின் வாழ்தலீயாத பைதிரம் (18) காணுநர்
கைபுடைத் திரங்க (26) மாணாமாட்சியவாய் மாண்டன (27); அதனால் அது குறையன்று: நின்
அன்பின்மையே குறை; இனி நீ அவள்பாற் கடிது எழுகென வினைமுடிவு செய்க10.
இதனாற்
சொல்லியது அவன்வென்றிச் சிறப்பும் குலமகளோடு நிகழ்ந்த இன்பச்சிறப்பும் உடன்
கூறியவாறாயிற்று.
பாணன்
பாசறைக்கண் வந்து தேவி ஆற்றாமை கூறி இனி அவள்பாற் போகவேண்டுமென்று இரந்தமையாற்
பரிசிற்றுறையாயிற்று.
'அவ்வினை
மேவலை யாகலின்' (10) எனவும், 'யார்கொ
லளியை' (15) எனவும் சொற்சீர் வந்தமையாற் சொற்சீர் வண்ணமும்
ஆயிற்று.
(கு
- ரை) பாசறையிலிருந்த மன்னன்பால் தூதுவந்த
பாணனது கூற்றாக அமைந்தது இச்செய்யுள்
1.
கொள்ளை வல்சி - வழிப்பறித்த பொருள்களை
உணவாகவுடைய. கவர் - விரும்பும் (தொல்.
உரி. 64). கூளியர்
- மறவர். கொள்ளை வல்சிக் கூளியர் : புறநா. 23
: 5 - 7.
2.
துறுகற்களையுடைய நீண்ட வழியை அகழ்ந்து அருவழியை வரையறுக்க. கற்களையுடைமையானும் அருவழியாதலானும்
படை
செல்லும் பொருட்டு வழியை ஒழுங்கு செய்தனர்.
3.
ஒண்பொறிக் கழற்கால் - தாங்கள் செய்த அரிய போர்த் தொழில்களைப் பொறித்தலையுடைய
ஒள்ளிய கழற்கால் (பதிற்.
34 : 2, உரை).மாறா-வீரத்தினின்றும் மாறுபடாத. வயவர் - வீரர்.
4.
எஃகம் - வேல். புலித்யுறைகழிப்ப - புலித்தோலாற்
'செய்யப்பெற்ற உறையை விட்டு எடுக்க. வேலையும் உறையிற்
செறித்தல் மரபு (பதிற். 24 : 2; புறநா.
323 : 7).5. செங்கள
விருப்பொடு - இரத்தத்தாற் சிவக்கும் போர்க்களத்திற்குச்
செல்லும், விருப்பத்தோடு. கூலம் முற்றிய - கூலமாக நிறைந்த;
கூலம் - தானியம்.
6.
உருவச் செந்தினை - சிவந்த நிறத்தையுடைய தினையை.
குருதியொடு தூஉய் - இரத்தத்தோடு தூவி (பதிற்.
29 : 11 - 2).
தினையையும் குருதியையும் தூவிப் பூசித்தல் வழக்கம் (முருகு.
242;
அகநா. 22 : 10). வீரமுரசத்தை இரத்தத்தைக்
கொண்டு பூசித்தல்:
பதிற். 29.
11 - 2; புறநா. 50 : 5, மணி.
1 : 30 - 31.
7.
மண்ணுறு முரசம் - நீராட்டப்பெற்ற வீரமுரசம்.
கண்பெயர்த்து -அடிக்கும் பக்கத்தைத் திறந்து. இயவர் - வள்ளுவர்
முதலியோர்.
8.
கடிப்பு - குறுந்தடி; தோள் ஓச்ச- தோளால் அடிக்க;
தோள் - கை.
9.
வம்பு களைவு அறியா - கைச்சரடு களைதலை அறியாத.
சுற்றம் - படைவீரர். அம்பு தெரிந்து - அம்புகளை ஆராய்ந்து.
10. அவ்வினையென்றது
போரை, மேவலை - விரும்புதலை
உடையாய்.
கூளியர்
சுரனறுப்பவும் வயவர் எஃகத்தை உறையினின்றும
் கழிப்பவும் இயவர் தோள் ஒச்சவும் நீ சுற்றத்தோடு
அவ்வினையினிடத்தே விருப்ப முடையாயாயினாய்.
11-4.
சேரன் மாதேவியினது நிலைமை கூறப்படும்.
11,
எல்லு - பகலில். நனி இருந்து - நன்றாக நின் பிரிவை
ஆற்றியிருந்து; இருத்தல் - இங்கே ஆற்றியிருத்தல் (தொல்.
அகத்.
14). எல்லி - இரவில்.
12.
அரிதிற் பெறுகின்ற துயிலின்கண் உண்டாகும் சிறுமகிழச்சிக்
காலத்தும்.
11-3.
பகலெல்லாம் ஆற்றியிருந்து இரவிற் சிறிதுநேரம்
துயின்றாலும் அந்நேரத்தும் கனவு கண்டு வருந்தினாளென்றபடி.
13-4.
பெருஞ்சால்பினால் ஒடுங்கிய யாக்கையையும், நாணுமலி
யாக்கை யையும் உடைய அரிவை.
15.
யார்கொல் - என்ன உறவுடையை? என்றது அவள்பால்
அன்பிலன்போலப் பிரிவு நீட்டித்தாயென்ற குறிப்பினது.
16.
இதுமுதல் சேரனுடைய பகைவர் நாட்டின் நிலை
கூறப்படும்.
ஊரினர்
ஒருங்கே எழுந்து இனத்தினரும் பசு முதலிய
தொகுதியும் விட்டு நீங்க.
17.
உழுவாரின்றிக் கலப்பைகள் வெறுக்கப்பட்டு அதனால்
நிலம் வளப்பமின்றிப் பொலிவழிய; "நாடுவறங் கூர நாஞ்சி றுஞ்ச"
(அகநா. 42 : 5)
18.
வளன் அறு பைதிரம் - வளப்பம் அற்ற பகைவர் நாடுகள்.
19.
அன்னவாயின - அகலவும், வாடவும் பெற்ற
அந்நிலையினவாயின. பழனம் - வயலைச் சார்ந்த பொய்கை.
20.
அழல்மலி : மலி, உவம உருபு; அழல்போன்ற மிக்க
தாமரை எனலும் ஆம். தாமரைக்கு நெருப்பு உவமை: பதிற்
23 : 23;
பெரும்பாண். 289 - 90. குறிப்புரை. 21.
செறு - வயல்.
22.
கொய்வாள் - அரிவாள். அறைநர் - கரும்பை
வெட்டுதலுடையோர்; அறை - வெட்டுதல்; "அறைக் கரும்பு"
(பொருந. 193)
23.
தீம்பிழி எந்திரம் - இனிய சாற்றை எடுக்கும் கரும்பாலை.
பத்தலென்றது கரும்பின் சாறு விழும் கூனை; அது சாற்றின்
மிகுதியால் வருந்தியது.
24. இன்றோ
அன்றோ: ஓகாரங்கள் அசைநிலை.
25.
தாம் நல்லமன்; மன் ஒழியிசையின்கண் வந்தது.
27.
மாணாமாட்சிய - மாட்சிமைப்படாத தன்மையை
யுடையவாயின. மாண்டன பல - முன்பு மாட்சிபெற்றிருந்தனவாகிய
பல பைதிரங்கள்.
மாண்டன
பல ஒருகாலை நல்ல, அளிய எனச்சொல்லி்இரங்க,
மாணாமாட்சியவாயின வென்க; உரையாசிரியர் வேறுவிதமாக முடிப்பர்.
(பி
- ம்.)
4, கழிப்பிச். 12. சிறுமதிமானும். 23.பத்தர் வருந்த.
(9)
1எஃகென்றது
ஆயுதப் பொது.
2கடைவன
அம்புகள்
3வாய்கீறுதல்
- தீட்டுதல்; வேலும் வாளும் தீட்டற்குரியன.
பண்ண - சித்தம் செய்ய.
4கைக்கு
அணியும் தோலாலாகிய கவசம்.
5வினோதம்
- பொழுதுபோக்குக்குரிய விளையாட்டு.
6தொழிற்பெயர்
- வினையாலணையும் பெயர்.
7நைந்து
சாதலென்றிருப்பின் சிறக்கும்.
8பெருக்கு
- மிக்க வெள்ளம்.
9"ஊரறிய
லாகா கிடந்தனவே" (முத்)
10இம்முடிவில்
உரையாசிரியர் பல செய்திகளை
இசையெச்சத்தால் வருவித்து உரைத்தனர்.
|