23. |
அலந்தலை
யுன்னத் தங்கவடு பொருந்திச்
சிதடி கரையப் பெருவறங் கூர்ந்து
நிலம்பை தற்ற புலங்கெடு காலையும்
வாங்குபு தகைத்த கலப்பைய ராங்கண் |
5 |
மன்றம்
போந்து மறுகுசிறை பாடும்
வயிரிய மாக்கள்
கடும்பசி நீங்கப்
பொன்செய் புனையிழையொலிப்பப் பெரிதுவந்து
நெஞ்சுமலி யுவகைய ருண்டுமலிந் தாடச்
சிறுமகி ழானும் பெருங்கலம் வீசும் |
10 |
போரடு
தானைப் பொலந்தார்க் குட்டுவ
நின்னயந்து வருவேங் கண்டனம் புன்மிக்கு
வழங்குந ரற்றேன மருங்குகெடத் தூர்ந்து
பெருங்கவி னழிந்த வாற்ற வேறுபுணர்ந்
தண்ணன் மரையா வமர்ந்தினி துறையும் |
15 |
விண்ணுயர்
வைப்பின காடா யினநின்
மைந்துமலி பெரும்புக ழறியார் மலைந்த
போரெதிர் வேந்தர் தாரழிந் தொராலின்
மருதிமிழ்ந் தோங்கிய நளியிரும் பரப்பின்
மணன்மலி பெருந்துறைந் ததைந்த காஞ்சியொடு
|
20 |
முருக்குத்தாழ்
பெழிலிய நெருப்புற ழடைகரை
நந்து நாரையொடு செவ்வரி யுகளும்
கழனி வாயிற் பழனப் படப்பை
அழன்மருள் பூவின் றாமரை வளைமகள்
குறாஅது மலர்ந்த வாம்பல் |
25 |
அறாஅ
யாணரவ ரகன்றலை நாடே. |
துறை
- வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் -
ஒழுகுவண்ணம். தூக்கு - செந்தூக்கு. பெயர் - ததைந்த காஞ்சி
(19)
(ப
- ரை) 1.
அலந்தலையெனல் விகாரம்.
15.
விண்ணுயர் வைப்பின காடென்றது மரங்கள் விண்ணிலே
செல்ல வோங்கி.....................; மாறியுரைப்பாரு முளர்.
19.
ததைந்த காஞ்சியென்றது 1விளையாட்டுமகளிர் பலரும்
தளிரும் முறியும் தாதும் பூவும் கோடலாற் சிதைவுபட்டுக் கிடக்கின்ற
காஞ்சியென்றவாறு.
இச்சிறப்பானே
இதற்கு, 'ததைந்த காஞ்சி' என்று
பெயராயிற்று.
23-4.
வளைமகள் குறாஅது மலர்ந்த ஆம்பலென்றது
விளையாட்டு மகளிர் குறுதற்கு எட்டாமையாலே மலர்ந்த
ஆம்பலென்றவாறு.
குறாமலெனத்
திரிக்க.
குட்டுவ
(10), போரெதிர் வேந்தர் தாரழிந்து ஓராலின் (17),
அவர் அகன்றலை நாடு (25) காடாயின (15); அதனை நின்னயந்து
வருவேம் கண்டனம் (11) எனக்கூட்டி வினைமுடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவன் வென்றிச்சிறப்புக்
கூறியவாறாயிற்று.
போரெதிர்வேந்தர்
தாரழிந்து ஓராலின் (17), நாடு (25)
காடாயின (15) என எடுத்துச்செலவினை மேலிட்டுக் கூறினமையால்
2வஞ்சித்துறைப் பாடாணாயிற்று.
(கு
- ரை) 1. அலந்தலை = அலந்த தலை - இலையின்றி
வறிதாகிய தலை; "அலந்தலை வேலத்து" (பதிற். 39 : 12).
உன்னம்
- இலவென்பர். கவடு - கிளை.
2.
சிதடி - சிள்வீடென்னும் வண்டு. வறம் - வறுமை.
3.
பைது-பசுமை. புலங்கெடு காலையும் - விளைநிலங்கள்
விளைவின்றிக் கெட்ட காலத்தும்.
4.
நரம்பை இழுத்துக்கட்டிய யாழ்முதலிய இசைக் கருவிகளைக்
கொண்டபையினை உடையராகி; கலம் - யாழ் முதலிய
இசைக்கருவிகள்.
5.
மன்றம் - பரிசிலர் தங்கும் பொது இடம். மறுகு சிறைபாடும்.
சென்று மீளும் பக்கமாகிய இசைத் துறைகளைப் பாடும்; மறுகு
சிறையென்றது ஆரோகண அவரோகணக் கிரமம் போன்ற ஓர் இசை
முறைபோலும்.
6.
வயிரிய மாக்கள் - கூத்தரும் பாணரும்; கடும்பசி - மிக்க
பசி.
5-6.
பாடுவார் மன்றம் நண்ணிமறுகு சிறை பாடுதல் : பதிற்.
29 : 8 - 9, 43 : 26 - 8.
7.
புனையிழை - அலங்கரிக்கப்பெற்ற ஆபரணம். இது
சேரனால் அணியப் பெற்றது.
8.
உண்டு மலிந்து ஆட - கள்ளையுண்டு மகிழ்ச்சி மிக்கு
ஆடுதலைச் செய்ய. உண்டாட்டு என்னும் சொல் இங்கே
அறிதற்குரியது.
9
- 10. சிறிய அளவினையுடைய கள்ளுண்டு மகிழ்ச்சிபெற்ற
காலத்தும் பெரிய ஆபரணங்களை வழங்குகின்ற; சிறுசோறு,
பெருஞ்சோறு எனபன போலச் சிறியகள், பெரியகள் என
அளவுபற்றிக் கூறுதல் மரபு (புறநா. 235 :
1-2); கள்ளுண்டு மகிழும்
மகிழ்ச்சியை, மகிழ் என்று சொல்லுதல் வழக்காதலின், சிறுமகிழ்
என்றது சிறிய கள்ளுண்ட மகிழ்ச்சி என்பதைக் குறித்தது. கள்ளுண்ட
காலத்துப் பெருங்கொடை வழங்குதல் உபகாரிகளுக்கு இயல்பு.
இங்கே சிறுகள்ளுண்டு பெருங்கலம் வீசுதல் இயல்பாகவே அவன்
கொடையிற் சிறந்தவன் என்பதைப் புலப்படுத்தியது. "நாட்கள் ளுண்டு
நாண்மகிழ் மகிழின், யார்க்கு மெளிதே தேரீ தல்லே, தொலையா
நல்லிசை விளங்கு மலையன், மகிழா தீத்த விழையணி நெடுந்தேர்,
பயன்கெழு முள்ளூர் மீமிசைப் பட்ட மாரி யுறையினும் பலவே"
(புறநா. 123) என்பதும் அதன் உரை முதலியனவும்
இக்கருத்தைத்
தெளிவுறுத்தும்.
10.
பொலந்தார் - பொன்னரிமாலை.
1-10.
நிலவளம் அற்ற வறுமைக்காலத்தும் சேரன்
பெருங்கொடை வழங்குவான் என்றபடி.
11.
நின் நயந்து-நின்னைக் காண விரும்பி. புல் மிக்கு -
அறுகம்புல் முதலியவை மிக வளரப்பெற்று.
12.
வழங்குநர் - வழிச்செல்வோர்.
13.
ஆற்ற - வழிகளையுடைய. ஏறு புணர்ந்து -
ஆண்மரையோடு கூடி. ஆற்ற (13) காடாயின (15) என்க.
14.
அண்ணல் மரையா - தலைமையையுடைய மரையா.
அமர்ந்து - விரும்பி.
16.
மைந்து மலி பெரும் புகழ் - வன்மையினால் மிக்க பெரிய
புகழை. அறியாராய் மலைந்த என்க.
17.
போர் எதிர் வேந்தர் - போரை ஏற்றுக்கொண்ட அரசர்.
தார் அழிந்து ஓராலின் - தூசிப்படை கெட்டொழிய நீங்குதலால்.
18-9.
மருது இமிழ்ந்து - மருதமரம் தன்னிடத்தே பறவைகள்
ஒலிக்க; இமிழ்ந்து - இமிழ; எச்சத்திரிபு. மருதுமலி பெருந்துறை:
"துறைநணி மருதமேறி" (பதிற். 27 : 6);
"உயர்சினை மருதத்
துறையுறத் தாழ்ந்து", "துறைநணி மருதத்து" (புறநா.
243 : 6, 344 : 3).
நளியிரும் பரப்பின் - செறிந்த பெரிய பரப்பினையுடைய. ததைந்த -
சிதைந்த. காஞ்சி - காஞ்சியென்னும் மரம்.
20.
முருக்கு தாழ்பு எழிலிய - முள்ளுமுருங்கையின் பூக்கள்
நீரிலே தங்குதலால் அழகு பெற்ற. நெருப்பு உறழ் அடைகரை -
நெருப்பை ஒத்த நீரை அடைந்த கரையில். முள்ளுமுருங்கையின்
பூவிற்கு நெருப்பு உவமை. "பொங்கழன் முருக்கி னொண்குரல்"
(அகநா. 277 : 17)
21.
நந்து - சங்கு
22.
பழனப் படப்பை - பொய்கையை அடுத்த
விளைநிலத்திலுள்ள.
23.
அழல் மருள் - நெருப்பை ஒத்த. தாமரைப் பூவிற்கு
நெருப்பு உவமை: பதிற், 19 : 20,
குறிப்புரை. பூவின் தாமரை :
முதலுக்கேற்ற அடை.
24.
குறாஅது - பறிக்கப்படாமல்.
23-4.
தாமரையும் ஆம்பலும்.
25.
அறாஅ யாணர் - இடையறாத புதிய வருவாயையுடைய,
அகன்றலை நாடு............அகன்ற இடத்தையுடைய நாடுகள் (3)
(பி
- ம்) 15. காடாயினவே.
1மகளிர்
காஞ்சி கொய்தல்: "கொய்குழை யகைகாஞ்சித்
துறையணி நல்லூர" (கலித். 74
: 5)
2பதிற்.
22, உரை.
|