29. |
அவலெறிந்த
வுலக்கை வாழைச் சேர்த்தி
வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும்
முடந்தை நெல்லின் விளைவயற் பரந்த
தடந்தா ணாரை யிரிய வயிரைக் |
5 |
கொழுமீ
னார்கைய மரந்தொறுங் குழாஅலின்
வெண்கை மகளிர் வெண்குரு கோப்பும்
அழயா விழவி னிழியாத் திவவின்
வயிரிய மாக்கள்
பண்ணமைத் தெழீஇ
மன்ற நண்ணி மறுகுசிறை பாடும் |
10 |
அகன்கண்
வைப்பி னாடும னளிய
விரவுவேறு கூலமொடு குருதி வேட்ட
மயிர்புதை மாக்கண் கடிய கழற
அமர்கோ ணேரிகந் தாரெயில் கடக்கும்
பெரும்பல் யானைக் குட்டுவன் |
15 |
வரம்பி
றானை பரவா வூங்கே. |
துறை
- வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு. வண்ணமும்
தூக்கும் அது. பெயர் - வெண்கை மகளிர் (6)
(ப
- ரை)
3. முடந்தை நெல்லென்றது கதிர்க்கனத்தாலே
வளைந்து முடமான நெல்லென்றவாறு; முடந்தையென்பது
பெயர்த்திரிசொல்; இனிப் பழவழக்கென்பது மொன்று.
5.
கொழுமீனார்னாகய வென்றது..........................
6.
இச்சிறப்பானே இதற்கு, 'வெண்கைமகளிர்'
என்று
பெயராயிற்று. இனி வெண்சங்கணிந்த கையென்பாருமுளர்; இனி
1அடுகை முதலாகிய தொழில் செய்யாத கையென்பாருமுளர்.
7.
திவலையுடைய யாழ் திவவெனப்பட்டது.
குட்டுவன்
வரம்பில் தானை பரந்த இப்பொழுது அழிந்து
கிடக்கின்ற இந்நாடுகள், குட்டுவன் (14) வரம்பில் தானை பரவாவூங்கு
(15) முடந்தை நெல்லின் விளைவயற்பரந்த (3) நாரையிரிய (4)
வெண்கை மகளிர் வெண்குரு கோப்புதலையுடையவாய் (6) அழியாத
விழவினையும் இழியாத திவவினையு முடையவாய் (7) வயிரியமாக்கள்
எழீஇ (8) மன்ற நண்ணி மறுகு சிறைபாடும் (9), இப்பெற்றிப்பட்ட
சிறப்பையுடைய அகன்கண் வைப்பினாடு இப்பெற்றியெல்லாமழிந்து
கண்டார்க்கு அளித்தலையுடைய (10) என வினை முடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவன் வென்றிச்சிறப்புக்
கூறியவாறாயிற்று.
வரம்பிறானை
பரவாவூங்கென எடுத்துச்செலவினை மேலிட்டுக்
கூறினமையால் வஞ்சித்றைப் பாடாணாயிற்று.
(கு
- ரை) 1. பச்சை அவலை இடித்த உலக்கையை
அருகிலுள்ள வாழை மரத்தில் சார்த்திவிட்டு. 2. வளையைக்
கையிலே அணிந்த மகளிர் வள்ளையைக் கொய்தற்கு இடமாகிய.
1-2.
"பாசவ லிடித்த் கருங்கா ழுலக்கை, ஆய்கதிர் நெல்லின்
வரம்பணைத் துயிற்றி ஒண்டொடிமகளிர் வண்ட லயரும்" (குறுந்.
288 : 1 - 3)
3.
கதிரின் கனத்தால் வளைவையுடைய நெல்லையுடைய
விளையும் வயல்களிடத்திலே பரவியுள்ள; மடத்தையுடையாள்
மடந்தையானாற் போல முடத்தையுடையது முடந்தையாதயிற்று;
"முடந்தைநெல்" (பதிற். 32 ; 13)
4,
இரிய - நீங்க.
4-5.
அயிரையாகிய கொழுவிய மீனை உண்ணுதலை
யுடையனவாய் மரந்தோறும் கூடித் தங்குதலால்.6. வெண்குருகு -
வெள்ளிய பறவைகள்.
4-6.
குருகு ஒப்பிய ஒலியால் நாரைகளும் இரிந்தன: வெண்
குருகு என்பதைச் சுட்டுப் பொருளதாக்கி முற்கூறிய நாரைகள் என்று
பொருள்கொள்ளுதலும் ஒன்று; நாரை அயிரைமீன் உண்ணுதல்;
குறுந். 128 : 1 - 3, ஒப்புமைப்.
7.
அழியா விழவு: பதிற். 15 : 18. இழியாத்
திவவின் -
சுருதியிறங்காத நரம்புக்கட்டுக்களோடு கூடிய யாழையுடைய. திவவு
இங்கே யாழுக்கு ஆயிற்று; ஆகுபெயர். இது வயிரிய மாக்களுக்கு
அடை.
8.
வயிரிய மாக்கள் - கூத்தர். பண்ணமைத்து எழீஇ -
பண்களை நன்றாக அமைத்து இசையை எழுப்பி.
9.
மன்றம் - பொதுவிடம். 8-9. பதிற். 23
: 5 - 6, உரை.
10.
அகன்கண் வைப்பின் நாடு - அகன்ற இடத்தையுடைய
ஊர்களையுடைய பகைவர் நாடுகள். அளிய - இரங்கத்தக்கன. மகளிர்
குரு கோப்புதற்கு இடமானவும் விழவினையுடையனவும்
வயிரியமாக்கள் பாடுவதற்கு இடமானவும் ஆகிய வைப்பையுடைய
நாடுகள் என்க.
11.
கலந்த பலவகைப்பட்ட தானியங்களோடு இரத்தத்தைப்
பலியாக விரும்பிய.
12.
மயிரொடு கூடிய தோல்போர்த்த முரசினது கரிய அடிக்கும்
பக்கம் கடுமையாக முழங்க. "மயிர்க்கண் முரசு" (சிலப்.
5 : 88)
என்பதும், 'புலியைப் பொருது கொன்று நின்று சிலைத்துக்
கோட்டுமண் கொண்ட ஏறு இறந்துழி அதன் உரிவையை மயிர்
சீவாமற் போர்த்த முரசு" என்னும் அதனுரையும் இங்கே
அறிதற்பாலன. 11-2. பதிற்.19:6, உரை.
13.
அமர்கோள் நேர்இகந்து - போரை விரும்பிக்
கொள்ளுதலில் ஒப்புமை நீங்க; இகந்து-இகப்ப. ஆரெயில் கடக்கும்
- பகைவரது அரிய மதிலை வஞ்சியாது எதிர்நின்று வென்று
கைக்கொள்ளும்.
14.
பெரும்பல் யானை: பதிற். 77 : 11 - 2
. பல்யானைச்
செல்கெழு குட்டுவனென்பது இப்பத்தின் பாட்டுடைத் தலைவனான
சேரனது பெயர்.
15.
தானை-சேனை. பரவாவூங்கு - பரவிச் செல்லுதற்கு முன்பு.
குட்டுவன்
(14) தானை பரவாவூங்கு (15) வயிரிய மாக்கள் (8)
மறுகு சிறைபாடும் (9) அகன்கண் வைப்பின் நாடு மன் அளிய (10)
என முடிக்க.
மு.
'இதில் இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு
குட்டுவனைப் பாலைக் கௌதமனார் துறக்கம் வேண்டினாரென்பது
குறிப்புவகையாற் கொள்ளவைத்தலின் இது வஞ்சிப்பொருள்வந்த
பாடாணாயிற்று' (தொல். புறத் .25, ந.)
(பி
- ம்.) 1. அவலெறியுலக்கை. 5. குமுறலின், குழறலின். (9)
1பதிற்.18:
6, உரை பார்க்க. |