32. |
மாண்டனை
பலவே போர்மிகு குருசினீ
மாதிரம் விளக்குஞ் சால்புஞ் செம்மையும்
முத்துடை மருப்பின் மழகளிறு பிளிற
மிக்கெழு கடுந்தார் துய்த்தலைச் சென்று |
5 |
துப்புத்துவர்
போகப் பெருங்கிளை யுவப்ப
ஈத்தான் றானா விடனுடை வளனும்
துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும்
எல்லா மெண்ணி னிடுகழங்கு தபுந
கொன்னொன்று மருண்டனெ னடுபோர்க் கொற்றவ |
10 |
நெடுமிடல்
சாயக் கொடுமிட றுமியப்
பெருமலை யானையொடு புலங்கெட விறுத்துத்
தடந்தா ணாரை படிந்திரை கவரும்
முடந்தை நெல்லின் கழையமல் கழனிப்
பிழையா விளையு ணாடகப் படுத்து |
15 |
வையா
மாலையர் வசையுநர்க் கறுத்த
பகைவர் தேஎத் தாயினும்
சினவா யாகுத கலிரும்பூதற் பெரிதே. |
இதுவுமது.
பெயர் - கழையமல் கழனி (13)
(ப
- ரை)
8. இடுகழங்கு
தபுநவென்றது இடுகழங்கும்
1அலகுதபுதற்குக் காரணமாக இருப்பனவென்றாறு.
தபுநவென்றது
பெயர்த்திரிசொல்.
10.
நெடுமிடல் - அஞ்சியின் இயற்பெயராம். கொடுமிடல் :
மிடல் -வலி; என்றது வலியாற் செய்யப்படும் போரினை.
13.
முடமாகிய கழையென இருபெயரொட்டு. நெல்லின் கழை
- நெல்லினது கழை.
நெற்றாளை
அதன்பருமையாலே மூங்கிலொடு ஒப்புமைபற்றிக்
2கழை யென்று பெயர்கொடுத்த சிறப்பான் இதற்கு, 'கழையமல்
கழனி' என்று பெயராயிற்று.
15.
வையா மாலையரென்றது ஒன்றில் வகைபடாத
இயல்பையுடைய ரென்றவாறு.
15-6.
வசையுநர்க் கறுத்த பகைவரென்றது தங்கள் பகைவரொடு
செற்றம் கொண்டாடாது ஒழிந்திருக்க வேண்டுமளவினும் ஒழியாது
அவர்களை அக்கடப்பாடன்றி வெகுண்டிருத்தாலே தொழிலாகவுடைய
பகைவரென்றவாறு.
வசையுநர்
- பகைவர்; வசையுநரென்றது பெயர்த்திரிச்சொல்.
இனிக் ககரவொற்றின்றி 'வசையுநர் கறுத்த' என்பது பாடமாயின்,
அதனை வினையெச்சவினைக்குறிப்புமுற்றுத் திரிசொல்லாக்கி,
வசைசொல்லுதலுடையவராய் வெகுண்ட பகைவரென்று
உரைப்பாருமுளர்.
குருசில்,
நீ பல குணங்களும் மாட்சிமைப்பட்டனை (1); அப்
பல குணங்களும் எண்ணப்புகின் இடுகழங்கு தபும்
எல்லையவாயிருக்கும் (8); கொற்றவ, பல குணத்தினும் ஒன்றைக்
கொன்னே யான் வியந்தேன் (9); அப்பலவற்றுள்ளும் வியப்பான
குணம் யாதெனின், பகைவர் செய்த குற்றத்திற்குத் தண்டமாக
அவர் நாட்டை அகப்படுத்திக் கொண்டு (14) வையா மாலையராகிய
வசையுநர்க்கறுத்த (15) அப்பகைவரிடத்தாயினும் நீ (16)
சினவாதொழிகின்ற பொறை எமக்குப் பெரிதும் வியப்பாகா நின்றது
(17) என வினைமுடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவற்குள்ள பல குணங்களையும்
உடனெண்ணிப் புகழ்ந்து அவற்றுட் பொறையுடைமையை மிகுத்துப்
புகழ்ந்த வாறாயிற்று.
(கு
- ரை) 2. மாதிரம் விளக்கும் - திசைகளை விளங்கச்
செய்கின்ற. சால்பும் செம்மையும் - நற்குணங்களும் நடுவுநிலைமையும்.
3. முத்தையுடைய மருப்பினையுடைய இளைய ஆண்யானைகள்
பிளிறும்படி.
4.
மிக்கு எழு கடுந்தார் துய்த்தலைச் சென்று - போரில்
வேட்கைமிக்குச் செல்லுகின்ற விரைவையுடைய தூசிப்படை பகைவர்
நாட்டின் கோடி வரையிற் சென்று.
5.
துப்பு துவர் போக - வலியின்கண் முற்றவும் உயர்ந்து
நிற்க. பெருங்கிளை உவப்ப - பெரிய சுற்றத்தார் உவக்கும்படி; கிளை
என்றது பாணர் முதலியோரை.
6.
ஈத்து ஆன்று ஆனா இடனுடை வளன் - தான் பெற்ற
அரிய பொருள்களைக் கொடுத்தலிலே அமைந்தும் குறையாத
செல்வத்தின் மிகுதியும்; இடன் - செல்வம்; "இடனில் பருவத்தும்"
(குறள், 218)
7.
துளங்கு குடி திருத்திய - நடுக்கமுற்ற தன் குடியை
மேம்படுத்திய. மு. பதிற். 37 : 7; 4-ம்
பதிகம், 12.
8.
எல்லாம் எண்ணின்-சால்பும் செம்மையும் வளனும்
வென்றியும் ஆகிய நின் குணங்கள் எல்லாவற்றையும் எண்ணினால்.
இடு கழங்கு தபுந - எண்ணுதற்கு இடப்படும் கழற்சிக்காய்கள்
போதாமைக்குக் காரணமாயிருக்கும். கழங்கு தபுந; பதிற்.
15 : 5,
குறிப்புரை.
9.
கொன் ஒன்று மருண்டனென் - அக்குணங்களுள்
பெரிதாகிய ஒன்றை வியந்தேன். கொன் : பெருமையைக் குறிக்கும்
இடைச்சொல்.
10.
நெடுமிடல் - அஞ்சி யென்னும் தலைவன். கொடு மிடல்
துமிய - கொடிய வலியாற் செய்யும் போர் கெடும்படி.
11.
பெரிய மலையைப் போன்ற யானைப் படையோடு பகைவர்
நாடு கெடும்படி சென்று தங்கி.
12.
தடந்தாள் நாரை-வளைந்த காலையுடைய நாரை. இரை
கவரும் (12) கழனி (13) என்க.
13.
முடந்தை நெல்லின்-கதிர்க்கனத்தின் மிகுதியால் வளைந்த
நெல்லினது (பதிற். 29 :3) நெல்லின் கழை
- நெல்லின் தாள். அமல்
கழனி - செறிந்த வயல்களையுடைய
14.
பிழையா விளையுள் நாடு அகப்படுத்து - தப்பாத
விளைச்சலை யுடைய நாடுகளைக் கைப்பற்றி. அகப்படுத்தல் சேரன்
தொழில்.
15-6.
பகைவரது இயல்பு.
15.
வையா மாலையர் - ஒரு தன்மையிலே வைத்து
எண்ணப்படாதவராகி. வசையுநர்க் கறுத்த - தங்கள் பகைவரைக்
கோபித்த.
16.
பகைவர் தேஎத்தாயினும் - நின் பகைவரிடத்தாயினும்.
17.
சினவாயாகுதல் பெரிது இறும்பூது - கோபங
கொள்ளாயாயிருத்தல் மிகவும் வியப்பைத் தருவது.
1-17.
சேரன் பல இயல்புகளால் மாட்சிமைப் பட்டானாயினும்
அரசர் மாட்டு அரிதிற் காணப்படுவதும் எல்லாவற்றினும்
சிறந்ததுமாகிய பொறையைப் பாராட்டிக் கூறினார். அரசனுக்குப்
பொறை சிறப்பாதல். பதிற்.17 : 1 - 3;
கலித்.133 : 14; புறநா,.2
: 1
- 7; குறள்,151 , 579. பழ.19.
(பி
- ம்.) 14. பிழையாவிழையினாடு (2)
1அலகு
- கணக்கு.
2கழையென்பதை
மூங்கிலாக்கி அதனைப் போன்றநெற்றாளுக்கு
ஆகுபெயராக்கினர்.
|