33. |
இறும்பூதாற்
பெரிதே கொடித்தே ரண்ணல்
வடிமணி யணைத்த பனைமரு ணோன்றாட்
கடிமரத்தாற் களிறணைத்து
நெடுநீர துறைகலங்க |
5 |
மூழ்த்திறுத்த
வியன்றனையோடு
புலங்கெட நெரிதரும் வரம்பில் வெள்ளம்
வாண்மதி லாக வேன்மிளை யுயர்த்து
வில்லிசை யுமிழ்ந்த வைம்முள் ளம்பிற்
செவ்வா யெஃகம் வளைஇய வகழிற் |
10 |
காரிடி
யுருமி னுரறு முரசிற்
கால்வழங் காரெயில் கருதிற்
போரெதிர் வேந்த ரொரூஉப நின்னே. |
துறை
- வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம் -
ஒழுகுவண்ணம். தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும். பெயர்
- வரம்பில் வெள்ளம்.
(ப
- ரை)
2-3. நோன்றாட் களிறென
மாறிக் கூட்டுக.
5.
வியன்றானை யென்றது பகைவர்நாட்டு எல்லையின்
1முற்பாடு சென்றுவிட்ட தூசிப்பெரும்படையை.
6.
வரம்பில் வெள்ளமென்றது அதனோடு கூடி நாட்டுள்ளுச்
சென்றுவிடும் பேரணிப் பெரும்படையை. கரையையுடைய கடலை
வரம்புடைய வெள்ளமென்றாக்கி இதனை வரம்பில் வெள்ளமென்று
கூறிய சிறப்பான் இதற்கு, 'வரம்பில் வெள்ளம்'
என்று பெயராயிற்று.
வெள்ளமென
மகரவொற்றுக் கெடாமையன் 2இருபெயரொட்டுப்
பண்புத்தொகையன்றி ஒரு பொருளாக 3இருபெயர் நின்றதாக்கிக்
கொள்க.
6-11.
படைவெள்ளத்தை ஆரெயிலென்றது அரசன்றனக்கு
ஆரெயில்போல அரணாய் நிற்றலினெனக் கொள்க.
இனிக்
4கால்வழங்காரெயிலெனக் காற்றல்லது வழங்கா
ஆரெயிலென்று பகைவர்மதிலாக்கி, அதனை வரம்பில்வெள்ளம்
கொள்ளக்கருதினென்று உரைப்பாருமுளர்.
7.
உயர்த்தென்பதனை உயர்த்தவெனத் திரித்து, அதனை
எஃகம் வளைஇய (9) என்பதனோடு முடிக்க.
செவ்வாயெஃகம்
வளைஇய அகழினையும் (9)
வில்லிசையுமிழ்ந்த அம்பாகிய வைம்முள்ளினையுமுடைய (8)
ஆரெயில் (11) என மாறிக் கூட்டுக.
செவ்வாயெஃகமென்றது
5முனைமுகத்திற் செல்லாது ஒழிந்த
கூர்வேற் கருவிகளையெனக் கொள்க.
இனி,
வாள் மதிலாகவென்று வைத்துப் பின்னை
ஆரெயிலென்றது வாண்மதிலைச் சூழ்தலையுடைய ஆராகிய
எயிலினையெனக் கொள்க; ஈண்டு ஆராவது காலாள் வழங்கிச்
செல்கின்ற படையின் திரட்சி. இனி வரம்பில் வெள்ளமானது
வாள்மதிலாக வேல்மிளை உயர்த்துக் கால் வழங்கு ஆர்
எயிலாதலைக் கருதினென்றலும் ஒன்று.
அண்ணல்,
இது பெரிதும் இறும்பூதாயிருந்தது (1); யாதெனின்,
வரம்பில் வெள்ளம் (6) கால்வழகாரெயிலெனச் சொல்லப்பட்ட
நின்படை போர்செய்யக் கருதின்
(11) நின்னோடு போரெதிர்ந்த
வேந்தர் பொரமாட்டாது நின்னை நீங்குவர் (12); இஃது அதுவென
வினைமுடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவன்வென்றிச் சிறப்புக்
கூறியவாறாயிற்று.
வரம்பில்
வெள்ளங் கருதினென எடுத்துச்செலவினை
மேலிட்டுக் கூறினமையான் வஞ்சித்துறைப் பாடணாயிற்று.
'கடிமரத்தான்'
(3) என்றது முதலாக மூன்றடி வஞ்சியடியாக
வந்தமையான் வஞ்சித் தூக்குமாயிற்று.
(கு
- ரை) 1. இறும்பூது - வியப்பு. ஆல்: அசை.
2-3.
திருந்திய மணியைப் பக்கத்திலே கொண்ட
துடியையொத்த வலியதாளையுடைய யானையைப் பகைவரது
கடிமரத்திலே கட்டி; நோன்றாட் களிறெனக் கூட்டுக. பகைவரது
காவல் மரத்தில் களிற்றைக் கட்டுதல் மரவு (புறநா.
57 : 10 - 11.
162 : 5 - 6. 336 : 4)
4.
நெடு நீர துறை கலங்க - ஆழமாகிய நீரையுடைய
குளங்களின் துறைகள் கலங்கும்படி. பகைவர் நாட்டிலுள்ள
நீர்நிலைகள் உடைத்தல் மரபு; "கரும்பொடு காய்நெற் கனையெரி
யூட்டிப், பெரும்புனல் வாய் திறந்த பின்னும்" (பு. வெ. 56)
5.
மொய்த்துச் சென்று தங்கிய பரந்த படையோடு. மூழ்த்தல்
- மொய்த்தல் (பரி. 10 : 18; பெருங்.
1. 56 : 49)
6.
பகைவர் நாடு கெடும்படி வளைந்து செல்லும் எல்லையற்ற
வெள்ளம் போன்ற படை. வெள்ளம் - ஓரெண் எனலும் ஆம்.
7.
வாட்படையே மதிலாகும்படி வேலாகிய காவற்காட்டை
உயரச் செய்து. வேல்மிளை: "வேன்மிடைந்த வேலியும்" (சீவக.
279,
1846)
8.
விற்பொறிகள் விடுத்த கூரிய முள்ளைப்போன்ற
அம்பினையுடைய.
9.
சிவந்த வாயையுடை படைக் கருவிகள் வளைந்த
அகழையும். எஃகம் - ஆயுதப் பொது.
10.
மேகத்தினின்று இடிக்கும் இடியைப் போல முழங்கும்
முரசினையுடைய.
11.
காலால் நடக்கின்ற வெல்லுதற்கரிய அரண், போர்
செய்தலைக் கருதினால்.
7-11.
படையை அரணமாக உருவகம் செய்தார். மதில், மிளை,
அகழ் என்பன அரணத்தின் உறுப்பாதலால் வாட்படையையும் வேற்
படையையும் அம்பொடுகூடிய படையையும் அம்மூன்றாக
உருவகித்தார்.
வரம்பில்
வெள்ளமாகிய (6) கால் வழங்கு ஆரெயில் (11) என்று
கூட்டுக.
12.
போரை ஏற்றுக் கொண்ட பகையரசர் தம் கருத்தழிந்து
நின்னை விட்டு நீங்குவார்.
போர்
செய்ய வேண்டாதே எடுத்துச் சென்ற மாத்திரத்திலே
பகையரசர் அஞ்சி ஓடுதல் வியப்புத் தருவதாயிற்று.
மு.
இஃது இயங்குபடையரவம்: இயங்குகின்ற இருபடை
யெழுச்சியின் ஆர்ப்பரவம் (தொல். புறத்.
8. ந.) (3)
1முற்பாடு
- முன்னே்; பிற்பாடு என்னும் சொல்லைப போன்றது.
2படைவெள்ளமாகிய
ஆரேயிலென்பதைக் கருதி இவ்வாறு
எழுதினார் போலும்.
3வரம்பில்
வெள்ளம், ஆரெயில் எனத் தனித்தனியே நிறுத்தி
வரம்பில் வெள்ளம் கருதின், ஆரெயில் கருதினெனக்கூட்டுதலை
இங்கே கருதினார்.
4கால்
- காற்று.
5முனைமுகம்
- போர்க்களம்.
|