34. |
ஒரூஉப நின்னை
யொருபெரு வேந்தே
ஓடாப் பூட்கை யொண்பொறிக் கழற்கால்
இருநிலந் தோயம் விரிநூ லறுவையர்
செவ்வுளைய மாவூர்ந்து |
5 |
நெடுங்கொடிய
தேர்மிசையும்
ஓடை விளங்கு முருகெழு புகர்நுதற்
பொன்னணி யானை முரண்சே ரெருத்தினும்
மன்னிலத் தமைந்த.....................................................
மாறா மைந்தர் மாறுநிலை தேய |
10 |
முரைசுடைப்
பெருஞ்சமந் ததைய வார்ப்பெழ
அரைசுபடக் கடக்கு மாற்றற்
புரைசான் மைந்தநீ யோம்பன் மாறே. |
துறை
- தும்பையரவம். வண்ணமும் தூக்கும் அது.
பெயர் - ஒண்பொறிக் கழற்கால் (2)
(ப
- ரை)
ஒரூஉப (1) அறுவையர் (3) என முடிக்க.
2.
ஒண்பொறிக் கழற்காலென்றது தாங்கள் செய்த அரிய
போர்த் தொழில்களைப் பொறித்தலையுடைய ஒள்ளிய
கழற்காலென்றவாறு.
இச்சிறப்பான்
இதற்கு,
'ஒண்பொறிக் கழற்கால் என்று
பெயராயிற்று.
வேந்தே
(1) மாவூர்ந்து (4) அரைசுபடக் கடக்கும்
ஆற்றலையுடைய (11) புரைசான் மைந்த, அவ்வாற்றலிடத்து வரும்
1குறைகளுக்குப் பிறரை ஏவாது அவற்றை நீயே பாதுகாத்துச்
செய்தலால் (12) ஒரூஉப (1) அறுவையார் (3) எனக் கூட்டி
வினைமுடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவன் வென்றிச்சிறப்புக்
கூறியவாறாயிற்று.
2மாற்றார்
நாடுகோடல் முதலாயினவன்றி 3வென்றிகோடலே
கூறினமையால் துறை தும்பையாய், ஒரூஉபவெனப் படையெழுச்சி
மாத்திரமே கூறினமையான், அதனுள் 4அரவமாயிற்று.
'செவ்வுளைய'
(4) என்பது முதலாக இரண்டும் வஞ்சியடியாய்
வந்தமையான் வஞ்சித்தூக்குமாயிற்று.
(கு
- ரை) 1. ஒரூஉப நின்னை - போர் செய்தற்கு வந்த
நிலை நீங்கி நின்னை விட்டுச் செல்வர்.
2.
ஓடாப் பூட்கை - புறங்கொடுத்து ஓடாத கோட்பாட்டையும்
(பதிற். 57 : 1; முருகு.
247; சிறுபாண். 83; அகநா.
100 : 8; புறநா.
165 ; 15). ஒண்பொறிக் கழற் கால் - ஒள்ளிய பொறித்தலையுடைய
கழலையணிந்த காலையும் உடைய; "ஓடாத் தானை யொண்டடொழிற்
கழற்கால்" (பெரும்பாண்.
102)
3.
பெரிய பூமியிலே படுகின்ற விரிந்த நூலாகிய ஆடையை
அணிந்த வேற்றரசர். நிலத்திற் படும்படி ஆடையணிதல்
பெருமிதத்திற்கு உரிய அடையாளம்; "மருங்கிற் கட்டிய நிலனேர்பு
துகிலினன்" (முருகு. 214); "நிலந்தோய்
புடுத்த நெடுநுண் ணாடையர்"
(பெருங். 1. 32 : 64)
1-3.
அறுவையர் நின்னை ஒரூஉப.
4.
உளை - பிடரி மயிர்; தலையாட்டமும் ஆம். மா - குதிரை.
5.
கொடியையுடைய தேர்.
6.
ஓடை - நெற்றிப்பட்டம். உருகெழு புகர் நுதல் - அச்சம்
பொருந்திய புள்ளியையுடைய நெற்றியையுடைய.
7.
பொன்னாற் செய்த இழைகளை அணிந்த யானையினது
வலிசேர்ந்த பிடரினும். பொன்னணி யானை: "இழையணி யானை"
(புறநா. 153 : 2)
9.
மாறா மைந்தர் - போரினின்றும் மாறுபடாத வலியையுடைய
வீரர்; மாற்றலரென்பது போல நின்றதெனலும் ஆம். மாறுநிலை தேய
- எதிராக நிற்கும் நிலை அழியும்படி.
10.
சமம் ததைய - போர் கெடும்படி. ஆர்ப்ப எழ - வீரர்களது
ஆரவாரம் எழ; வீரர்: சேரன் படையிலுள்ளார். போரில்
வெற்றிப்பெற்ற வீரர் ஆரவாரத்தில் இயல்பு; "அட்டமள்ள ரார்ப்பிசை"
(குறுந். 34:5)
11.
அரசர்கள் போர்க்களத்திலே அழியும்படி வஞ்சியாது
எதிர்நின்று வெல்லும் ஆற்றலையுடைய; "அரைசுபடக் கடந்தட்டு"
(கலித். 105 : 1)
12.
புரை சால் மைந்த - உயர்ச்சி மிக்க வலியையுடையோய்;
புரை- உயர்வு. நீ ஓம்பல் மாறு - நீ பாதுகாத்தலால். மாறு:
ஏதுப்பொருள் தருவதோர் இடைச்சொல் (புறநா.
4 : 17, உரை)
பகையரசர்களை
வென்று நீ நின் நாட்டைப் பாதுகாத்தலினால்
நின் வலியை அறிந்து பிறர் நின்னைப் பொருதலொழிந்து
நீங்குவரென்றார்.
வேந்தே
(1), மைந்த, நீ ஓம்பல் மாறே (12), அறுவையர் (3)
நின்னை ஒரூஉப (1) என்க. (4)
1குறைகள்
- காரியங்கள்.
2மாற்றார்
நாடு கோடல் காரணமாயின் வஞ்சியாய் விடும்;
"எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன், அஞ்சுதகத் தலைச்சென்
றடல்குறித்தன்றே" (தொல். புறத்.
7)
3"அரசுபடக்
கடக்கு மாற்றல்" என்று மாத்திரம் கூறினமைபற்றி
'வென்றி கோடலே கூறினமையால்' என்றார்; அது தும்பையாதல்,
"மைந்துபொருளாக வந்த வேந்தனைச், சென்றுதலை யழிக்குஞ்
சிறப்பிற்றென்ப" (தொல். புறத்.
15) என்பதனால் உணரப்படும்.
4தும்பையரவம்
- பு. வெ. 128.
|