36. |
வீயா யாணர்
நின்வயி னானே
தாவா தாகு மலிபெறு வயவே
மல்ல லுள்ளமொட வம்பமர்க் கடந்து
செருமிகு முன்பின் மறவரொடு தலைச்சென்று |
5 |
பனைதடி புனத்திற்
கைதடிபு பலவுடன்
யானை பட்ட வாண்மயங்கு கடுந்தார்
மாவு மாக்களும் படுபிண முணீஇயர்
பொறித்த போலும் புள்ளி யெருத்திற்
புன்புற வெருவைப் பெடைபுணர் சேவல் |
10 |
குடுமி யெழாலொடு
கொண்டுகிழக் கிழய
நிலமிழி நிவப்பி னீணிரை பலசுமந்
துருவெழு கூளிய ருண்டுமகிழ்ந் தாடக்
குருதிச் செம்புன லொழுகச் செருப்பல
செய்குவை வாழ்கநின் வளனே. |
துறை
- களவழி. வண்ணமும் தூக்கும் அது. பெயர் -
வாண்மயங்கு கடுந்தார் (6)
(ப
- ரை)
தலைச்சென்று (4) வம்பமர்க் கடந்து (3) என
மாறிக்கூட்டுக.
1வம்பமரென்றது
முன்பு செய்துவருகின்ற போரன்றிப் பகைவர்
புதிதாகப் பகைத்துச் செய்யும் போரினை.
6.
வாள் மயங்குதலாவது இரண்டு படையில் வாளும் தம்மில்
தெரியாமல் மயங்குதல்.
இச்சிறப்பானே
இதற்கு, 'வாண்மயங்கு கடுந்தார்' என்று
பெயராயிற்று.
10.
கிழக்கென்றது கீழான பள்ளங்களை.
உள்ளமொடு
வம்பமர்க் கடந்து (3) செருப்பல செய்குவை (14);
அதனானே
நினதுவலி (2) நின்னிடத்துக் (1)
கேடுபடாததாயிருந்தது (2); அதன் மேலும் இதற்கு 2அடியாகிய
நின் போர்வளம் வாழ்க (14) எனக் கூட்டி வினைமுடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவன் வென்றிச்சிறப்புக்
கூறியவாறாயிற்று.
மிகுதி
வகையால் தன் போர்க்களச் சிறப்புக் கூறினமையின்
துறை 3களவழியாயிற்று.
(கு
- ரை) 1. கெடாத புதுவருவாயையுடைய நின்னிடத்தில்.
2.
மலிதல் பெற்ற வலி கெடாதாகும்; வயவு: வய என்னும்
அகர வீற்று உரிச்சொல் ஈறு விகாரப்பட்டு நின்றது.
3.
வளத்தையுடைய ஊக்கத்தோடு பகைவர் செய்த புதிய
போரை வென்று. உள்ளம் - மனவெழுச்சி. 4. முன்பு - வலி.
மறவர் - வீரர்.
5.
பனைமரத்தை வெட்டிய புனத்தைப்போலத் துதிக்கைகள்
வெட்டப்பட்டுப் பலவாகி ஒருங்கே. யானைக்குப் பனைமரம் உவமை.
6.
யானைகள் இறந்த, வாட்படைகள் தம்முட் கலந்த, கடிய
தூசிப் படையிலுள்ள. வாள் மயங்கு தார்: பதிற்.
12 : 1.
7.
யானை குதிரையென்னும் விலங்குகளும் வீரருமாகிய பட்ட
பிணத்தை உண்ணும்பொருட்டு.
8-9.
பொறிக்கப்பட்டன போன்ற புள்ளிகளையுடைய
கழுத்தினையும், புல்லிய புறத்தினையுமுடைய எருவையினது,
பெடையைச் சேர்ந்த ஆண்பறவை. எருவை - தலைவெளுத்து
உடல் சிவந்திருந்தும் பருந்து (புறநா. 64
: 4, உரை); கழுகெனினும்
ஆம் (தக்க. 562, உரை). பொறித்த................புறம்:
பதிற். 39 : 10 - 11.
எருவையின்
இயல்பு: "பொறித்த போலும் வானிற வெருத்தின்,
அணிந்த போலு மஞ்செவி யெருவை" (அகநா.
193 : 5 - 6)
10.
உச்சிக் கொண்டையையுடைய புல்லூறு என்னும் பறவையை
உடன்கொண்டு கீழே இறங்க. குடுமி கூறியமையின் ஆண் புல்லூறாகக்
கொள்க. இறங்கியது உன் உண்ணுதற்பொருட்டு. எருவை போர்க்
களத்தில் ஊனுண்ணுதல் "உயிர்திறம் பெயர நல்லமர்க் கடந்த,
தறுகணாளர் குடர்தரீஇத் தெறுவரச், செஞ்செவியெருவை யஞ்சுவர
விகுக்கும்" (அகநா. 77 : 9 - 11) என்பதனால்
உணரப்படும். எழால்:
குறுந். 151 : :2, அகநா.
103 ; 1, திணைமொழி. 15.
11.
பூமி பாரத்தால் தாழ்வதற்குக் காரணமான
உயர்ச்சியையுடைய நீண்ட பிணவரிசைகள் பலவற்றைச் சுமந்து.
12,
அச்சம் எழுதற்குக் காரணமாகிய பேய்கள் ஊனை உண்டு
களித்து ஆட.
13.
இரத்தமாகிய செந்நீர் ஓட. 14. செரு - போர். (6)
1வம்பு
- புதுமை.
2அடி
- காரணம்.
3களவழி
- போர்க்களத்தில் நிகழும் 1நிகழ்ச்சியைச்
சிறப்பித்தல்; களவழி வாழ்த்தென்று கூறப்படும் (பு.
வெ. 207)
|