47.
5 |
அட்டா
னானே குட்டுவ னடுதொறும்
பெற்றா னாரே பரிசிலர் களிறே
வரைமிசை யிழிதரு மருவியின் மாடத்து
வளிமுனை யவிர்வருங் கொடிநுடங்கு தெருவிற்
சொரிசுரை கவரு நெய்வழி புராலிற்
பாண்டில் விளக்குப் பரூஅச்சுட ரழல
நன்னுதல் விறலிய ராடும்
தொன்னகர் வரைப்பினவ னுரையா னாவே. |
இதுவுமது.
பெயர் நன்னுதல் விறலியர் (7)
(ப
- ரை) தெருவின்
(4) தொன்னகர் (8) எனக் கூட்டுக.
5.
சொரி சுரை கவரும் நெய்யென்றது நெய்யைச் சொரியும்
உள்ளுப்புடையுண்டாயிருக்கின்ற திரிக்குழாய் தான் ஏற்றுக்கொண்ட
நெய்யென்றவாறு.
சுரையென்றது
திரிக்குழாய்க்கு ஆகுபெயர்.
6.
பாண்டில் விளக்கு - கால்விளக்கு.
7.
நன்னுதல் விறலியரென்றது தமது 1ஆடல்பாடற்கேற்ப
நூலுட் சொல்லப்பட்ட அழகையுமுடையாரென்றவாறு.
அவ்வழகினை
நுதன்மேலிட்டுக் கூறியவாற்றான் இதற்கு,
'நன்னுதல் விறலியர்' என்று பெயராயிற்று.
8.
தொன்னகர் - 2அரசுடைய பழைய நகரிகள்.
நெய்
வழிபு உராலிற் (5) சுடரழல (6) ஆடும் (7) என்றதனாற்
சொல்லியது அந்த நகரிகளது செல்வமுடைமை.
குட்டுவன்
அட்டு ஆனான்; அடுதொறும் (1) பரிசிலர் களிறு
பெற்று ஆனார் (2); தொன்னகர் வரைப்புகளில் அவன் உரை ஆனா
(8) எனக் கூட்டி வினைமுடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவன் கொடையினையும்
அக்கொடைக்கு வருவாயாகிய பகைவரைக் கோறலையும்
உடன்கூறியவாறாயிற்று.
(கு
- ரை) 1. 'அட்டானானே குட்டுவன்' என்றாற்போல்வன
கடைச்சங்கத்திற்காயின சொற்கள் இக்காலத்திற்கு ஆகாவாயின
(தொல். செய். 80, ந.)
1-2.
குட்டுவன் பகைவரைக் கொன்று அச்செயல் போதுமென்று
அமையான்; இஃது, "ஐயைந் திரட்டி சென்றதற் பின்னும், அறக்கள
வேள்வி செய்யா தியாங்கணும், மறக்கள வேள்வி செய்வோ
யாயினை" (சிலப். 28 : 130 - 32) என்பதனாலும்
அறியப்படும்.
அங்ஙனம் அவன் அடுந்தோறும் பரிசிலர் களிறுகளை ஓரளவில்
அமையாது பெற்றனர்; 'துடியடிக் குழவிய பிடியிடை மிடைந்த, வேழ
முகவை நல்குமதி' (புறநா. 369 : 26 - 7)
3-4.
மலையின்மேலிருந்து வீழ்கின்ற அருவியைப்போல,
மாடத்தில் காற்றினிடத்தே விளங்குகின்ற கொடிகள் அசைகின்ற
தெருவினையுடைய.
5-6.
சொரியப்பட்ட நெய்யையுடைய திரிக்குழாயானது தான்
ஏற்றுக் கொண்ட அந்நெய் மேலே வழிந்து பரவுதலால், காலையுடைய
விளக்கினது பருமையையுடைய சுடர் ஒளியை வீச; "சுடரும்
பாண்டிற்றிருநாறு விளக்கத்து" (பதிற். 52
: 13); "நெய்யுமிழ் சுரையர்
நெடுந்திரிக்கொளீஇக், கையமை விளக்க நந்துதொறு மாட்ட"
(முல்லைப் 48 - 9)
6.
மு. நெடுநல். 175; "துகிலின் வெண்கிழித்
துய்க்கடை நிமிடி
உள்ளிழு துறீஇய வொள்ளழற் பாண்டில்" (பெருங்.
1.33 : 92 - 3)
7-8.
அழகிய நெற்றியையுடைய விறலியர் ஆடுகின்ற பழைய
நகரங்களின் எல்லையில் சேரனைப் பற்றிய புகழ்ச்சியமைந்த
வார்த்தைகள் அமையா.
மகளிர்க்கு
நெற்றி சிறுத்திருத்தல் உத்தம இலக்கணமாதலின்
அழகிய நுதலென்றது சிறிய நுதலை; "நுதலடி நுசுப்பென மூவழிச்
சிறுகி" (கலித். 108 : 3)
இப்பாட்டில்,
அமையாத செய்திகள் மூன்று சொல்லப்பட்டன.
(7)
1"ஆடலும்
பாடலு மழகு மென்றிக் கூறிய மூன்றி னொன்று
குறைபடாமல்" (சிலப்.3
: 8 - 9)
2இவை
பகையரசர் நகரங்கள்.
|