54. |
வள்ளியை
யென்றலிற் காண்குவந் திசினே
உள்ளியது முடித்தி வாழ்கநின் கண்ணி
வீங்கிறைத் தடைஇய வமைமருள் பணைத்தோள்
ஏந்தெழின் மழைக்கண் வனைந்துவர லிளமுலைப் |
5 |
பூந்துகி
லல்குற் றேம்பாய் கூந்தல்
மின்னிழை விறலியர் நின்மறம் பாட
இரவலர் புன்கண் டீர நாடொறும்
உரைசா னன்கலம் வரைவில வீசி
அனையை யாகன் மாறே யெனையதூஉம் |
10 |
உயர்நிலை
யுலகத்துச் செல்லா திவணின்
றிருநில மருங்கி னெடிதுமன் னியரோ
நிலந்தப விடூஉ மேணிப் புலம்படர்ந்து
படுகண் முரச நடுவட் சிலைப்பத்
தோமர வலத்தர் நாமஞ் செய்ம்மார் |
15 |
ஏவல்
வியங்கொண் டிளையரொ டெழுதரும்
ஒல்லார் யானை காணின்
நில்லாத் தானை யிறைகிழ வோயே. |
துறை
- காட்சி வாழ்த்து. வண்ணமும் தூக்கும்
அது. பெயர் - நில்லாத் தானை (17)
(ப
- ரை)
1. வள்ளியனென்பதற்கு வள்ளியையென்றது
1இடவழுவமைதி.
2.
உள்ளியது முடித்தியென்றது யான் 2நினைத்துவந்த
காரியத்தை முடியென்றவாறு. முடித்தியென்றது ஈண்டு முன்னிலை
யேவல்வினை.
3.
தடைஇய அமை - பெருத்த மூங்கில்.
நின்
மறம் பாட (6) வீசி எனக் கூட்டி நின் மறம் பாடாநிற்க
அதனைக் கேட்டிருந்து வீசியெனவுரைக்க.
வீசி
(8) என்னும் வினையெச்சத்தினை ஆகல் (9) என்னும்
தொழிற் பெயரோடு முடிக்க.
9.
அனையையாகன்மாறேயென்றது அவ்வீசுதற்கு ஏற்ற
அத்தன்மையையுடையை யாகையானென்றவாறு.
மாறென்பது
ஆனென்னும் உருபின் பொருள்படுவதோர்
இடைச்சொல்.
அத்தன்மையாவது
இன்முகமும் இன்சொல்லு முதலாயின.
எனையதூஉமென்றது
சிறிதுகாலமுமென்றவாறு; உம்மை
நெடுங்காலமே யன்றிச் சிறிதுகாலமுமென எச்சவும்மை.
12.
நிலந்தப இடூஉம் ஏணிப்புலமென்றது நிலவகலம் குறைபட
இட்ட எல்லையையுடைய பாசறையென்றவாறு. என்றது மாற்றார்
பாசறையை. முரசம் நடுவட் (13) படர்ந்து (12) சிலைப்ப (14) எனக்
கூட்டி 3முரசம் பாசறைநடுவே தான் நின்று தன்னொலி பாசறை
யெங்கும் படர்ந்து கொண்டு படையை ஏவியொலிப்பவெனவுரைக்க.
14.
தோமரம் - தண்டாயுதம். வலத்தரென்றது வினையெச்ச
வினைக் குறிப்புமுற்று.
நாமஞ்செய்ம்மார்
(14) இளையரொடெழுதரும் (15) ஒல்லார் (16)
எனக் கூட்டுக.
15.
ஏவல் வியங்கொண்டென்றது இளையரை முன்பு போர்க்குக்
கையும் அணியும் வகுப்புழி ஏவித் தாமும் ஏவல்களைச்
செய்துகொண்டென்றவாறு.
ஏவலையுடைய
வியமென இரண்டாவது விரிக்க. வியம் - ஏவல்.
யானை
காணின் (16) நில்லாத்தானை (17) என்றது 4காலாள்
முதலாயினவற்றைத் தரமல்லவென்று கழித்துநின்று யானை காணின்
நில்லாது செல்லும் தானையென்றவாறு.
இச்சிறப்பானே
இதற்கு, 'நில்லாத் தானை' என்று பெயராயிற்று.
17.
இறைகிழவோயென்றது இறைவனாதற் றன்மையையுடையா
யென்றவாறு.
இறைகிழவோய்,
நின்னை (17) வள்ளியனென்று யாவரும்
கூறுதலானே நின்னைக் காண்பேன் வந்தேன் (1); யான்
உள்ளியதனை நீ முடிப்பாயாகவேண்டும்; நின்கண்ணி வாழ்வதாக (2);
விறலியர் நின் மறம் பாட (6) இரவலர் புன்கண் தீரும்படி (7)
நன்கலங்களைவரைவில வீசி (8) அத்தன்மையையாகையாலே,
என்போலும் இரவலரது ஆக்கத்தின் பொருட்டுச் சிறிதுகாலமும் (9)
இவ்வுலகத்திலே நின்று உயர்நிலை யுலகத்திற் செல்லாதே (10)
இவ்விருநிலமருங்கிலே நெடுங்காலம் நிலை பெறுவாயாக (11) எனக்
கூட்டி வினைமுடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவன் கொடைச்சிறப்பும் தன்குறையும்
கூறி வாழத்தியவாறாயிற்று.
(கு
- ரை) 1. மக்களெல்லாரும் நின்னை
வண்மையையுடையாயென்று கூறுதலால் நின்னைக் காணவந்தேன்.
2.
யான் நினைத்ததை அங்ஙனமே முடிப்பாய்; நின் கண்ணி
வாழ்க.
3-6.
விறலியரது வருணனை. 3. வீங்கிய சந்துகளையுடைய,
திரண்ட மூங்கிலைப் போன்ற பெருத்த தோளையும் (கலித்.
45 : 13 -5)
4.
ஏந்திய எழுச்சியையுடைய குளிர்ந்த கண்களையும்,
எழுதப்பட்டாற் போன்று எழுதலையுடைய இளைய நகிலையும்.
5.
பூத்தொழிலையுடைய துகிலையணிந்த அல்குலையும்,
தேனீக்கள் பரவிய கூந்தலையும்; "சுரும்புண வொலிவரு மிரும்பல்
கூந்தல்" (அகநா. 161 : 10). தேம் - தேனீ
(பதிற்.
53 : 17, ) உரை.
6.
மின்னுகின்ற இழையையும் உடைய விறலியர் நினது
வீரத்தைப் பாட (பதிற். 46 : 1 - 6)
; "புறம்பெற்ற வயவேந்தன்,
மறம் பாடிய பாடினி யும்மே" (புறநா. 11 :
10 - 11)
7-9.
சேரனது கொடைச் சிறப்பு.
7-8.
இரவலர் துன்பம் நீங்கும்படி நாள்தோறும்
புகழ்ச்சியமைந்த நல்ல ஆபரணங்களைத் தனக்கென்று வரைதல்
இல்லாதனவாகக் கொடுத்து.
9.
அத்தன்மையையுடையாயாதலால் சிறிது காலமும்.
10-11.
சேரனை வாழ்த்துதல்.
உயர்ந்த
நிலையையுடைய தேவருலகத்துச் செல்லாமல்
இவ்வுலகத்தே நிலைபெற்றுப் பெரிய பூமியிலே நீண்ட காலம்
வாழ்வாயாக.
12.
நிலத்தின் அகலம் குறைபட இடப்பட்ட எல்லையையுடைய
பாசறையையுடைய பகைவர் நாட்டினிடத்தே சென்று. நிலத்தின்
பரப்பினும் பாசறைகள் மிதியாயின வென்றபடி.
13.
ஒலிக்கின்ற கண்ணையுடைய வீரமுரசு போர்க்களத்தின்
நடுவே ஒலிக்கும்படி; "படுகண் முரசங் காலை யியம்ப, வெடிபடக்
கடந்து" (மதுரைக். 232 -3)
14.
தண்டாயுதத்தை வலப்பக்கத்தில் ஏந்தியவராய்ப் பகைவர்க்கு
அச்சத்தைச் செய்யும் பொருட்டு.
15-6.
இளையரை ஏவுதலையுடைய வியத்தைக்கொண்டு
அவ்விளைய ரொடு எழுகின்ற பகைவரது யானைப் படையைக்
கண்டால்.
17.
நில்லாமல் அதன்மேற் செல்கின்ற தானையையுடைய
இறையாதற் றன்மையையுடையாய்.
இறைகிழவோய்
(17) வள்ளியை என்றலிற்காண்கு வந்திசின் (1);
நின் கண்ணி வாழ்க; உள்ளியது முடித்தி (2); நெடிது மன்னியர் (11)
என முடிக்க.
(பி
- ம்.) 3. வீங்கறை. 8. வரைவிலை. (4)
1படர்க்கைக்கு
முன்னிலை வந்தது.
2"முன்ன
முகத்தி னுணர்ந்தவர், இன்மை தீர்த்தல் வன்மை
யானே" (புறநா.
3 : 25 - 6)
3பதிற்.
39 : 5, உரை.
4நின்படைவழி
வாழ்நரும் காலாண்மேற் செல்லாது தாங்குநர்
யானைக்கோடு துமிக்கும் எஃகுடைவலத்தராயிருப்பர்' (பதிற்.
51 : 29,
உரை) |