56. |
விழவுவீற்
றிருந்த வியலு ளாங்கட்
கோடியர் முழவின் முன்ன ராடல்
வல்லா னல்லன் வாழ்கவவன் கண்ணி
வலம்படு முரசந் துவைப்ப வாளுயர்த் |
5 |
திலங்கும்
பூணன் பொலங்கொடி யுழிஞையன்
மடம்பெரு மையி னுடன்றுமேல் வந்த
வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி
வீந்துகு போர்க்களத் தாடுங் கோவே. |
துறை
- 1ஒள்வாளமலை.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர் - வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி (7)
(ப
- ரை)
5. பூணன் உழிஞையனென்பன
வினைக்குறிப்புமுற்று.
7.
வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி யென்றது மாற்று வேந்தர்
அஞ்சித் தங்கள் மெய்யை மறந்த வாழ்வென்றவாறு.
வாழ்ச்சி,
மெய்மறத்தல் காரணமாக அதன் காரியமாய்
வந்ததாகலான், மெய்ம்மறந்தவென்னும் பெயரெச்சம் 2நிலமுதற்பெயர்
ஆறுமன்றிக் காரியப்பெயரென வேறோர் பெயர் கொண்டதெனப்படும்.
வாழ்வு - வெற்றிச் செல்வம்.
இச்சிறப்பானே
இதற்கு, 'வேந்துமெய்ம்மறந்த வாழ்ச்சி'
என்று பெயராயிற்று.
வாழ்ச்சிக்
(7) களம் (8) எனக் கூட்டுக. முரசம் துவைப்ப வாள்
உயர்த்து (4) இலங்கும் பூணனாய்ப் பொலங்கொடி உழிஞையனாய்ப்
(5) போர்க்களத்து ஆடும் கோ (8) வியலுளாங்கட் (1) கோடியர்
முழவின் முன்னர் ஆடல் (2) வல்லானல்லன்; அவன் கண்ணி வாழ்க
(3) என மாறிக் கூட்டி வினை முடிவு செய்க.
'வல்லானல்லன்'
என்பதன்முன் கோவென்பது
கூட்டவேண்டுதலின் மாறாயிற்று.
இதனாற்
சொல்லியது அவன் வென்றிச் சிறப்புக்
கூறியவாறாயிற்று.
(கு
- ரை) 1-3. விழா பெருமையோடு விளங்கிய அகன்ற
தன் ஊரினிடத்தே, கூத்தரது முழவின் முன்னர் ஆடுதலை வல்லவன்
அல்லன்; அவன் கண்ணி வாழ்வதாக.
4.
வெற்றியுண்டாதற்குக் காரணமான முரசம் ஒலிப்ப, வாளை
உயர வீசி. வலம்படு முரசம்: பதிற். 17
: 5, உரை.
5.
விளங்குகின்ற ஆபரணங்களை அணிந்து, பொன்னாற்
செய்த கொடியாகிய உழிஞையினது பூவைச் சூடி.
6-8.
அறியாமை மிகுதலால் பகைகொண்டு படையெடுத்துவந்த
பகைவேந்தர் தம் உடம்பை மறத்தற்குக் காரணமான வெற்றிச்செல்வம்
அழிந்துகெட்ட போர்க்களத்தில் ஆடு அரசன்; "கழித்துவா ளமலை
யாடிக் காட்டுவார்" (சீவக. 783)
ஆடுகோ
(8) ஆடல் (2) வல்லானல்லன்; அவன் கண்ணி
வாழ்க (3) என முடிவு செய்க.
கண்ணியை
வாழ்த்தல்: பதிற். 54 : 2, உரை
மு.
"தேரின்கண் வந்த அரசர்பலரையும் வென்ற வேந்தன்
வெற்றிக் களிப்பாலே தேர்த்தட்டிலே நின்று போர்த்தலைவரோடு
கை பிணைந்து ஆடும் குரவை' (தொல், புறத்,
21. ந.) (6)
1பு.
வெ. 147.
2தொல்,
வினை. 37.
|