57. |
ஓடாப் பூட்கை
மறவர் மிடறப
இரும்பனம் புடையலொடு வான்கழல் சிவப்பக்
குருதி பனிற்றும் புலவுக்களத் தோனே
துணங்கை யாடிய வலம்படு கோமான் |
5 |
மெல்லிய
வகுந்திற் சீறடி யொதுங்கிச்
செல்லா மோதில் சில்வளை விறலி
பாணர் கையது பணிதொடை நரம்பின்
விரல்கவர் பேரியாழ் பாலை பண்ணிக்
குரல்புண ரின்னிசைத் தழிஞ்சி பாடி |
10 |
இளந்துணைப்
புதல்வர் நல்வளம் பயந்த
வளங்கெழு குடைச்சூ லடங்கிய கொள்கை
ஆன்ற வறிவிற் றோன்றிய நல்லிசை
ஒண்ணுதன் மகளிர் துனித்த கண்ணினும்
இரவலர் புன்க ணஞ்சும் |
15 |
புரவெதிர்
கொள்வனைக் கண்டனம் வரற்கே. |
துறை
- விறலியாற்றுப்படை. வண்ணமும் தூக்கும் அது.
பெயர் - சில்வளை விறலி (6)
(ப
- ரை.)
மறவர் மிடறபக் (1) களத்தோன் (3) எனக்
கூட்டுக.
3.
பனிற்றுதல் - தூவுதல்; பனிற்றுவது புண்பட்ட
வீரருடலெனக் கொள்க. களமென்றது ஈண்டுக் களத்தையணிந்த
பாசறையினை.
5.
1வகுந்து - வழி.
6.
சில்வளை விறலியென்றது பல்வளையிடுவது பெதும்பைப்
பருவத்தாகலின், அஃதன்றிச் சில்வளையிடும் பருவத்தாளென அவள்
ஆடல் முதலிய துறைக்குரியளாதல் கூறியவாறு.
இச்சிறப்பானே
இதற்கு, 'சில்வளை விறலி' என்று
பெயராயிற்று.
8.
விரல்கவர் யாழென்றதனாற் பயன் வாசித்துக் கைவந்த
யாழென்றவாறு.
9.
தழிஞ்சி - தழிஞ்சியென்னும் துறைப்பொருண்மேல் தந்த
பாடல். தழிஞ்சியைக் குரல்புண ரின்னிசையிலே பாடியெனக் கொள்க.
10.
புதல்வராகிய நல்வளமென இருபெயரொட்டு.
11.
குடைச்சூல் - சிலம்பு.
சில்வளை
விறலி (6), புரவெதிர்கொள்வனைத் (15) தழிஞ்சிபாடி
(9) கண்டனம் வரற்கு (15)ச் செல்லாமோ (6);
அப்புரவெதிர்கொள்வனாகிய (15) வலம்படு கோமான் இதுபொழுது
தான் அவ்வெதிர்கோடற்கேற்ப வருவாயினையுடைய (4)
புலவுக்களத்தோன்காண் (3) என மாறிக்கூட்டி வினைமுடிவு செய்க.
வரற்குச்
(15) செல்லாமோ (6) எனக் கூட்ட வேண்டுதலின்
மாறாயிற்று.
இதனாற்
சொல்லியது அவன் வென்றிச்சிறப்போடு அவன்
கொடைச்சிறப்பும் உடன் கூறியவாறாயிற்று.
(கு
- ரை) 1. புறங்கொடுத்து ஓடாமைக்குக் காரணமாகிய
மேற்கோளையுடைய வீரரது வலி கெடும்படி. ஓடாப் பூட்கை; பதிற்.
34 :2,
2-3.
பெரிய பனந்தோடாகிய மாலையொடு சிறந்த வீரக்கழல்
சிவக்கும்படி இரத்தத்தைக் தூவுகின்ற புலால்நாற்றத்தையுடைய
களத்தை யணைந்த பாசறையிலுள்ளான் (பதிற்.
42 : 1, உரை,)
4.
போர்க்களத்தில் துணங்கைக் கூத்தை ஆடிய
வெற்றியுண்டாகும் சேரன். கோமான் (4) புலவுக்களத்தோன் (3) என
முடிக்க.
5-6.
சிலவாகிய வளையை அணிந்து விறலி, நிலம் மெல்லிய
வழியில் சிறிய அடியால் நடந்து செல்லாமோ; செல்லாமோ:
செல்லுவாமோ என்பதன் மரூஉ. 'மெல்லங்கழி : மென்மை, நிலத்தின்
மென்மை' (திருச்சிற். 177, பேர்.) 8
: பதிற். 66 : 1 - 2.
7-9.
பாணரது கையின்கண் உள்ளதாகிய பணிந்த
கட்டினையுடைய நரம்பினையுடைய விரலால் வாசித்துப் பழகிய
பேரியாழைப் பாலைப்பண்ணாக அமைத்து, மிடற்றுக்குரலோடு
ஒன்றுபட்ட இனிய இசையிலே தழிஞ்சி யென்னும் துறைப்பொருள்
அமைந்த பாடல்களைப் பாடி; தழிஞ்சி: 'வேந்தர் தம்படையாளர்
முன்பு போர்செய்துழிக்கணையும் வேலும் முதலிய படைகளைத்
தம்மிடத்தே தடுத்துக் கொண்டழிந்தவர்களைத் தாம் சென்று
பொருள் கொடுத்தும் வினாவியும் தழுவிக் கோடல்; தழிச்சுதல் :
தழிஞ்சியாயிற்று' ;"தழிச்சிய வாட்புண்ணோர் தம்மில்லந் தோறும்
பழிச்சியசீர்ப் பாசறை வேந்தன் - விழுச்சிறப்பிற் சொல்லிய சொல்லே
மருந்தாகத் தூர்ந்தன, புல்லணலார் வெய்துயிர்க்கும் புண்"
(தொல். புறத். 8. ந, மேற்.); "அழிகுநர்
புறக்கொடையயில்வா
ளோச்சாக், கழிதறு கண்மை காதலித் துரைத்தன்று" (பு.
வெ. 55)
10.
இளைய துணையாகிய புதல்வராகிய நல்ல செல்வத்தைப்
பெற்ற.
11.
மு. பதிற். 90 : 48. 11-3. தொழில்வளம்
பொருந்திய
சிலம்பையும், அடங்கிய கொள்கையையும், நிறைந்த அறிவையும்
உண்டாகிய புகழையும், ஒள்ளிய நெற்றியையும் உடைய மகளிர்
ஊடலாற்சினந்து பார்த்த பார்வைக்கு அஞ்சுதலைக் காட்டிலும்,
குடைச்சூல் - புடைதாழ்த்தல்; புடைபட்டு உட்கருவை யுடைத்தாதல்;
குடைபடுதல்' (சிலப்.16 : 118. அரும்பத;
அடியார்.)
14-5.
இரவலரது துன்பத்தை அஞ்சுகின்ற, நம் குடியைப்
புரத்தலை ஏற்றுக்கொள்வோனைக் கண்டுவருதற்பொருட்டு. கண்டனம்
வரற்கு (15) விறலி, செல்லாமோ (6) என முடிக்க.
(பி
- ம்.) 3. புலக்களத்தோனே. 11. குடச்சூல். 13. துணித்த.
(7)
1வகுந்து
: "வரைசேர் வகுந்திற கானத்துப் படினே" (மலைபடு,
242)
|