60.
|
கொலைவினை மேவற்றுத் தானை தானே
இகல்வினை மேவலன் றண்டாது வீசும்
செல்லா மோதில் பாண்மகள் காணியர்
மிஞிறுபுற மூசவுந் தீஞ்சுவை திரியா |
5
|
தரம்போழ்
கல்லா மரம்படு தீங்கினி
அஞ்சே றமைந்த முண்டை விளைபழம்
ஆறுசென் மாக்கட் கோய்தகை தடுக்கும்
மறாஅ விளையு ளறாஅ யாணர்த்
தொடைமடி களைந்த சிலையுடைய மறவர் |
10
|
பொங்குபிசிர்ப்
புணரி மங்குலொடு மயங்கி
வருங்கட லூதையிற் பனிக்கும்
துவ்வா நறவின் சாயினத் தானே. |
துறை
- விறலியாற்றுப்படை. வண்ணமும் தூக்கும்
அது. பெயர் - மரம்படு தீங்கணி (5)
(ப
- ரை) 4.
மிஞிறு புறமூசவும் தீஞ்சுவை திரியாமை
அப்பழத்தின் புறத்து வன்மையால்.
5.
அரம்போழ்கல்லாவென்றது புறத்து வன்மையால் அரிவாளும்
போழமாட்டாவென்றவாறு. 'அரம்போழ்கல்லாமரம்படு தீங்கனி'
என்றது 1புறக்காழனவாகிய பனை முதலியவற்றின் தீங்கனியை
நீக்குதற்கு.
இச்சிறப்பானும்
முன்னும் பின்னும் வந்த அடைச்சிறப்பானும்
இதற்கு; 'மரம்படு தீங்கனி' என்று பெயராயிற்று.
6.
முண்டை விளைபழம் - முட்டைகள்போலும் விளைபழம்;
முட்டையென்றது 2மெலிந்தது.
மரம்படு
தீங்கனியாகிய (5) முட்டை விளைபழம் (6) என
இருபெயரொட்டு.
ஓய்தகை
தடுக்கும் (7) துவ்வா நறவு (12) எனக் கூட்டுக.
8.
அறாஅ யாணரென்றது இடையறா கடல்வருவாய் முதலாய
செல்வங்களை. 9. தொடைமடி - அம்புதொடுத்து எய்தலில் மடிதல்.
10.
புணரியொடு மங்குலொடு என ஒடுவை இரண்டிடத்தும்
கொள்க. மயங்கவெனத் திரிக்க; மயங்குவது வருகின்ற ஊதை (11)
எனக் கொள்க.
மறவர்
(9) கடலூதையிற் பனிக்கும் (11) நறவு (12) எனக்கூட்டி,
ஆண்டுவாழும் மறவர் 3கடலூதையால் மட்டும் நடுங்கும் நறவென்க.
12.
நறவு - ஓரூர்; துவ்வா நறவு - வெளிப்படை.
அவன்றான்,
இப்பொழுது துவ்வாநறவின் சாயினத்தான் (12)
இனித்தானை கொலைவினை மேவற்று; ஆகலால் தான் (1)
இகல்வினை மேவலன்; இன்னபொழுது இன்னவிடத்து
எழுமெனத்தெரியது (2); பாண்மகளே, நாம் அவனைக் காணியர்
செல்லாமோ; செல்லின் (3), தண்டாது வீசும் (2) எனக் கூட்டி
வினைமுடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவன் கொடைச்சிறப்போடு வென்றிச்
சிறப்பும் கூறியவாறாயிற்று.
(கு
- ரை) 1. சேரனது சேனை கொலையாகிய தொழிலை
விரும்புதலையுடையது.
1-2.
சேரன்தான், போராகிய வினையை
விரும்புதலையுடையனாகி அவ்விடத்தே பெற்ற அரியபொருள்களை
ஓரளவில் அமையாது கொடுப்பான்.
3.
விறலி, ஆதலால் அவனைக் காணும்பொருட்டுப் போதலை
விரும்புவோமா; தில்: விழைவுப்பொருளில் தன்மையிடத்து வந்தது.
4-5.
வண்டுகள் நறுமணத்தால் புறத்தே மொய்க்கவும் தம்
இனிய சுவை மாறுபடாமல், புறத்து வன்மையால் அரிவாளும்
பிளத்தற்கு இயலாத மரங்களில் விளைந்த இனிய பழங்களாகிய.
6.
அழகிய சாறு நிரம்பிய, முட்டைபோல முதிர்ந்த பழங்கள்;
முட்டை: இங்கே பலாப்பழத்தின் வடிவிற்கு உவமை; அஞ்சேறு
என்பதற்கு ஏற்ப முட்டை முண்டை என்றாயிற்று; மெலித்தல் விகாரம்.
7.
வழியிலே செல்லுகின்ற மக்களுக்கு, நடந்து செல்லுதலால்
உண்டான ஓய்ந்த தன்மையைத் தடுக்கும்; அறத்தின்பொருட்டு வழிச்
செல்வோர் உண்ணும்படி பழமரங்களை வளர்த்தல் மரபு;
"அறந்தலைப்பட்ட நெல்லியம் பசுங்காய்" (குறுந்.
209 : 1);
நெடுஞ்சேண் வந்த நீர்நிைசை வம்பலர், செல்லுயிர் நிறுத்த
சுவைக்காய் நெல்லி” (அகநா, 271 : 6 -
7).
8.
மறாஅ விளையுள் - முற்காலத்து விளைந்தேனென
மறுக்காத நிலத்தின் விளைவையும்; "தொல்லது விளைந்தென
நிலம்வளங் கரப்பினும், எல்லா வுயிர்க்கு மில்லால் வாழ்க்கை"
(புறநா.203 : 2 - 3). அறாஅ யாணர் - இடையறாமல்
வருகின்ற
ஏனைய புதுவருவாய்களையும் உடைய.
தடுக்கும்
(7) யாணர்த் (8) துவ்வாநறவு (12) என இயையும்.
9.
அம்புகளைத் தொடுத்து எய்தலால் மடிதலைக களைந்த
வில்லையுடைய மறவர். 10. பொங்குகின்ற பிசிரையுடைய
அலைகளோடும் மேகங்களோடும் கலந்து. மங்குலொடு என்பதிலுள்ள
ஒடுவைப் புணரி யென்பதனோடும் கூட்டுக.
11.
வருகின்ற கடலினது குளிர்ந்த காற்றால் உடல்
நடுங்குகின்ற; என்றது அம்மறவர், சேரனது வன்மைகாரணமாக,
பகைவருக்கு நடுங்குதல் இலரென்றபடி.
12.
உண்ணப்படாத நறவென்னும் ஊரின்கண்ணே,
மென்மையையுடைய மகளிரினத்திடையேயுள்ளான். சாயினம் -
மெல்லிய மகளிராயம்; இவர் பாட்டாலும், கூத்தாலும், வார்த்தையாலும்
சேரனுக்கு மகிழ்ச்சி செய்யும் மகளிர்; "இன்னகை யாயமோ
டிருந்தோற் குறுகி" (சிறுபாண். 220)
இதன்
பதிகத்துத் தண்டாரணியம் (3) என்றது ஆரிய நாட்டிலே
உள்ளதோர் நாடு. கபலை (5) என்றது குராற்பசு.
1“புறக்கா
ழனவே புல்லென மொழிப” (தொல்,
மரபு, 85)
2தொல்,
எச்ச. 7.
3“செஞ்ஞாயிற்றுத்
தெறவல்லது, பிறிதுதெற லறியார்நின்னிழல்
வாழ் வோரே” (புறநா. 20
: 8 - 9) என்பதனோடு ஒப்புநோக்குக. |