61.
|
பலாஅம்
பழூத்த பசும்புண் ணரியல்
வாடை துரக்கு நாடுகெழு பெருவிறல்
ஓவத்தன்ன வினைபுனை நல்லிற்
பாவை யன்ன நல்லோள் கணவன் |
5
|
பொன்னி
னன்ன பூவிற் சிறியிலைப்
புன்கா லுன்னத்துப் பகைவ னெங்கோ
புலர்ந்த சாத்திற் புலரா வீகை
மலர்ந்த மார்பின் மாவண் பாரி
முழவுமண் புலர விரவல ரினைய |
10
|
வாராச் சேட்புலம் படர்ந்தோ னளிக்கென
இரக்கு வாரே னெஞ்சிக் கூறேன்
ஈத்த திரங்கா னீத்தொறு மகிழான்
ஈத்தொறு மாவள் ளியனென நுவலுநின்
நல்லிசை தரவந் திசினே யொள்வாள் |
15
|
உரவுக்
களிற்றுப் புலாஅம் பாசறை
நிலவினன்ன வெள்வேல் பாடினி
முழவிற் போக்கிய வெண்கை
விழவி னன்னநின் கலிமகி ழானே. |
துறை
- 1காட்சி வாழ்த்து. வண்ணம் ஒழுகுவண்ணம்.
தூக்கு - செந்தூக்கு. பெயர் - புலாஅம் பாசறை (15)
(ப
- ரை) 1. பலாஅம் பழுத்த -பலாப்பழுத்தவென்னும்
பகர
வொற்று மெலிந்தது. பசும்புண்ணென்றது புண்பட்ட வாய்போலப்
பழுத்து விழுந்தபழத்தினை. அரியலென்றது அப்பழத்தினின்றும்
பிரிந்து அரித்து விழுகின்ற தேனை.
10.
படர்ந்தோனென்றது முற்று. அளிக்கென வென்றது நீ
எம்மை அளிப்பாயாகவெனச் சொல்லியென்றவாறு.
11.
இரக்கென்றது தன்மைவினை. எஞ்சிக் கூறேனென்றது
உண்மையின் எல்லையைக் கடந்து பொய்யே
புகழ்ந்துசொல்லேனென்றவாறு.
12.
ஈத்தற்கென நான்காவது விரிக்க. ஈத்தொறு மகிழானென்றது
ஈயுந்தோறெல்லாம்தான் அயலாயிருத்தலல்லது ஈயாநின்றோ மென்று
ஒரு மகிழ்ச்சியுடையனல்லனென்றவாறு.
13,
நுவலுமென்றதற்கு உலகம் நுவலுமென வருவிக்க.
15.
புலாஅம் பாசறையென்றது வீரரெல்லாரும் போர்செய்து
புண்பட்ட மிகுதியாற் புலால் நாறுகின்ற பாசறையென்றவாறு.
இச்சிறப்பானே இதற்கு, 'புலாஅம் பாசறை' என்று
பெயராயிற்று.
16.
வேலையென இரண்டாவது விரித்துப் பாடினியிற்
பாடுதலொடு முடிக்க. 17. வெண்கையென்றது பொருள்களை
அபிநயிக்கும் 2தொழிற்கை யல்லாத, வெறுமனே தாளத்திற்கு
இசைய விடும்எழிற்கையினை.
18.
கலிமகிழென்றது கலிமகிழையுடைய ஓலக்கத்தை.
யான்பாரி
(8) சேட்புலம் படர்ந்தோன்; நீ
அளிக்கவெனச் சொல்லி (10) இரக்கென்று வந்து சில புகழ்ந்து
சொல்லுகின்றேனுமல்லேன்; அஃதன்றி உண்மையொழியப் புகழ்ந்து
சொல்லுகின்றேனுமல்லேன் (11); ஈத்தற்கு இரங்காமை முதலாகிய
அப்பாரிகுணங்களை நின்பாலும் உளவாக (12) உலகம் சொல்லும்
நின் (13) புகழை நின்பாலே தர வந்தேன் (14), நின் பாசறையின்
கலிமகிழின்கண்ணே (18) என வினைமுடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவன்வென்றிச் சிறப்பொடு படுத்து
அவன் கொடைச் சிறப்புக் கூறியவாறாயிற்று.
(கு
- ரை) 1. பலாமரத்திற் பழுத்த, பசிய புண்பட்ட
வாய்போல வெடித்த பழத்திலிருந்து அரித்து விழுகின்ற தேனை;
பலாப்பழுத்த வென்பது மெலித்தல் விகாரம் பெற்றது. பழத்தின்
வெடித்தவாய் புண்ணின் வாய் போன்றிருத்தலால் பசும்புண்
எனப்பட்டது; "புண்ணரிந், தரலையுக்கன நெடுந்தா ளாசினி"
"கலைதொடு பெரும்பழம் புண்கூர்ந் தூறலின்" (மலைபடு.
138 - 9,
292)
2.
காற்றானது வீசுகின்ற பறம்புநாடு பொருந்திய
பெருவிறலையுடையவன்.
3-4.
சித்திரத்தைப்போன்ற தொழில் புனைந்த நல்ல மனையின்
கண்ணேயுள்ள கொல்லிப்பாவையைப் போன்ற வடிவையுடைய
நல்லோளுடைய கணவன் (பதிற். 88 : 28 -
9); "ஓவத் தன்ன
விடனுடை வரைப்பிற் பாவை யன்ன நப்புறங் காக்கும்" (நற்.
182 :2-3); "ஓவத்தன்ன வினைபுனை நல்லிற், பாவை யன்ன பலராய்
மாண்கவின்" (அகநா. 98 : 11 - 2); "ஓவத்தன்ன
விடனுடை வரைப்பிற்
பாவையன்ன குறுந்தொடி மகளிர்" (புறநா. 251
: 1 - 2)
நல்லோள்
கணவன்: பதிற். 14 : 15, உரை.
5-6.
பொன்னைப் போன்ற நிறத்தையுடைய பூவினையும்
சிறிய இலைகளையும், பொலிவற்ற அடிமரத்தையும் உடைய
உன்னமரத்துக்குப் பகைவனாகிய எம்முடைய அரசன். உன்னத்துப்
பகைவன்; பதிற்.40 : 17. உரை.
ஓடா
உடல் வேந்தடுக்கிய உன்னநிலை (தொல்.
புறத்.5, ந.)
7-8.
பூசிப் புலர்ந்த சந்தனத்தையும் வற்றாத ஈகையையும்
மகளிர்க்கு மலர்ந்த மார்பினையும் பெரிய கொடையையுமுடைய
பாரியென்பான்.
பெருவிறல்
(2) நல்லோள் கணவன் (4) எங்கோ (6) ஆகிய
பாரி (8) என்க.
9.
முழவு என்னும் வாத்தியம் தன்னிடத்தே பூசிய மார்ச்சனை
மண்காயவும் பரிசிலர் துன்பமடையும்; முழவு அழிய என்று கூறல்
இன்னாததாதலின், மண்புரை எனத் தகுதிபற்றிக் கூறப்பட்டது;
என்றதன் கருத்து அதனால் தொழில் கொள்வாரின்மையின் அது
பயனிழந்ததென்பது.
10.
மீண்டு வாராத உயர்ந்த இடத்திற்குசு சென்றான்; நீ
எம்மைக் காப்பாற்றுக வென்று. அளிக்கென : தொகுத்தல்.
11.
இரப்பேனாகி வாரேன்; அதனால் நின்பெருமையைக்
குறைத்துக் கூறமாட்டேன்; "விரிப்பி னகலுந் தொகுப்பி
னெஞ்சும்..........கைம் முற்றலநின் புகழே" (புறநா.
53 : 6 - 8)
12-3.
சேரனுடைய அருங்குணங்கள்.
12.
தான் ஈந்த பொருள்களைப் பற்றிக் கழிவிரக்கங்
கொள்ளான்; இரவலர்க்குக் கொடுக்குந்தோறும் தான் அயலாய்
இருத்தலாக நினைத்தலேயன்றித் தான் ஈகின்றதாக எண்ணி
மகிழமாட்டான்.
13-4.
ஈயுந்தோறும் பெரிய கொடையையுடையவனென
உலகத்தாரும் புலவரும் சொல்லுகின்ற, உரையும் பாட்டுமாகிய
நின்னுடைய நல்ல புகழ் என்னை நின்னிடத்துச் செலுத்துதலால்
வந்தேன்; "புகழ்சால் சிறப்பினின் னல்லிசை யுள்ளி, வந்தன னெந்தை
யானே........நின்னைக்கண்டால் வேண்டிய வளவை" (புறநா.135
:
9 - 20)
4-5.
ஒள்ளிய வாளால் வெட்டப்பட்ட வன்மையையுடைய
களிறுகளையுடைய புலால் நாற்றம் வீசும் பாசறையிடத்து.
16.
நிலவைப் போன்ற வெள்ளிய வேலைப்பாடுகின்ற விறலி.
17-8.
முழவின் கண்ணே செலுத்திய தாளத்திற்கு
இசையவிடும் எழிற் கையையுடைய விழாவைப்போன்ற நின்னுடைய
ஆரவாரத்தையுடைய ஓலக்கத்தின் கண்ணே.
கலிமகிழின்கண்
(18) வந்திசின் (14) என முடிக்க.
(பி
- ம்.) 2. தூக்கும். 6. எங்கோன். 12. ஈதொறு.
(1)
1பதிற்.
41, துறை.
2தொழிற்கை
- தொழில்பெறக் காட்டும் கை : எழிற்கை
- அழகு பெறக் காட்டும் கை; “பிண்டியும் பிணையலு மெழிற்கையுந்
தொழிற் கையும்” (சிலம்.
3 : 18) |