66
|
வாங்கிரு மருப்பிற் றீந்தொடை பழுனிய
இடனுடைப் பேரியாழ் பாலை பண்ணிப்
படர்ந்தனை செல்லு முதுவா யிரவல
இடியிசை முரசமொ டொன்றுமொழிந் தொன்னார் |
5
|
வேலுடைக்
குழூஉச்சமந் ததைய நூறிக்
கொன்றுபுறம் பெற்ற பிணம்பயி லழுவத்துத்
தொன்றுதிறை தந்த களிற்றோடு நெல்லின்
அம்பண வளவை விரிந்துறை போகிய
ஆர்பத நல்கு மென்ப கறுத்தோர் |
10
|
உறுமுரண்
டாங்கிய தாரருந் தகைப்பின்
நாண்மழைக் குழூஉச்சிமை கடுக்குந் தோன்றற்
றோன்மிசைத் தெழுதரும் விரிந்திலங் கெஃகிற்
றார்புரிந் தன்ன வாளுடை விழவிற்
போர்படு மள்ளர் போந்தொடு தொடுத்த |
15
|
கடவுள்
வாகைத் துய்வீ யேய்ப்பப்
பூத்த முல்லைப் புதல்சூழ் பறவை
கடத்திடைப் பிடவின் றொடைக்குலைச் சேக்கும்
வான்பளிங்கு விரைஇய செம்பரன் முரம்பின்
இலங்குகதிர்த் திருமணி பெறூஉம் |
20 |
அகன்கண்
வைப்பி னாடுகிழ வோனே. |
துறை
- செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணமும்
தூக்கும் அது. பெயர் - புதல்சூழ் பறவை (16)
(ப
- ரை) 3.
படர்ந்தனை யென்றது வினையெச்சமுற்று;
படர்தல் - நினைவு. 4. ஒன்றுமொழிதல் - வஞ்சினங் கூறல்.
ஒன்றுமொழிந்து
(4) கொன்றுபுறம்பெற்ற (6) எனக் கூட்டி,
ஒன்று மொழிதலும் கொன்று புறம்பெறுதலும் ஒன்னாரதன்றி
இவன் தொழிலாகவுரைக்க.
ஒன்னாரது
(4) குழு (5) எனக் கூட்டி, கொன்றதும்
புறம்பெற்றதும் அக்குழுவையேயாக வுரைக்க.
7.
திறை தந்தவென்றதற்கு அவன் ஒன்னார் திறையாகத்
தந்தவென வருவித்து உரைக்க. 8. அம்பணம் - மரக்கால்.
உறைபோதல் - 1உறையிட முடியாதொழிதல். அளவை விரியவெனத்
திரிக்க.
நெல்லின்
(7) ஆர்பதம் (9) என இருபெயரொட்டு.
10.
தாரருந் தகைப்பு - ஒழுங்குடைய மாற்றாராற்
குலைத்தற்கரிய படை வகுப்பு.
11.
நாண்மழை - பருவமழை. 12. தோலொடுவென ஒடு விரிக்க.
13.
தார் புரிந்தன்ன வாள் - பூமாலைகள் அசைந்தாற்போல
நுடங்குகின்ற வாள்.
தகைப்பினையும்
(10) எஃகினையுமுடைய (12) போர் (14) எனக்
கூட்டுக.
15.
கடவுள் வாகை - வெற்றிமடந்தையாகிய கடவுள் வாழும்
வாகை.
14-6.
கிழித்துக் குறுக நறுக்கி வாகையோடு இடைவைத்துத்
தொடுத்த பனங்குறுத்து முல்லைமுகைக்கு ஒப்பாகவும் வாகைவீ அம்
முல்லையைச் சூழ்ந்த வண்டிற்கு ஒப்பாகவும் உவமங்கொள்ளவைத்த
சிறப்பானே இதற்கு, 'புதல்சூழ் பறவை' என்று
பெயராயிற்று.
19.
திருமணி பெறுவார் அந்நாட்டாராகக் கொள்க.
அவனை
நினைத்துச்செல்லு முதுவாயிரவலனே (3), நின்
நினைவிற் கேற்ப நாடுகிழவோன் தனக்குப் போரின்மையான் வென்று
கொடுப்பதின்றி (20) ஒன்னார் (4) பிணம்பயிலழுவத்துத் (6)
திறையாகத் தந்த களிற்றோடு தன்னாட்டு விளைந்த நெல்லாகிய (7)
உணவினைக் கொடா நின்றானென்று எல்லாரும் சொல்லுவார்கள் (9);
ஆதலால், அவன் பால் ஏகு எனக் கூட்டி வினைமுடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவன் வென்றிச்சிறப்புடன் படுத்துக்
கொடைச் சிறப்புக் கூறியவாறாயிற்று.
'படர்ந்தனை
செல்லும்' என்று பாணன் தன்னில்
நினைவன கூறினமையால், துறை பாணாற்றுப்படையன்றிச்
செந்துறைப்பாடாணாயிற்று.
(கு
- ரை) 1-2. வளைந்த கரிய தண்டினையுடைய, இனிய
நரம்புக் கட்டு இசையில் முதிர்ந்த, இடமுடைய பேரியாழென்னும்
யாழைப்பாலைப் பண்ணாக அமைத்து.
3.
சேரனை நினைந்து செல்லுகின்ற பேரறிவு வாய்ந்த
இரவலனே. படர்ந்தனை: முற்றெச்சம். முதுவாயிரவல: முருகு.
284; புறநா. 48 : 7.
4-5.
இடியினைப் போன்ற முரசத்தோடு வஞ்சினத்தைக் கூறி,
பகைவரது வேலைப்பெற்ற திரளுதலையுடைய போர் கெடும்படி
அழித்து.
6.
கொன்று அவர் முதுகுகாட்டி ஓடுதலைப்பெற்ற, பிணங்கள்
நெருங்கிய போர்க்களப்பரப்பில். 7. பழைய திறையாகத் தந்த ஆண்
யானைகளோடு நெல்லாகிய களிற்றைத் திறையாகத் தருதல்: பதிற்.
90 : 6 - 7. ஒன்றுமொழிந்து (4) கொன்று புறம்பெற்ற (6) என
இயைக்க.
8.
அம்பணம்: பதிற். 71 : 5: ஐங்குறு.
43 : 1; சிலப். 14 :
209.
8-9.
மரக்காலின் அளவையால் அளந்து உறையிடமுடியாத
உணவை அளிப்பானென்று சொல்லுவார்.
7-9.
நெல்லின் ஆர்பதமென இயைக்க.
9-10.
கோபங்கொண்ட பகைவரது மிக்க மாறுபாட்டைத் தடுத்த,
ஒழுங்கையுடைய பகைவரால் குலைத்தற்கு முடியாத படைவகுப்பையும்.
11-12.
விடியற்காலத்தே மேகத்தின் கூட்டத்தையுடைய
சிகரத்தை ஒத்த தோற்றத்தையுடைய பரிசைப்படையின் மேலதாகி
எழுகின்ற ஒளி பரவி விளங்குகின்ற வேலையும்; பரிசைக்கு மேகம்
உவமை (பதிற். 52 : 5, உரை). எஃகு தோலின்மேற்
றோன்றுதல்:
பதிற். 50 : 9.
13.
பூமாலைகள் அசைந்தாற்போலச் சுழலுதலையுடைய
வாள் விழாவையும் உடைய. வாளுக்குப் பூமாலை உவமை; "தூவலி
னனைந்த தொடலை யொள்வாள்" (ஐங்குறு. 206
: 3)
தகைப்பினையும்
(10) எஃகினையும் (12) விழவினையும் (13)
உடைய மள்ளர் (14) என இயைக்க.
14-5.
போர் உண்டாகின்ற வீரர், பனங்குருத்தோடு சேர்த்துத்
தொடுத்த, துர்க்கை வாழ்தலையுடைய வாகைமரத்தினது துய்களை
யுடைய பூவைப்போல. 14 - 6. பனந்தோட்டோடு பூவைத் தொடுத்தல்:
பதிற். 67 : 13; புறநா.
100 : 3 - 5, 265 : 2 - 3.
16-7.
பூத்த முல்லைக் கொடியினது புதலைச் சூழ்ந்த
வண்டாகிய பறவை, காட்டினிடத்தே பிடாமரத்தின்
தொடுத்தலையுடைய பூக்குலையிலே தங்குதற்கு இடமான.
முல்லைப்பூவிற்கு வெள்ளிய பனங்குருத்தின் துண்டுகளும்,
வாகைப் பூவிற்கு வண்டும் உவமை.
18-20.
உயர்ந்த பளிங்கு கலந்த சிவந்த பருக்கைக்
கற்களையுடைய மேட்டு நிலத்தில், விளங்குகின்ற கிரணங்களையுடைய
அழகிய மணியை அவ்விடத்தே வாழ்வார் பெறும் அகன்ற
இடத்தையுடைய ஊர்களையுடைய நாட்டுக்குரியோன்.
காட்டில்
மணி பெறுதல்: பதிற். 21 : 22, 58 : 18
- 9, உரை.
நாடுகிழவோன்
(20) களிற்றோடு நெல்லின் (7) ஆர்பதம்
நல்கும் என்ப (9) என முடிக்க.
(பி
- ம்) 2. யாழ்ப்பாலை. 3. கடறுழந்து செல்லும்.
(6)
1உறையிடுதல்
- தானியங்களை அளக்குங்கால்
அத்தானியங்களைக்
கொண்டே அளவு குறித்தல்.
|