68.
|
கால்கடிப்
பாகக் கடலொலித் தாங்கு
வேறுபுலத் திறுத்த கட்டூர் நாப்பட்
கடுஞ்சிலை கடவுந் தழங்குகுரன் முரசம்
அகலிரு விசும்பி னாகத் ததிர |
5
|
வெவ்வரி
நிலைஇய வெயிலெறிந் தல்ல
துண்ணா தடுக்கிய பொழுதுபல கழிய
நெஞ்சுபுக லூக்கத்தர் மெய்தயங் குயக்கத்
தின்னா ருறையுட் டாம்பெறி னல்லது
வேந்தூர் யானை வெண்கோடு கொண்டு |
10
|
கட்கொடி
நுடங்கு மாவணம் புக்குடன்
அருங்க ணொடைமை தீர்ந்தபின் மகிழ்சிறந்து
நாம மறியா வேம வாழ்க்கை
வடபுல வாழ்நரிற் பெரிதமர்ந் தல்கலும்
இன்னகை மேய பல்லுறை பெறுபகொல் |
15
|
பாய
லின்மையிற் பாசிழை ஞெகிழ
நெடும ணிஞ்சி நீணகர் வரைப்பின்
ஓவுறழ் நெடுஞ்சுவர் நாள்பல வெழுதிச்
செவ்விரல் சிவந்த வவ்வரிக் குடைச்சூல்
அணங்கெழி லரிவையர்ப் பிணிக்கும் |
20 |
மணங்கமழ்
மார்பநின் றாணிழ லோரே. |
துறை
: செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணமும் தூக்கும்
அது. பெயர் - ஏம வாழ்க்கை (12)
(ப
- ரை) கால் கடிப்பாகக் கடல் ஒலித்தாங்கு
(1) முரசும் (3)
அதிர (4) எனக் கூட்டுக.
எயிலெறிந்து
(5) என்ற எச்சத்திற்கு உண்ணாது (6) என்றது
இடமாக உண்டலென ஒரு தொழிற்பெயர் வருவித்து முடிக்க.
உண்ணாது
(6) என்றதனை உண்ணாமலெனத் திரித்து அதனை
அடுக்கிய வென்னும் வினையொடு முடித்துக் கழியவென்றதனைக்
கழியா நிற்கவென்னும் பொருளதாக்கி அதனைப் பெறின் (8) என்னும்
வினையொடு முடிக்க.
7.
ஊக்கத்தரென்றது வினையெச்சம் 11. கள் நொடைமை -
கள்விலை. 12. நாமம் அறியா ஏம வாழ்க்கையென்றது துன்பம் இடை
விரவின இன்பமன்றி இடையறாத இன்பமேயாய்ச் சேறலான வாழ்க்கை
யென்றவாறு.
இச்சிறப்பானே
இதற்கு 'ஏம வாழ்க்கை' என்று பெயராயிற்று.
13.
வடபுலம் - போகபூமியாகிய 1உத்தரகுரு.
14.
இன்னகை - இனிய இன்பம். பல்லுறை - பலநாள் உறைதல்.
இன்னகை
(14) அல்கலும் (13) மேய (14) எனக் கூட்டுக.
பாசிழை
ஞெகிழ (15) நாள்பல எழுதி (17) என முடிக்க.
அரிவையர்ப்
பிணிக்கும் (19) மணங்கமழ் மார்ப. நின் தாள்
நிழலோர் (20) உண்ணாது அடுக்கிய பொழுது பல கழிய (6) இன்னார்
உறையுள்தாம் பெறினன்றி (8) இன்னகை (14) அல்கலும் (13) மேய
பல்லுறை பெறுபகொல்? பெறார் (14); அவர் அவ்வாறு அது
பெறினன்றி நின் மார்பாற் பிணிக்கப்பட்ட அரிவையரும் இன்னகை
அல்கலும் மேய பல்லுறை பெறுவது ஏதெனக் கூட்டி வினைமுடிவு
செய்க.
இதனாற்
சொல்லியது 2காம வேட்கையின் ஓடாத அவன்
வென்றி வேட்கைச்சிறப்புக் கூறியவாறாயிற்று.
(கு
- ரை) 1. காற்றே அடிக்கும் குறுந்தடியாக அமையக்
கடல்
ஒலித்தாற்போல.
2.
வேற்று நாட்டினிடத்தே சென்று தங்கிய பாசறையின் நடுவே.
3-4.
மிக்க ஓசையைப் பாசறை முழுதும் செலுத்துகின்ற
ஒலிக்கின்ற ஓசையையுடைய வெற்றி முரசும். மற்ற நான்கு பூதங்கள்
விரிதற்குக் காரணமான பெரிய ஆகாயத்தினிடத்தே அதிரும்படி
முழங்க.
1-4.
முரசின் ஒலிக்குக் கடலொலி உவமை: பதிற்.
69 : 3 - 4;
"புணரி. குணில்வாய் முரசி னிரங்குந் துறைவன்" (குறுந்:
328 : 2 - 3)
5-6.
விரும்பத்தக்க சித்திரங்கள் நிலைபெற்ற மதிலை
அழித்தல்லது உண்ணுதலைச் செய்யாமற் பலவாக அடுக்கிய
பொழுதுகள் பல நீங்கா நிற்ப.
7-8.
நெஞ்சு விரும்பிய ஊக்கத்தையுடையராய். உடம்பு
அமையும்படிவந்த ஓய்வினையுடைய பகைவரது உறைவிடத்தைத்
தாம் பெற்றாலல்லாமல். மெய்தயங்குமயக்கம்: பதிற்.
79 : 15.
9-10.
பகைவேந்தர் ஏறிச் செல்லும் யானையினது
வெண்கோட்டைக் கொண்டு கள்ளினது கொடி அசையும்
கடைத்தெருவிலே சேரப்புக்கு.
கட்கொடி
. . . . . ஆவணம்: ``கள்ளின் களிநவில்
கொடியொடு`` (மதுரைக். 372); ``நெடுங்கொடி
நுடங்கு நறவுமலி
மறுகில்`` (அகநா. 126 : 10)
11.
பெறுதற்கு அரிய கள்ளிற்கு விலையாகக் கொடுத்து உண்ட
பிறகு மகிழ்ச்சி மிக்கு. 9 - 11. யானைக்கோட்டைக் கள்ளுக்கு
விலையாகத் தருதல் : பதிற். 30 : 11 -
2. உரை.
12-3.
துன்பத்தால் வரும் அச்சத்தை அறியாத இன்பமேயான
வாழ்வையுடைய வடக்கேயுள்ள நிலமாகிய உத்தரகுருவில்
வாழ்வாரைப் போலப் பெரிதும் விரும்பி நாள்தோறும்.
14.
இனிய இன்பம் பொருந்திய பல நாள் உறைதலைப்
பெறுவார்களோ?
15.
உறக்க மில்லாமையால் பசிய பொன்னாற் செய்த இழை
நழுவ; பாயல் - தூக்கம் (பதிற். 19 : 12
உரை); ‘`படலின் பாயல்
வௌவியோளே`` (ஐங்குறு. 195)
16-7.
உயர்ந்த. மண்ணாற் செய்யப்பட்ட மதிலையுடைய நீண்ட
அரண்மனையின் எல்லையில். சித்திரத்தை ஓத்த அழகையுடைய
உயர்ந்த சுவரில் தலைவன் பிரிந்து சென்ற நாட்களைக் கோடிட்டு
எழுதி; சுவரில் எழுதுதல்: குறுந். 358 ; 3.
ஒப்பு. ஓவு: ஓவமென்பதன்
கடைக்குறை.
18-9.
இயல்பாகச் சிவந்த விரல் பின்னும் சிவந்த. அழகிய
வரிகளையுடைய சிலம்பையணிந்த. நோக்கினாரை வருத்துகின்ற
அழகையுடைய மகளிரை வசப்படுத்துகின்ற.
20.
நல்ல மணம் கமழ்கின்ற மார்ப. நினது தாளினது நிழலில்
வாழ்வோர்.
தாணிழலோர்
(20) ஊக்கத்தராய் (7) இன்னார் உறையுள்
பெறினல்லது (8) பல்லுறைபெறுபகொல் (15) என முடிவு செய்க.
(பி
- ம்) 18. குடச்சூல். (8)
1உத்தரகுரு:
சிலப். 2:
10.
2பதிற்.
50, உரை.
|