72.
|
இகல்பெரு
மையிற் படைகோ ளஞ்சார்
சூழாது துணித லல்லது வறிதுடன்
காவ லெதிரார் கறுத்தோர் நாடுநின்
முன்றிணை முதல்வர்க் கோம்பின ருறைந்து |
5
|
மன்பதை
காப்ப வறிவுவலி யுறுத்து
நன்றறி யுள்ளத்துச் சான்றோ ரன்னநின்
பண்புநன் கறியார் மடம்பெரு மையிற்
றுஞ்ச லுறூஉம் பகல்புகு மாலை
நிலம்பொறை யொராஅநீர் ஞெமரவந் தீண்டி |
10
|
உரவுத்திரை
கடுகிய வுருத்தெழு வெள்ளம்
வரையா மாதிரத் திருள்சேர்பு பரந்து
ஞாயிறு பட்ட வகன்றுவரு கூட்டத்
தஞ்சாறு புரையு நின்றொழி லொழித்துப்
பொங்கு பிசிர்நுடக்கிய செஞ்சுடர் நிகழ்வின் |
15
|
மடங்கற்
றீயி னனையை
சினங்கெழு குருசினின் னுடற்றிசி னோர்க்கே. |
துறை
- செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம் -
ஒழுகுவண்ணம். தூக்கு - செந்தூக்கு. பெயர் - உருத்தெழு
வெள்ளம்.
(10)
(ப
- ரை) 1.
இகல் பெருமையின் - இகலானது
பெரிதாகையானே; இகலென்னும் எழுவாய்க்குப் பெருமையை
நிலைப்பயனிலையாகக் கொள்க. அஞ்சாரென்றது வினையெச்சமுற்று.
படைகோளைத்
(1) துணிதல் (2) எனக் கூட்டுக.
2-3.
உடன் காவலெதிராரென்றது பலரும் தம்முட்கூடியும்
காக்க மாட்டாரென்றவாறு. 5. மன்பதை - மக்கட்பன்மை.
அறிவுவலியுறுத்தும்
(5) சான்றோர் (6) எனக் கூட்டுக.
ஈண்டுச்
சான்றோரென்றது மந்திரிகளை.
மடம்பெருமையையும்
(7) இகல்பெருமையைப் (1) போல
எழுவாயும் பயனிலையுமாகக் கொள்க.
8.
துஞ்சல் - எல்லாவுயிரும் இறந்துபடுதல். பகலென்றது
ஊழியை. மாலையென்றது ஊழிமுடிவினை.
9.
ஒராஅ என்றதனை ஒருவவெனத் திரித்து
ஈண்டியென்றதனையும் ஈண்டவெனத் திரிக்க.
10.
உருத்தெழு வெள்ளமென்றது பல்லுயிரையும் ஒருங்கு தான்
கொல்லுங் கருத்துடையது போலக் கோபித்தெழு வெள்ளமென்றவாறு.
இச்சிறப்பானே இதற்கு, 'உருத்தெழு வெள்ளம்'
என்று
பெயராயிற்று.
வெள்ளம்
(10) பரந்து (11) என்றதனைப் பாக்கவெனத் திரித்து
அதனை நுடக்கிய (14) என நின்ற செய்யியவென்னும்
வினையெச்சத்தொடு முடித்து அதனைச் சுடர்நிகழ்வு (14)
என்னும் தொழிற்பெயரோடு முடித்து, வெள்ளம் பரக்கையாலே
அவ்வெள்ளத்தை மாய்க்கவேண்டிச்
14.
பிசிரென்றது பிசிருடைய வெள்ளத்தை. நுடக்குதல் -
மாய்த்தல்.
ஞாயிறு
பட்ட அகன்றுவரு கூட்டத்து (12) மடங்கற்றீ (15)
என மாறிக் கூட்டி, அவ்வெள்ளத்தை மாய்த்தற்கு ஆதித்தர்
பன்னிருவரும் தோற்றின பெரிய கூட்டத்தையுடைய வடவைத்தீயென
உரைக்க. ஆதித்தர் கூட்டத்தை இவன் படைத்தலைவர்க்கு உவமமாக்
கொள்க.
அம்
சாறு புரையும் நின் தொழிலொழித்து (13) மடங்கற்றீயின்
அனையை (15) என மாறிக் கூட்டுக. அம் சாறுபுரையுந்
தொழிலென்றது. 1அழகிய விழாப்போல எல்லார்க்கும் இன்பத்தைச்
செய்யும் தொழிலென்றவாறு.
நின்னொடு
கறுத்தோர் (3) தம் மடம் பெருமையால் (7) நின்
(3) முன் குடிமுதல்வர்க்கு (4) அறிவுவலியுறுத்தும் (5)
சான்றோரையொத்த நின் (6) சூழ்ச்சிப்பண்புடைமை அறிகின்றிலர்;
நீ தான் சூழ்ச்சியுடையையேயன்றிக் (7) குருசிலே, நின்
உடற்றிசினோர்க்குப் போர்செய்யுமிடத்து (16) மடங்கற்றீயின்
அனையை (15); அதனையும் அறிகின்றிலராதலால், அவர் தம் இகல்
பெருமையானே அஞ்சாராய்ப் படை கோளைத் (1) துணிதலல்லது (2)
நாட்டைச் (3) சிறிதும் உடன் (2) காவலெதிர் கொள்ளார் (3) எனக்
கூட்டி வினைமுடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவன் சூழ்ச்சியுடைமையும் வென்றிச்
சிறப்பும் உடன் கூறியவாறாயிற்று.
(கு
- ரை) 1-2. பகைமை பெரிதாகையினாலே அஞ்சாராகிப்
படை கொள்ளுதலை ஆராயாமல் நிச்சயித்தலை அல்லாமல்.
2-3.
தம்முட் கூடியும் நின்னொடு புகைகொண்டோர் சிறிது
நேரமும் தம் தம் நாட்டைக் காத்துக் கொள்ளுதலை
மாட்டாராயினார். வறிது - சிறிது; உரிச்சொல்.
3-7.
நின் குடியில் நினக்கு முன்பு இருந்த அரசர்களுக்குப்
பாதுகாவலைச் செய்தனராகி வாழ்ந்து, மக்களின் தொகுதியைக்
காப்பதற்கு அறிவுரையை வற்புறுத்திக் கூறும், தருமத்தை அறிந்த
உள்ளத்தையுடைய மந்திரிகளைப் போன்ற நின்னுடைய
சூழ்ச்சிப்பண்பைத் தம்முடைய அறியாமை பெரிதாகையால்
அப்பகைவர் நன்றாக அறியமாட்டாராயினார்.
8-9.
எல்லாவுயிர்களும் இறக்கும் ஊழிபுகுகின்ற முடிவில், நிலம்
பாரம் நீங்க நீரானது பரக்கும்படி வந்து நெருங்க; ஒரா - ஒருவ;
ஈண்டி - ஈண்ட; எச்சத்திரிபுகள். இது நீரின் ஊழியைக் கூறியது;
"பனியொடு தண்பெய றலைஇய வூழியும்" (பதிற்.
2 - 8 : 9)
10.
உலாவுதலையுடைய அலை விரைந்து சென்ற உயிர்களைக்
கொல்லுதற்குக் கோபித்து எழுகின்ற வெள்ளம்: "உருத்துவரு
மலிர்நிறை" (பதிற். 28 : 12)
11.
எல்லை இன்னதென்று வரையறுத்து அறிதற்கு இயலாத
திசைகளில் இருளொடு சேர்ந்து பரக்க. இருளொடு என ஒடு
வருவிக்க.
12.
அதனைப் போக்கச் சூரியர் பன்னிருவரும் தோன்றிய,
சேர்ந்து வரும் கூட்டத்தையுடைய.
கூட்டத்து
(12) மடங்கற்றீ (15) என இயையும்.
13.
அழகிய விழாவைப்போல எல்லார்க்கும் இன்பத்தைச்
செய்யும் நினது தொழிலை ஒழித்து.
14-5.
பொங்குகின்ற பிசிரையுடைய வெள்ளத்தை வற்றச்
செய்யும்பொருட்டுச் சிவந்த ஒளி நிகழ்தலையுடைய வரவை
என்னும் ஊழித்தீயைப் போன்றனை; நுடக்கிய: செய்யியவென்னும்
வினையெச்சம்.
12-5.
சூரியரோடு கூடிய வடவைத்தீ: பதிற். 62 :
6 - 8;
சூரியர் படைத்தலைவர்க்கும், வடவைத்தீ சேரனுக்கும் உவமைகள்.
16.
சினம் பொருந்திய குருசிலே, நின்னொடு மாறுபட்ட
பகைவருக்கு.
உடற்றிசினோர்க்கு
(16) மடங்கற்றீயின் அனையை (15) என
மாறி இயைக்க.
(பி
- ம்.) 3. நாடென. 4. முதல்வரோம்பினர்.
8. துஞ்சலூறும்.
14. பிசிருடக்கிய. (2)
1"விழவுமேம்
பட்டவென் னலனே" (குறுந்.
125: 4) |