73.
|
உரவோ
ரெண்ணினு மடவோ ரெண்ணினும்
பிறர்க்குநீ வாயி னல்லது நினக்குப்
பிறருவம மாகா வொருபெரு வேந்தே
........................................................................
........................................................................
மருதஞ் சான்ற மலர்தலை விளைவயற் |
5
|
செய்யு
ணாரை யொய்யு மகளிர்
இரவும் பகலும் பாசிழை களையார்
குறும்பல் யாணர்க் குரவை யயரும்
காவிரி மண்டிய சேய்விரி வனப்பிற்
புகாஅர்ச் செல்வ பூழியர் மெய்ம்மறை |
10
|
கழைவிரிந்
தெழுதரு மழைதவழ் நெடுங்கோட்டுக்
கொல்லிப் பொருந கொடித்தேர்ப் பொறையநின்
வளனு மாண்மையுங் கைவண் மையும்
மாந்த ரளவிறந் தனவெனப் பன்னாள்
யான்சென் றுரைப்பவுந் தேறார் பிறரும் |
15
|
சான்றோ
ருரைப்பத் தெளிகுவர் கொல்லென
ஆங்குமதி மருளக் காண்குவல்
யாங்குரைப் பேனென வருந்துவல் யானே. |
இதுவும்
அது. பெயர் - நிறந்திகழ் பாசிழை.
(ப
- ரை) 1[கூந்தலையுடைய
மகளிர், ஒண்ணுதல்பொலிந்த
மகளிரெனக் கூட்டுக.
நிறந்திகழ்
பாசிழையென்றது 2தன்னின் அழுத்திய மணியினும்
தன் நிறம் திகழும் பசும்பொன்னிழை யென்றவாறு.
இச்சிறப்பானே
இதற்கு, 'நிறந்திகழ் பாசிழை' என்று
பெயராயிற்று.
உயிர்திணைமகளிர்
நெஞ்சத்துமென உம்மையை மாறிக் கூட்டுக.
தெய்வமென்றது
தெய்வத்தன்மையை.
தெய்வந்தரூஉம்
ஆன்றோரெனக் கூட்டுக. குலமகளிரை உயர்
3திணை மகளிரென்று முன்னே கூறினமையான் ஆன்றோரென்றது
பரத்தையரையாம்; அவர்களை ஆன்றோரென்றது தம் 4துறைக்கு
வேண்டுவன அமைந்தாரென்றவாறு.] 4. மருதமென்றது
மருதநிலத்தன்மையை.
6-7.
இரவும்பகலும் குரவை அயருமெனக் கூட்டுக.
குறும்பல்குரவையென்றது
ஒன்று ஆடும் இடத்திற்கு ஒன்று
அணியதாய் அவைதாம் பலவாயிருக்கின்ற குரவையென்றவாறு.
குரவையாரும்
(7) புகார் (9) எனவும் காவிரி மண்டிய
புகாரெனவும் கூட்டுக.
14.
உரைப்பவுமென்ற உம்மை தாமே அறியக்கடவதனை யாம்
சொல்லவும் அறிகிலரெனச் சிறப்பும்மை. பிறருமென்ற உம்மை
அசைநிலை. 'சான்றோர்.........................கொல்லென' என்றதன் பின்
கருதினென ஒரு சொல் வருவித்து அதனைக் காண்குவலென்னும்
வினையொடு முடிக்க.
பெருவேந்தே
(3), புகார்ச்செல்வ, பூழியர் மெய்ம்மறை (9),
கொல்லிப் பொருந, பொறைய (11), நின் பகைவர் நின் (11) வளனும்
ஆண்மையும் கைவண்மையும் (12), உலகத்துமக்கள் அளவைக்
கடந்தன; அவனோடு மாறுபடுவது நுமக்கு உறுதியென்றெனப்
பன்னாள் (13) யான் சொல்லவும் தேறிற்றிலர் (14); தேறாராயினும்
உலகத்து மதிப்புடைய சான்றோர் சொல்லத் தாம் தேறுவரோவெனக்
கருதின் (15) அவர் சொன்னவிடத்தும் அவர்கள் மதிமருண்டதுவே
காணாநின்றேன் (16); ஆகலான் நின் பெருமையை அவர்கட்கு
யாங்கு உரைப்பேனென வருந்தாநின்றேன் யான் (17); இஃது என்னுறு
குறை; இதனை அறிந்து நீ அவர்பால் அருளவேண்டுவலென
வினைமுடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவன் வென்றிக்கு அடியாகிய
செல்வமும் ஆண்மையும் 5கைவண்மையும் உடன் கூறியவற்றான்
அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று.
(கு
- ரை) 1. உரவோர், மடவோர்; பதிற்.
71:25; குறுந்.
20 : 3-4.
உரன்
அறிவென்னும் பொருளில் வந்தது (சிறுபாண்.
189-90, ந.)
1-3.
அறிவுடையோரை எண்ணினாலும், அறிவில்லாதோரை
எண்ணினாலும் பிறர்க்கு நீ உவமையாகப் பொருந்தினால் அல்லாமல்,
நினக்குப் பிறரை உவமமாகக் கூறுதற்கு இயலாத ஒப்பற்ற
பெருமையையுடைய அரசே; "உயர்ந்ததன் மேற்றே யுள்ளுங் காலை"
(தொல். உவம. 3) என்பதனால் உவமையாகக்
கூறப்படும் பொருள்
உயர்ந்ததாதலின் சேரனுடைய பெருமை விளக்கப்பட்டது; முருகு.
276; மதுரைக். 42. ந.;
புறநா. 377 : 10 - 11 என்பவற்றைப் பார்க்க.
4.
மருதம் சான்ற வயல்: மதுரைக். 270.
4-5.
ஊடலாகிய உரிப்பொருள் அமைந்த அகன்ற
இடத்தையுடைய விளைகின்ற வயல்களாகிய செய்களில், பயிரை
அழிக்கின்ற நாரையைத் துரத்தும் மகளிர். ஒய்தல்: பதிற்.
29 : 2 - 7.
மகளிர்
நாரையைத் துரத்துதல்: பதிற். 29 : 2 -
7.
6-7.
பசிய பொன்னாற்செய்த ஆபரணங்களைக் களைதல்
இல்லாதவராகி, ஒன்றுக்கு ஒன்று அண்மையிலுள்ளதாகி அவைதாம்
பலவாயிருக்கின்ற புதிதுபுதிதான குரவைக் கூத்தை இரவிலும்
பகலிலும் நிகழ்த்துதற்கு இடமான. இரவும் பகலும் அயருமென
இயைக்க; 'குறும்பல்லூர் நெடுஞ் சோணாட்டு - ஒன்றற்கு ஒன்று
அண்ணிதாகிப் பலவாகிய ஊர்களையுைடைய பெரிய சோழநாட்டில'
(பட்டினப். 28, ந.)
9.
பூழியர் மெய்ம்மறை: பதிற். 90 : 27.
8-9.
காவிரி மிக்குச் சென்ற, நெடுந்தூரத்தே விரிகின்ற
அழகினையுடைய புகார் நகரத்தையுடைய செல்வ,
பூழிநாட்டிலுள்ளார்க்குக் கவசம் போன்றாய். இதனாற் சோழநாடும்,
பூழிநாடும் இவன் ஆட்சிக்கு உட்பட்டமை தெரிகின்றது.
11.
கொல்லிப்பொருந: புறநா. 22 : 28; சிலப்.
குன்றக்.
பாட்டுமடையிறுதி. 10-11. மூங்கில் விரிந்து எழுகின்ற மேகங்கள்
தவழும் உயர்ந்த சிகரங்களையுடைய கொல்லிமலைக்குத் தலைவ;
கொடிகளையணிந்த தேரையுடைய சேரனே.
11-4.
நின்னுடைய செல்வமும் வீரமும் கொடையும் மக்களின்
அளவைக்
கடந்தனவென்று தாமே அறியவேண்டியவராக
இருந்தும்
யான் பலநாள் சென்று நின்பகைவரிடத்துச்
சொல்லவும்
அவர் அதனைத் தெளியமாட்டாராயினார்.
14-5.
பிறராகிய சான்றோர் அவற்றை எடுத்துச் சொல்லத்
தெளிவாரோ எனக் கருதினால். பிறரும்: உம்மை அசைநிலை.
கொல்லென என்பதன்பின் கருதினென்பதை அவாய்நிலையால்
வருவித்து முடிக்க.
16.
அச்சான்றோர் கூறவும் பகைவரது புத்தி மயங்கக்
காண்பேன்.
17.
ஆதலால் யான் எவ்வாறு அவர்மனம் தெளியும் வண்ணம்
உரைப்பேனென்று வருந்துவேன்; இதனை அறிந்து நீ அவர்பால்
அருள் செய்தல் வேண்டும்.
(பி
- ம்) 2. நீயாயின். 5. ஒப்புமகளிர். 8.
சேய்வரி. 14.
யாஞ்சென்று. (3)
1[
]இவ்விருதலைப் பகரத்திற்கு உட்பட்ட உரைக்குரிய மூலம்
ஒரு பிரதியிலும் கிடைக்கவில்லை.
2"மின்னி,
மணிபொரு பசும்பொன்" (கலித். 143
: 3 - 4)
3திணை
- குலம்.
4சிலப், 14
: 166 - 7, ’42 : 138 - 9; மணி,
2 : 18 - 32;
பெருங். 1. 35;
84 - 6.
5வென்றிக்கு
வண்மை அடியாதல்: ‘அருளிலர்
கொடாமைவல்லராகுக வென்றதனாற் பயன், அவையுடையோர் தத்தம்
பகைவரை வெல்வராதலால், பகையெதிர்ந்தோர் அவையிலராக
என்பதாம்’ (புறநா,
27 : 17 - 9, உரை)
|