77.
|
எனைப்பெரும்
படையனோ சினப்போர்ப் பொறையன்
என்றனி ராயி னாறுசெல் வம்பலிர்
மன்பதை பெயர வரசுகளத் தொழியக்
கொன்றுதோ ளோச்சிய வென்றாடு துணங்கை |
5
|
மீபிணத்
துருண்ட தேயா வாழியிற்
பண்ணமை தேரு மாவு மாக்களும்
எண்ணற் கருமையி னெண்ணின்றோ விலனே
கந்துகோ ளீயாது காழ்பல முருக்கி
உகக்கும் பருந்தி னிலத்துநிழல் சாடிச் |
10
|
சேண்பரன்
முரம்பி னீர்ம்படைக் கொங்கர்
ஆபரந் தன்ன செலவிற்பல்
யானை காண்பலவன் றானை யானே. |
துறை
- உழிஞை யரவம். வண்ணமும் தூக்கும் அது.
பெயர் - வென்றாடு துணங்கை (4)
(ப
- ரை) 3. மன்பதை பெயரவென்றது படை கெட்டோட
வென்றவாறு.
3-4.
அரசு களத்தொழியக் கொன்னென்றது அரசரைக்
களத்திலே உடலொழிந்து கிடக்கக் கொன்றென்றவாறு.
கொன்று
தோளோச்சிய (4) பிணம் (5) எனக் கூட்டி, முன்பு
தம்முடன் பகைத்தவரைக் கொன்று தோளோச்சியாடி இப்பொழுது
இவன் களத்திற்பட்டுக் கிடக்கின்ற வீரர்பிணமென அவ்வீரர்
செய்தியை அவர் பிணத்தின் மேலேற்றிச் சொல்லியவாறாக உரைக்க.
வென்றாடு
துணங்கைப் (4) பிணம் (5) என்றது
ஊர்களிலேயாடும் துணங்கையன்றிக் 1களங்களிலே வென்றாடின
துணங்கையையுடைய பிணமென்றவாறு.
இச்சிறப்பானே
இதற்கு, 'வென்றாடு துணங்கை' என்று
பெயராயிற்று.
5.
மீபிணத்தைப் பிணமீயெனக் கொள்க.
.எண்ணிற்றோவென்னும் ஒற்று மெலிந்தது.
8. கந்துகோளீயாதென்றது வினையெச்சவினைத் திரிசொல். 9.
சாடியென்னும் வினையெச்சத்தினைச் செலவு (11) என்னும்
தொழிற்பெயரோடு முடிக்க.
10.
ஈர்ம்படை.......................................................................
வம்பலிர்
(2), பொறையன் எனைப் பெரும்படையன் (1)
என்றனிராயின் (2), அவன் தானையிடத்துத் (12), தேரும் மாவும்
மாக்களும் (6) எண்ணற் கருமையின் எண்ணிற்றிலன்; ஆயின் (7),
தானையின் யானை தான் எண்ணினை யோவெனின், அதுவும்
எண்ணினேனல்லேன்; (கட்புலனுக்கு வரையறைப்பட்டது போல)
ஆபரந்தாலொத்த செலவிற் பல (11) யானையை அவன் தானையானே
காண்பல் (12) எனக் கூட்டி வினை. முடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவன் படைபெருமைச் சிறப்புக்
கூறியவாறாயிற்று.
இப்பாட்டிற்
பொதுப்படப் படையெழுச்சி கூறியதனை
உழிஞையரவமென்றது ஆண்டு அப்படையெழுங்காலத்து
2நொச்சிமீதிற் போர் குறித் தெழுந்ததை ஒரு காரணத்தால்
அறிந்துபோலும்.
(கு
- ரை) 1-2. வழியிலே செல்கின்ற புதியோர்களே,
சினத்தாற் செய்யும் போரையுடைய சேரன் எவ்வளவு பெரிய
படையையுடையவனோ என்று கேட்பீராயின்.
3-4.
தம் பகைவரது படை கெட்டு ஓடவும், அரசர்கள்
போர்க்களத்தில் இறப்பவும் கொன்று கையைவீசி
ஆடியவென்றாடுகின்ற துணங்கைக் கூத்தையாடிய. துணங்கை
யாடியவர் இப்பொழுது பிணமான வீரர்.
5-7.
பிணத்தின்மேலே உருண்ட, வாய் தேயாத
சக்கரத்தையுடைய, செலுத்தற்கேற்பப் பண்ணுதலமைந்த தேரையும்
குதிரைகளையும், காலாட்களையும் எண்ணுதற்கு முடியாமையின்
எண்ணினேனல்லேன்.
8-12.
சேரனது யானைப் படையின் சிறப்பு.
8-9.
கட்டுத்தறியைக் கொள்ளாமல், குத்துக்கோல் பலவற்றை
முறித்து மேலே பறக்கும் பருந்தினது நிலத்தே விழும் நிழலைக்
கோபித்து
10.
உயர்ந்த பருக்கைக்கற்களையுடைய மேட்டுநிலத்தில்,
நீரை வெளிப்படுத்தற் பொருட்டுத் தோண்டும் குந்தாலி முதலிய
ஆயுதத்தையுடைய கொங்கு நாட்டிலுள்ளாரது (பதிற்.
22 : 12 - 5);
"பரன்மட் சுவல முரணில முடைத்த, வல்வாய்க் கணிச்சிக் கூழார்
கோவலர்", "பயநிரை சேர்ந்த பாழ்நாட்டாங்கண், நெடுவிளிக்
கோவலர் கூவற்றோண்டிய, கொடுவாய்ப் பத்தல் வார்ந்துகு சிறுகுழி"
(அகநா. 21 : 21 - 2. 155 : 7 - 9)
11-2.
பசுக்கள் பரந்தால் ஒத்த செல்லுதலையுடைய பல
யானைகளை அவன் சேனையிடத்தே காண்பேன்; பதிற்.
78 : 14;
புறநா. 5 : 2.
சாடி
(9) என்னும் வினையெச்சம் செலவு (11) என்னும்
தொழிற்பெயரோடு இயையும்.
சேரநாடு
யானையில் மிக்கதென்பது, "வேழமுடைத்து
மலைநாடு" (தனிப்.) என்பதனாலும் அறியப்படும்.
மு. 'பகட்டினாலும்
மாவினாலும் துகட்டபு சிறப்பிற் சான்றோர் பக்கம்' (தொல்.
புறத்.
21, ந.)
(பி
- ம்) 5. தெய்வயாழின். (7)
1"நிலம்பெறு
திணிதோ ளுயர வோச்சிப், பிணம்பிறங்
கழுவத்துத் துணங்கை யாடி", "புலவுக்களத் தோனே, துணங்கை
யாடிய வலம் படு கோமான்" (பதிற்.
45 : 11 - 5, 57 : 3 - 4)
2நொச்சி
- மதில். |