80.
|
வான்மருப்பிற்
களிற்றியானை
மாமலையிற் கணங்கொண்டவர்
எடுத்தெறிந்த விறன்முரசம்
கார்மழையிற் கடிதுமுழங்கச் |
5
|
சாந்துபுலர்ந்த
வியன்மார்பிற்
றொடிசுடர் வரும் வலிமுன்கைப்
புண்ணுடை யெறுழ்த்தோட் புடையலங் கழற்காற்
பிறக்கடி யொதுங்காப் பூட்கை யொள்வாள்
ஒடிவி றெவ்வ ரெதிர்நின் றுரைஇ |
10
|
இடுக
திறையே புரவெதிர்ந் தோற்கென
அம்புடை வலத்த ருயர்ந்தோர் பரவ
அனையை யாகன் மாறே பகைவர்
கால்கிளர்ந் தன்ன கதழ்பரிப் புரவிக்
கடும்பரி நெடுந்தேர் மீமிசை நுடங்குகொடி |
15
|
புலவரைத்
தோன்றல் யாவது சினப்போர்
நிலவரை நிறீஇய நல்லிசைத்
தொலையாக் கற்பநின் றெம்முனை யானே. |
துறை
- வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம் -
ஒழுகு வண்ணம். தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்.
பெயர் - புண்ணுடை யெறுழ்த்தோள் (7)
(ப
- ரை) 2. கணங்கொள்ளவெனத் திரிக்க. அவரென்றது
பகைவரை. 7. புண்ணுடை எறுழ்த்தோளென்றது எப்பொழுதும்
பொருது புண்ணறாத வலிய தோளென்றவாறு.
இச்சிறப்பானே
இதற்கு, 'புண்ணுடை யெறுழ்த்தோள்' என்று
பெயராயிற்று.
10. புரவெதிர்ந்தோற்கென்றது
கொடையேற்றிருக்கின்ற
அவனுக்கென்ற வாறு.
கொடி (14) தோன்றல்
(15) என்றதனை எழுவாயும்
பயனிலையுமாகக் கொள்க.
நின் தெம்முனைப்
(17) புலவரையான் (15) என மாறிக் கூட்டுக.
தொலையாக்கற்ப
(17), நின் வீரராகிய உயர்ந்தோர் (11)
நின்தெவ்வராகிய அவருடைய (2) களிற்றியானை (1) மலையிற்
கணங்கொள்ளா நிற்க (2), முரசம் (3) கடிதுமுழங்கா நிற்க (4)
அவையிற்றை ஒன்றும் மதியாதே நின்னொடு ஒடிவில் தெவ்வராகிய
அவர் எதிர்நின்று பெயரா (9) இப்புரவெதிர்ந்தோனுக்குத்
திறையையிடுகவெனச் சொல்லி நின்னைப் (10) பரவும்படி நீ (11)
அதற்கேற்ற தன்மையையுடைய யானபடியாலே (12) நின்தெம்முனைப்
(17) புலவெல்லையில் நின் (15) பகைவர் (12) தேர் மிசைக்கொடி (14)
போரைக் குறித்துத் தோன்றல் யாவது (15) எனக் கூட்டி வினை
முடிவு செய்க.
இதனாற் சொல்லியது,
அவன் கொடைச்சிறப்போடு படுத்து
வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று.
தெம்முனைப் (17)
புலவரைப் (15) பகைவர் (12) கொடி (14)
தோன்றல் யாவது (15) என 1எதிரூன்றுவாரின்மை தோன்றக் கூறிய
அதனால், வஞ்சித்துறைப் பாடாணாயிற்று.
முன்னர் ஆறடியும்
வஞ்சியடியாய் வந்தமையானே,
வஞ்சித்தூக்கு மாயிற்று.
(கு
- ரை) 1-2. வெள்ளிய கொம்பையுடைய ஆண்யானைகள்
பெரிய மலைகளைப் போலத் தொகுதிகொள்ள; கொண்டு - கொள்ள;
எச்சத்திரிபு.
2-4. பகைவர்
குறுந்தடியை எடுத்து அடித்த, வெற்றியைத்
தரும் முரசம் கார்காலத்து மேகத்தைப் போல மிக்கு ஒலிப்ப.
செய்யுளாதலின் அவரென்னும் சுட்டுப்பெயர் முதலில் வந்தது.
விறல்முரசம்: பதிற். 17. 5, உரை.
5-9. பகைவரது
இயல்பு.
5-6. பூசிய சந்தனம்
புலர்ந்த அகன்ற மார்பினையும், வீரவளை
ஒளிவிடும் வன்மையையுடைய முன்கையையும்.
7. புடையலங்கழற்கால்:
புறநா. 99 : 5. 8. "அடியொதுங்கிப்
பிற்பெயராப், படையோர்க்கு முருகயர" (மதுரைக்.
37 - 8)
7-8. எப்பொழுதும்
போர் செய்தலால் புண்களையுடைய
வன்மையைப் பெற்ற தோள்களையும், பனைமாலையையும்,
கழலையணிந்த கால்களையும், பின்னே அடியிடாமைக்குக்
காரணமான மேற்கோளையும், ஒள்ளிய வாளையும் உடைய.
9. பகைமையினின்றும்
தவிர்தல் இல்லாத நின் பகைவரது
எதிரே நின்று உலாவி. 10 - 11. பாதுகாத்தலை ஏற்றுக்கொள்பவனாகிய
எம் அரசனுக்குத் திறையை இடுகவென்று. அம்புடைய
வெற்றியையுடையராகி உயர்ந்தோராகிய நின் வீரர் நின்னைப்
பரவாநிற்ப.
12. நீ அதற்கேற்ற
தன்மையையுடையை யாதலால்.
13. "காலியக்
கன்ன கதழ்பரி கடைஇ" (மதுரைக். 440)
12-3. பகைவரது,
காற்று எழுந்தாற்போன்ற விரைந்த
செலவையுடைய குதிரைகளால் இழுக்கப்பட்ட, விரைந்த
ஓட்டத்தையுடைய உயர்ந்த தேரின்மீது அசைகின்ற கொடிகள்.
17. தொலையாக்
கற்ப: பதிற். 43 : 31.
15-7. சினத்தாற்
செய்யும் போரையும், நிலவெல்லையில்
நிறுத்திய நல்லிசையையும் அழிவில்லாத கல்வியையும் உடையாய்,
நின்பகைவரது நிலவெல்லையில் தோன்றுதல் எங்கேயுள்ளது?
கற்ப, நின்தெம்முனைப்
(17) புலவரையான் (15) நுடங்குகொடி
(14) தோன்றல் யாவது (15) என மாறிக் கூட்டுக.
மு.
திறைகொடுத்தோரது குறைபாடு கூறியது (தொல்.
புறத்.
8, ந.) (10)
இதன் பதிகத்துக்
கொல்லிக்கூற்றம் (3) என்றது
கொல்லிமலையைச் சூழ்ந்த மலைகளையுடைய நாட்டினை.
3. நீர்கூர்மீமிசை
என்றது அந்நாட்டு நீர்மிக்க மலையின்
உச்சியை.
9. நொச்சிதந்து
என்றது தகடூர் மதிலைக்
கைக்கொண்டென்றவாறு.
1எதிரூன்றுவார்
- காஞ்சித் திணைக்கு உரியோர்.
|