முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை

ஆசிரியர் குமட்டூர்க் கண்ணனார் பாடிய

இரண்டாம் பத்து

1பதிகம்

மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி
இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு
வெளியன் வேண்மாள் நல்லினி யீன்றமகன்
அமைவர லருவி யிமையம் விற்பொறித்
திமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத்
தன்கோ னிறீஇத் தகைசால் சிறப்பொடு
பேரிசை மரபி னாரியர் வணக்கி
நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து
நெய்தலைப் பெய்து கைபிற் கொளீஇ
அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு
பெருவிறன் மூதூர்த் தந்துபிறர்க் குதவி
அமையார்த் தேய்த்த அணங்குடை நோன்றாள்
இமைய வரம்பன் நெடுஞ்சேர லாதனைக்
குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப்பாட்டு.

  

அவைதாம்,  புண்ணுமிழ்குருதி, மறம்வீங்கு பல்புகழ், பூத்த நெய்தல்
சான்றோர் மெய்ம்மறை, நிரைய  வெள்ளம், துயிலின் பாயல், வலம்படு
வியன்பணை,   கூந்தல்  விறலியர்,  வளனறு   பைதிரம்,  அட்டுமலர்
மார்பன் - இவை பாட்டின் பதிகம்.

பாடிப்     பெற்ற பரிசில்: உம்பற்காட்டு  ஐஞ்ஞூறூர்  பிரமதாயம்
கொடுத்து  முப்பத்தெட்டியாண்டு  தென்னாட்டுள்  வருவதனிற் பாகம்
கொடுத்தான் அக் கோ.

இமைய   வரம்பன்    நெடுஞ்சேரலாதன்    ஐம்பத்தெட்டியாண்டு
வீற்றிருந்தான்.


1.   இப்பதிகமும்,   ஏனைப்    பத்துக்களிற்   காணப்படும்
பதிகங்களும் பதிற்றுப்பத்து  மூலம்  மட்டில்  உள்ள  ஏடுகளிற்
காணப்படவில்லை.  பழைய  உரையோடு  கூடிய  ஏடுகளிற்றான்
காணப்படுகின்றன.





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை

ஆசிரியர் குமட்டூர்க் கண்ணனார் பாடிய

இரண்டாம் பத்து

1பதிகம்

மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி
இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு
வெளியன் வேண்மாள் நல்லினி யீன்றமகன்
அமைவர லருவி யிமையம் விற்பொறித்
திமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத்
தன்கோ னிறீஇத் தகைசால் சிறப்பொடு
பேரிசை மரபி னாரியர் வணக்கி
நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து
நெய்தலைப் பெய்து கைபிற் கொளீஇ
அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு
பெருவிறன் மூதூர்த் தந்துபிறர்க் குதவி
அமையார்த் தேய்த்த அணங்குடை நோன்றாள்
இமைய வரம்பன் நெடுஞ்சேர லாதனைக்
குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப்பாட்டு.

  

அவைதாம்,  புண்ணுமிழ்குருதி, மறம்வீங்கு பல்புகழ், பூத்த நெய்தல்
சான்றோர் மெய்ம்மறை, நிரைய  வெள்ளம், துயிலின் பாயல், வலம்படு
வியன்பணை,   கூந்தல்  விறலியர்,  வளனறு   பைதிரம்,  அட்டுமலர்
மார்பன் - இவை பாட்டின் பதிகம்.

பாடிப்     பெற்ற பரிசில்: உம்பற்காட்டு  ஐஞ்ஞூறூர்  பிரமதாயம்
கொடுத்து  முப்பத்தெட்டியாண்டு  தென்னாட்டுள்  வருவதனிற் பாகம்
கொடுத்தான் அக் கோ.

இமைய   வரம்பன்    நெடுஞ்சேரலாதன்    ஐம்பத்தெட்டியாண்டு
வீற்றிருந்தான்.


1.   இப்பதிகமும்,   ஏனைப்    பத்துக்களிற்   காணப்படும்
பதிகங்களும் பதிற்றுப்பத்து  மூலம்  மட்டில்  உள்ள  ஏடுகளிற்
காணப்படவில்லை.  பழைய  உரையோடு  கூடிய  ஏடுகளிற்றான்
காணப்படுகின்றன.


 மேல்மூலம்