முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
             ஏழாம் பத்து பதிகம்

 



மடியா வுள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த
நெடுநுண் கேள்வி யந்துவற் கொருதந்தை
ஈன்றமகள் பொறையன் பெருந்தேவி யீன்றமகன்
நாடுபதி படுத்து நண்ணா ரோட்டி
 5




வெருவரு தானை கொடுசெருப் பலகடந்
தேத்தல் சான்ற விடனுடை வேள்வி
ஆக்கிய பொழுதி னறத்துறை போகி
மாய வண்ணனை மனனுறப் பெற்றவற்
கோத்திர நெல்லி னொகந்தூ ரீத்துப்
 10

புரோசு மயக்கி
மல்ல லுள்ளமொடு மாசற விளங்கிய

     செல்வக்கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடினார்
பத்துப்பாட்டு. அவைதாம்: புலாஅம்பாசறை, வரைபோலிஞ்சி,
அருவியாம்பல், உரைசால் வேள்வி, நாண்மகிழிருக்கை, புதல்சூழ் பறவை, வெண் போழ்க்கண்ணி, ஏமவாழ்க்கை, மண்கெழுஞாலம்,
பறைக்குரலருவி, இவை பாட்டின் பதிகம்.

     பாடிப் பெற்ற பரிசில்: 1சிறுபுறமென நூறாயிரங்காணம்
கொடுத்து 2நன்றாவென்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட
நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ.

     செல்வக் கடுங்கோ வாழியாதன் இருபத்தையாண்டு
வீற்றிருந்தான்.

     (கு - ரை) 1. சோம்பியிராத ஊக்கத்தால் பகைவரைத்
தன்னோடு சேர்த்த; உள்ளம் - ஊக்கம்; "உள்ள முடைமை யுடைமை"
(குறள், 592, பரிமேல்.). 2. நீண்ட நுண்ணியவான நூற்பொருளைக்
கேட்டலுடைய; நுண் கேள்வி: கேட்கப்படுகின்ற பொருளினது
நுண்மை கேள்விமேல் ஏற்றப்பட்டது (குறள். 419, பரிமேல்.)

     4. நாடுகளில் ஊர்களை உண்டாக்கிப் பகைவரை ஓடச் செய்து.

     5. பகைவர் அஞ்சத்தக்க சேனையால், பல போர்களை
வஞ்சியாமல் எதிர்நின்று வென்று.

     6-7. புகழ்தலமைந்த செல்வத்தையுடைய வேள்விகளைச் செய்த
பொழுதில் மற்ற அறத்தின் கூறுபாடுகளையும் செய்து முடித்து.

     8. கரிய நிறத்தையுடைய திருமாலைத் தன் மனதிலே மிகப்
பெற்று.

     8-9. அத்தெய்வத்திற்கு அக்கினிகோத்திரத்திற்குரிய நெல்லின்
விளைவையுடைய ஒகந்தூரென்னும் ஊரைத் தேவதானமாகக்
கொடுத்து; ஓத்திரநெல் என்றது இராசான்னமென்னும் நெல்லை;
'பறவைப் பெயர்ப்படுவத்தம் - பறவையின் பெயரைப் பெறுகின்ற
நெல்லு: என்றது இராசன்ன மென்னும் பெயர் பெறுகின்ற
நெல்லென்றவாறு. ஆகுதி பண்ணுதற்கு இந்த நெல்லுச்சோறே
சிறந்ததென்று இதனைக் கூறினார்; இனி மின்மினி நெல்லென்பாரும்
உளர்; இப்பெயர் வழக்கின்மையும் ஆகுதிக்குச் சிறவாமையும்
உணர்க' (பெரும்பாண். 305, ந.) என்பது இங்கே அறிதற் பாலது.

     10. தன் புரோகிதனைக் காட்டிலும் தான் அறநெறியிலே
மேம்பட்டு; புரோசு: தொல். கிளவி. 56, சே, ந,

     "மெய்யூ ரிமைச்சியன் மையூர் கிழானைப், புரையறு கேள்விப் புரோசு மயக்கி" (பதிற். 9-ஆம் பதிகம், 11 - 2)

     11. வளத்தையுடைய மனத்தொடு குற்றமில்லாமல் விளங்கிய.


    1சிறுபுறம் - சிறுகொடை; அறப்புறம் (சீவக.76) என்புழிப்போல.

    2பதிற். 85 : 13.





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

ஆசிரியர் கபிலர் பாடிய

ஏழாம் பத்து

பதிகம்
 

மடியா வுள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த
நெடுநுண் கேள்வி யந்துவற் கொருதந்தை
ஈன்றமகள் பொறையன் பெருந்தேவி யீன்றமகன்
நாடுபதி படுத்து நண்ணா ரோட்டி
 
5வெருவரு தானைகொடு செருப்பல கடந்து
ஏத்தல் சான்ற விடனுடை வேள்வி
ஆக்கிய பொழுதி னறத்துறை போகி
மாய வண்ணனை மனனுறப் பெற்றவர்
கோத்திர நெல்லி னொகந்தூ ரீத்துப்
 
10புரோசு மயக்கி
மல்ல லுள்ளமொடு மாசற விளங்கிய
செல்வக் கடுங்கோ வாழி யாதனைக்

 

கபிலர்     பாடினார் பத்துப்பாட்டு. அவைதாம், புலாஅம் பாசறை,
வரைபோலிஞ்சி,     அருவி     யாம்பல்,    உரைசால்    வேள்வி,
நாண்மகிழிருக்கை,  புதல்சூழ்  பறவை  ; வெண்போழ்க் கண்ணி, ஏம
வாழ்க்கை,  மண்கெழு  ஞாலம்,  பறைக்குர  லருவி ; இவை பாட்டின்
பதிகம்.

பாடிப்பெற்ற   பரிசில் ; சிறுபுறமென நூறாயிரங் காணங் கொடுத்து
நன்றா  வென்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற்கண்ட நாடெல்லாம்
காட்டிக் கொடுத்தான்  அக்  கோ  செல்வக்  கடுங்கோ  வாழியாதன்
இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.


 மேல்மூலம்