எட்டாம்
பத்து பதிகம்
|
பொய்யில்
செல்வக் கடுங்கோ வுக்கு
வேளாவிக் கோமான் பதுமன் றேவியீன்றமகன் கொல்லிக் கூற்றத்து
நீர்கூர் மீமிசைப் பல்வேற் றானை யதிக மானோ | 5
|
டிருபெரு வேந்தரையு முடனிலை வென்று முரசுங் குடையுங் கலனுங்கொண் டுரைசால் சிறப்பி னடுகளம்
வேட்டுத் துகடீர் மகளி ரிரங்கத் துப்பறுத்துத் தகடூ ரெறிந்து நொச்சிதந் தெய்திய
| 10
| அருந்திற
லொள்ளிசைப் பெருஞ்சேர லிரும்பொறையை |
1மறுவில்
வாய்மொழி யரிசில்கிழார் பாடினார் பத்துப்பாட்டு.
அவைதாம்:
குறுந்தாண்ஞாயில், உருத்தெழு வெள்ளம்,
நிறந்திகழ் பாசிழை! நலம்பெறுதிருமணி! தீஞ்சேற்றியாணர்,
மாசிதறிருக்கை வென்றாடுதுணங்கை, பிறழநோக்கியவர்,
நிறம்படுகுருதி! புண்ணுடை யெறுழ்த் தோள். இவை பாட்டின்
பதிகம்.
பாடிப்பெற்ற
பரிசில்: தானும் 2கோயிலாளும்
புறம்போந்து
நின்று கோயிலுள்ள வெல்லாம் கொண்மினென்று காணம் ஒன்பது
நூறாயிரத்தோடு 3அரசுகட்டிற் கொடுப்ப அவர் யான் இரப்ப
இதனை ஆள்கவென்று அமைச்சுப் பூண்டார்.
4தகடூரெறிந்த
பெருஞ்சேரலிரும்பொறை பதினேழியாண்டு
வீற்றிருந்தான்.
(கு
- ரை) பொய்யில் செல்வம் - இரவலர்க்குப்
பொய்த்தலறியாத செல்வத்தையுடைய.
3.
கொல்லிமலையைச் சூழ்ந்த மலைகளையுடைய நாட்டினது
நீர்மிக்க மலையின் உச்சியில்.
4.
பல வேற்படைகளையுடைய அதிகமானென்னும்
தலைவனோடு; “உரவுச்சினங் கனலு மொளிதிகழ் நெடுவேல்,
அரவக்கடற் றானை யதிகனும்” (சிறுபாண்.
102 - 3). 5. சோழன்,
பாண்டியன் என்னும் இரண்டு பெரிய அரசர்களையும் சேர வென்று.
6.
முரசையும், குடையையும், கீரிடத்தையும் கைக்கொண்டு;
“அரைசுபட வமருழக்கி, உரைசெல முரசுவௌவி” (புறநா.
26 : 6-7)
7.
புகழ் மிக்க சிறப்பினையுடைய அட்ட களத்தில்
வேள்வியைச் செய்து; “புலவுக்களம் பொலிய வேட்டோய்”
(புறநா. 372 : 12)
8.
குற்றம் நீங்கிய அதிகமானுடைய உரிமை மகளிர்
இரங்கும்படி வன்மையைக் கெடுத்து. 9. தகடூரை அழித்து அதன்
மதிலைக் கைக் கொண்ட; தகடூரை அழித்தது: பதிற்.
78 : 9.
1மறு
இல் வாய்மொழி - குற்றமில்லாத உண்மையான
மொழியையுடைய.
2கோயிலாள்
- பெருஞ்சேரலிரும் பொறையின் பெருந்தேவி.
3அரசு
கட்டில் - சிங்காதனம்.
4புறநா.
50, கருத்து. |