| அசும்பு மருவி யருவிடர்ப் பரந்த பசும்பூட் சேஎய்நின் குன்றநன் குடைத்து; கண்ணொளிர் திகழட ரிடுசுடர் படர்கொடி மின்னுப்போல் | 55 | ஒண்ணகை தகைவகை நெறிபெற விடையிடை யிழைத்தியாத்த செண்ணிகைக் கோதை கதுப்போ டியல மணிமரு டேன்மகிழ் தட்ப வொல்கிப் பிணிநெகிழப் பைந்துகி னோக்கஞ் சிவப்பூரப் பூங்கொடி போல நுடங்குவா ளாங்குத்தன் | 60 | சீர்தகு கேள்வ னுருட்டுந் துடிச்சீராற் கோடணிந்த முத்தார மொல்க வொசிபவளேர் ஆடை யசைய வணியசையத் தானசையும் வாடை யுளர்கொம்பர் போன்ம்; வாளி புரள்பவை போலுந் துடிச்சீர்க்குத் | 65 | தோளூழ் பெயர்ப்பவள் கண்; மாறம ரட்டவை மறவேல் பெயர்ப்பவை |
52-3. இடையறாது ஒழுகும் அருவி அரிய விடரின்கண்ணே பரந்த நின்குன்றம் உடைத்து. 47 - 53. பலவகை நறுநாற்றமுடைமை கூறினவாறு. 54 - 6. இடுசுடர் பரந்த கொடிமின்னுப்போற் கண்ணிற்கு ஒளிர்ந்த திகழாநின்ற அடராலே ஒண்... .........அழகும் நெறிப்பும் இடையிடை பெறச்செய்து யாத்த தொழிலையுடைய. மின்னுப்போற் கோதையென இயையும்............... 54. ஒளிர்திகழ் : வினைத்தொகையடுக்கு. 56. அக்கோதை கதுப்போடசைய. 57 - 8. மாணிக்கத்தை யொக்கச்சிவந்த.....கள்ளை நுகர்ந்த மகிழ்ச்சி தடுப்பப் பசுமையையுடைய துகிலுடை நெகிழ. 57-63. கள்ளுணர்.........ராக்க நுடங்குவாளாய்த் துடிச்சீரின் கண்ணே முலைக்கண் அணிந்த முத்தாரமசைய ஆடுவாளது அழகு வாடையாலுளரப்பட்டு ஆடையசையவும் அணியசையவும் அசையுங்கொம்பர் உண்டாயின் அதனழகையொக்கும். 59. ஆங்கு : அசை. 64 - 5. சீர்க்கு இசையத் தோளைப் பெயர்ப்பவள் கண் அம்பு புடை பெயர்வன போலும். என்று இவ்வாற்றான் மலைச்சிறப்புக் கூறி மேல் வாழ்த்தி முடிக்கின்றார்:- 66. மாற்றாரை அமரின்கட்கொன்ற படையை. |