பதினொராம் பாடல்
-----------
வையை
பொருட் சுருக்கம்
1-30: கோள்கள் மழைபெய்தற்குரிய நிலையிலே நின்றன;
ஆதலின் கார்காலத்தே சையமலைக்கண் மழைபெய்ய,
வையையாற்றின்கண் வெள்ளம் பெருகிற்று. அவ் வெள்ளம்
மலையிலுள்ள சுரபுன்னை முதலிய மரங்களைத் திருமருதந்துறையின்
கண்ணே தந்தது. ஆகலின், அத் துறை மலர் மண்டபம் போன்றும்,
வையைமகளின் ஆடைபோன்றும், தேன்பருகும் நில மகளின்
மிடறுபோன்றும் திகழ்ந்தது.
31-40: வளர்பருவத்தினையுடைய திங்களின் ஒளி எங்கும்
பரந்தாற் போன்று வையையாறு யாண்டும் தன் நீரைப் பரப்பி உலகிற்குப்
பயன் தந்தது; அது தேய்பருவத்துத் திங்கள் போன்று சில சமயங்களில்
வற்றினாலும், அமாவாசையிற் போல முழுதும் குறைதல் ஒருபொழுதும்
இல்லை; 'வையையே! நீ பெருகிய நாளில் இவ்வுலகம் புதுவருவாயைப்
பெறுமாறு போல வற்றின நாளினும் வருவாயைப் பெறும்பொருட்டு
இவ் வெள்ளம் சிறிது தணிந்து செல்வாயாக.'
41-49: "வையையே! களவொழுக்கம் மேற்கொண்ட மகளிர்
சிறந்த
அக வொழுக்கத்தைவிட்டுத் தாழ்ந்த கற்பொழுக்கத்தை
மேற்கொண்டாற்போல, நீ நின் பிறப்பகமாகிய மலையைக் கைவிட்டுக்
கடலாகிய நின் தலைவன் இல்லத்திற்குத் தனியே செல்லுதல் தகாது.
ஆதலின், ஆண்டுச் செல்லற்க" என்று கண்டோர் கூறாநிற்ப,
வையையாறு வந்தது. தலைவியைக் கைக்கொண்டு செல்லும்பொழுது
அத் தலைவியின் சுற்றத்தார் சுரத்திடைச்சென்று மறித்துப்
பொருதாற்போன்று மதுரையிலுள்ளோர் அதன் போக்கினை இடையே
தடைசெய்து மறித்தமையால் அது உட்புகுந்து நீராடுதற்கு உரியதாயிற்று.
50-61: அங்ஙனம் நீராடுவாருள் சிலர் நெட்டியாலாகிய
வாளைச்
சுழற்றுவர்; அதனாலாகிய ஈட்டியை ஏந்துவர்; சிலர் தேரில் ஏறுவர்;
சிலர் குதிரைகளையும் யானைகளையும் ஏறி அவற்றை நீரிற் செலுத்தி
உழக்குவர்; மூங்கிற்கோலால் நீரைத் தெறிப்பாரைச் சிலர் அரக்குநீர்
வட்டிலால் எறிவர்;
ப.--12 |
|
|
|